|
சித்திகளுடன், புத்த ஞாயிறு தோன்றும்காறும் - புத்தனாகிய ஞாயிறு உதிக்குமளவும்,
செத்தும் பிறந்தும் செம்பொருள் காவா- இறந்தும் பிறந்தும் அறத்தினைக்
காத்து, இத் தலம் நீங்கேன் இளங்கொடி யானும் - இந் நகரந்தை நீங்கேன்
யான் இளங்கொடியே, தாயரும் நீயும் தவறின்றாக - நீயும் நின் அன்னையரும்
தவறின்றி வாழ்வீராக வாய்வதாக நின் மனப்பாட்டு அறம் என - நின் மனத்தின்கட்
டோன்றிய அறம் வாய்ப்புடைத்தாக என்று, ஆங்கவன் உரைத்தலும் - அறவண முனிவன்
கூறுதலும் ;
சார்பிற்றோற்றம்-பேதைமை, செய்கை, உணர்வு,
அருவுரு, வாயில், ஊறு, நுகர்வு, வேட்கை, பற்று, பவம், தோற்றம், வினைப்பயன்என்னும்
பன்னிரண்டுமாம்; இவை பேதைமை சார்பாகச் செய்கையும் செய்கை சார்பாக உணர்வும்
இங்ஙனம் ஒன்றை யொன்று சார்ந்து தோன்றுதலின் ''சார்பிற் றோற்றம்'' எனப்பட்டன;
இவற்றினியல்பு இந் நூலின் இறுதிக் காதையால் விளக்கமாம். இருத்தி-சித்தி;
அணிமா முதலியன. தவம் முதலியவற்றை உரைத்து, புத்தஞாயிறு தோன்றுங்காறும்
யானும் இத்தலம் நீங்கேன், தாயரும் நீயும் தவறின்றாக, அறம் வாய்வதாக
என அவன் உரைத்தலுமென்க.
172--9. அவன்
மொழி பிழையாய் -அவன் கூறிய சொல்லைத் தப்பாயாய், பாங்கியல் நல்லறம்
பலவும் செய்தபின் - இயற்றுதற்குரிய நல்லறங்கள் பலவற்றையும் செய்த பின்னர்,
கச்சி முற்றத்து நின் உயிர் கடைகொள-காஞ்சிமாநகரின்கண் நினது உயிரானது
முடிவெய்த, உத்தர மகதத்து உறுபிறப்பு எல்லாம் - வட மகத நாட்டில் நீ அடையும்
பிறப்புக்களனைத்தும், ஆண்பிறப்பாகி அருளறம் ஒழியாய்- ஆண்பிறப்பாகத்
தோன்றி அருளறம் நீங்காயாய், மாண்பொடு தோன்றி மயக்கம் களைந்து - மாட்சியுடன்
தோன்றி மக்களின் மயக்கங்களை நீக்கி, பிறர்க்கு அறம் அருளும் பெரியோன்
தனக்கு - பிறருக்கு அறங்கூறும் புத்தனுக்கு, தலைச் சாவகனாய்ச் சார்பு அறுத்து
உய்தி-முதன் மாணாக்கனாய்ப் பற்றுக்களை யறுத்து நிருவாணமடைவாய்;
''உத்தர மகதத் துறபிறப் பெல்லாம்'' என்றமையால்
ஆண்டுப் பல பிறப்புண்டாமென்பது உடம்பொடு புணர்த்தலாற் பெற்றாம். ஆகி
ஒழியாய் தோன்றிக் களைந்து சாவகனாய் அறுத்து உய்தி என்க ; தோன்றிக்
களைந்து அருளும் பெரியோன் எனலுமாம். சாவகன் ஸ்ரீவாகன் என்பதன் சிதைவு; கேட்பவன்
என்றபடி.
180--90. இன்னுங்
கேட்டியோ நன்னுதல் மடந்தை-நல்ல நெற்றியையுடைய மடந்தையே இன்னும் கேட்பாயாக.
ஊங்கண் ஓங்கிய உரவோன்தன்னை - நின் குலத்தில் முன்னர் அறத்தான் மேம்
பாடுற்றிருந்த அறிவுடையோன் ஒருவனை, வாங்குதிரை எடுத்த மணிமேகலா தெய்வம்-கடலின்க
ணிருந்து எடுத்துக் காப்பாற்றிய
|