6024. | 'மாண்டனள்அவள்; "இவள் மாண்ட வார்த்தையை மீண்டு அவர்க்குஉரைத்தலின், விளிதல் நன்று" எனா, பூண்டது ஓர் துயர்கொடு பொன்றினார்கொலோ ? தேண்டினர்,இன்னமும் திரிகின்றார்கொலோ ? |
அவள் மாண்டனள்- (அதுவன்றி) அச்சீதை இறந்து விட்டாள்; இவள் மாண்ட வார்த்தையை மீண்டு அவர்க்கு உரைத்தலின் - 'இந்த சீதா பிராட்டி இறந்த செய்தியைத் திரும்பிச் சென்று அந்த இராமபிரான் முதலியவர்களுக்குச் சொல்லுவதிலும்; விளிதல் நன்று எனா - நாம் இறந்து போதலே நல்லது' என்று எண்ணி; பூண்டது ஓர் துயர் கொடு பொன்றினார் கொலோ? - மேற்கொண்டதொரு துன்பத்தினால் (அவ்வனுமன் முதலானோர்) இறந்தார்களோ ?; இன்னமும் தேண்டினர் திரிகின்றார்களோ ? - (அன்றி) இன்னும், தேடினவர்களாய் வேறுபல இடங்களிலும் அலைகின்றார்களோ ?. இராமபிரான்ஐயப்பாடு, மேலும் நீளுகின்றது. (18) |