முகப்பு |
தொடக்கம் |
கடவுள் வாழ்த்து
|
|
1. |
- மூவா முதலா உலகம் ஒரு மூன்றும் ஏத்தத்
-
தாவாத இன்பம் தலை ஆயது தன்னின் எய்தி
-
ஓவாது நின்ற குணத்து ஒள் நிதிச் செல்வன் என்ப
-
தேவாதி தேவன் அவன் சேவடி சேர்தும் அன்றே
|
|
|
|
|
2. |
- செம்பொன் வரை மேல் பசும் பொன் எழுத்து இட்டதே போல்
-
அம் பொன் பிதிர்வின் மறு ஆயிரத்து எட்டு அணிந்து
-
வெம்பும் சுடரின் சுடரும் திருமூர்த்தி விண்ணோர்
-
அம் பொன் முடி மேல் அடித்தாமரை சென்னி வைப்பாம்
|
|
|
|
|
3. |
- பல் மாண் குணங்கட்கு இடனாய்ப் பகை நண்பொடு இல்லான்
-
தொல் மாண்பு அமைந்த புனை நல்லறம் துன்னி நின்ற
-
சொல் மாண்பு அமைந்த குழுவின் சரண் சென்று தொக்க
-
நல் மாண்பு பெற்றே ன் இது நாட்டுதல் மாண்பு பெற்றேன்
|
|
|
|
|
4. |
- கற்பால் உமிழ்ந்த மணியும் கழுவாது விட்டால்
-
நற்பால் அழியும் நகை வெண் மதி போல் நிறைந்த
-
சொற்பால் உமிழ்ந்த மறுவும் மதியால் கழூஉவிப்
-
பொற்பா இழைத்துக் கொளல்பாலர் புலமை மிக்கார்
|
|
|
|
|
5. |
- முந்நீர்ப் பிறந்த பவழத்தொடு சங்கும் முத்தும்
-
அந் நீர் உவர்க்கும் எனின் யார் அவை நீக்குகிற்பார்
-
இந் நீர என் சொல் பழுது ஆயினும் கொள்ப அன்றே
-
பொய்ந் நீர அல்லாப் பொருளால் விண் புகுதும் என்பார்
|
|
|
|
|