6050.

'அன்னவர்க்கு, அடியனேன், நிற் பிரிந்த பின்
                            அடுத்த எல்லாம்
சொல் முறை அறியச் சொல்லி, "தோகை ! நீ
                            இருந்த சூழல்

இன்னது என்றுஅறிகிலாமே, இத்தனை தாழ்த்தது"
                          என்றே,
மன்ன ! நின்வருத்தப்பாடும் உணர்த்தினென்;
                          உயிர்ப்பு வந்தாள்.

     மன்ன ! -தலைவனே!; அடியனேன் நின் பிரிந்தபின் அடுத்த
எல்லாம் அன்னவர்க்கு சொல்முறை அறிய சொல்லி -
அடியவனாகிய
நான் உன்னைப் பிரிந்த பிறகு நேர்ந்த செய்திகளை எல்லாம் பிராட்டியார்க்குச்
சொல்லும் முறைமையால் அறியும்படிச் சொல்லி; தோகை நீ இருந்த சூழல்
இன்னது என்று அறிகிலாமே -
மயில் போன்றவளே ! நீ இருந்த இடம்
இன்ன இடத்தது என்று தெரியாமையினாலேயே; இத்தனை தாழ்த்தது என்று
-
இத்தனை காலம் நீட்டித்தது என்றும் சொல்லி; நின் வருத்தப்பாடும்
உணர்த்தினென் -
(பிராட்டியைப் பிரிந்ததனால்) நீ வருத்தப்படும்
தன்மையையும் தெரியச் சொன்னேன்; உயிர்ப்பு வந்தாள் - (அது கேட்டு)
மூச்சு விடுதல் உற்றாள்.

     பிராட்டியைஇராமபிரான் அதுவரை வந்து காணாமைக்குக் காரணம்
கூறப்பட்டது.                                              (44)