6030.

ஆங்கு அவன்செய்கையே அளவை ஆம் எனா,
ஓங்கியஉணர்வினால், விளைந்தது உன்னினான்;
வீங்கின தோள்;மலர்க் கண்கள் விம்மின;
நீங்கியது அருந்துயர்; காதல் நீண்டதே.

     ஆங்கு அவன்செய்கையே - (இராமபிரான்)அவ்விடத்தில் அனுமன்
செய்த குறிப்பான செயலே; அளவை ஆம் எனா - பிராட்டியின்
நன்னிலையை அறிந்து கொள்வதற்கு அளவு கருவியாகும் என்று; ஓங்கிய
உணர்வினால் விளைந்தது உன்னினான் -
சிறந்த (தனது குறிப்பறியவல்ல)
அறிவினால் அங்கு
 நடந்த செய்திகளைநுட்பமாய் அறிந்து கொண்டான்;
தோள் வீங்கின -
அந்த மகிழ்ச்சியினால், பெருமானது தோள்கள் பூரித்தன;
மலர்க்கண்கள் விம்மின -  தாமரை  மலர் போன்ற கண்கள் ஆனந்த நீர்
பெருகப் பெற்றன;அருந்துயர் நீங்கியது - அவனது நீங்குதற்கு அருமையான
துன்பமும்நீங்கிற்று; காதல் நீண்டது - பிராட்டிபால் கொண்ட அன்பும்
வளர்வதாயிற்று.                                             (24)