காந்தருவ தத்தையார் இலம்பகம்
 
493.
  • இங்கு இவர்கள் இவ்வாறு இருந்து இனிது வாழச்
  • சங்கு தரு நீள் நிதியம் சால உடை நாய்கன்
  • பொங்கு திரை மீது பொரு மால் களிறு போன்றோர்
  • வங்கமொடு போகி நிதி வந்து தரல் உற்றான்
   
494.
  • மின் ஒழுகு சாயல் மிகு பூண் பதுமை கேள்வன்
  • கொன் ஒழுகு வேல் யவ தத்தன் குளிர் தூங்கும்
  • தன் வழிய காளை சீதத்தன் அவன் தன் போல்
  • பொன் ஒழுகு குன்றில் உறை போர்ப் புலியொடு ஒப்பான்
   
495.
  • இம்மியன நுண் பொருள்கள் ஈட்டி நிதி ஆக்கிக்
  • கம்மியரும் ஊர்வர் களிறு ஓடை நுதல் சூட்டி
  • அம்மி மிதந்து ஆழ்ந்து சுரை வீழ்ந்தது அறம் சால்க என்று
  • உம்மை வினை நொந்து புலந்து ஊடல் உணர்வு அன்றே
   
496.
  • உள்ளம் உடையான் முயற்சி செய்ய ஒரு நாளே
  • வெள்ள நிதி வீழும் விளையாதது அதனின் இல்லை
  • தொள்ளை உணர் வின்னவர்கள் சொல்லின் மடிகிற்பின்
  • எள்ளுநர்கட்கு ஏக்கழுத்தம் போல இனிது அன்றே
   
497.
  • செய்க பொருள் யாரும் செறுவாரைச் செறுகிற்கும்
  • எஃகு பிறிது இல்லை இருந்தே உயிரும் உண்ணும்
  • ஐயம் இலை இன்பம் அறனோடு அவையும் ஆக்கும்
  • பொய் இல் பொருளே பொருள் மற்று அல்ல பிற பொருளே
   
498.
  • தூங்குசிறை வாவல் உறை தொல் மரங்கள் என்ன
  • ஓங்கு குலம் நைய அதனுள் பிறந்த வீரர்
  • தாங்கல் கடன் ஆகும் தலை சாய்க்க வரு தீச் சொல்
  • நீங்கல் மடவார்கள் கடன் என்று எழுந்து போந்தான்
   
499.
  • மோது படுபண்டம் முனியாது பெரிது ஏற்றி
  • மாதுபடு நோக்கினவர் அவர் வாள் கண் வடு உற்ற
  • தாது படு தார் கெழிய தங்குவரை மார்பன்
  • கோது படல் இல்ல குறிக் கொண்டு எழுந்து போந்தான்
   
500.
  • வானம் உற நீண்ட புகழ் மாரி மழை வள்ளல்
  • தானம் என வேண்டுநர்கள் வேண்டுவன நல்கி
  • நானம் மிக நாறு கமழ் குஞ்சியவன் ஏறி
  • ஊனம் எனும் இன்றி இனிது ஓடுக இது என்றான்
   
501.
  • ஆடு கொடி உச்சி அணி கூம்பின் உயர் பாய் மூன்று
  • ஈடுபடச் செய்து இளையர் ஏத்த இமிழ் முந்நீர்க்
  • கோடு பறை ஆர்ப்பக் கொழுந் தாள் பவழம் கொல்லா
  • ஓடு களிறு ஒப்ப இனிது ஓடியதை அன்றே
   
502.
  • திரைகள் தரும் சங்கு கலம் தாக்கித் திரள் முத்தம்
  • கரை கடலுள் காலக் கணை பின் ஒழிய முந்நீர்
  • வரை கிடந்து கீண்டது எனக் கீறி வளர் தீவின்
  • நிரை இடறிப் பாய்ந்து இரிய ஏகியது மாதோ
   
503.
  • மின்னும் மிளிர் பூங் கொடியும்
  • மென் மலரும் ஒப்பார்
  • அன்னமொடும் தோகை நடை சாயல்
  • அமிர்து அன்னார்
  • துன்னி இனிது ஆக உறை
  • துப்புரவின் மிக்க
  • நன்மை உடை நல் பொன் விளை
  • தீவம் அடைந்தது அஃதே
   
504.
  • தீவினுள் இழிந்து தேந்தார்ச்
  • செம்மலும் திருமுத்தாரம்
  • கோவினைக் குறிப்பில் கண்டு
  • கொடுத்து அருள் சுமந்து செம்பொன்
  • பூவின் உள்ளவளை அன்ன
  • பொங்கு இள முலையினார்தம்
  • நாவினுள் அமிர்தம் கேட்டு
  • நாடகம் நயந்து சின்னாள்
   
505.
  • புணர்ந்தவர் பிரிதல் ஆற்றாப்
  • போகம் ஈன்று அளிக்கும் சாயல்
  • அணங்கினுக்கு அணங்கு அனாரோடு
  • அறுமதி கழிந்த பின்றைக்
  • கொணர்ந்தன பண்டம் விற்ற
  • கொழுநிதிக் குப்பை எல்லாம்
  • உணர்ந்து தன் மதலை ஏற்றி
  • ஒருப்படுத்து ஊர்க்கு மீள்வான்
   
506.
  • அரசனைக் கண்டு கண்ணுற்றவர்களை விடுத்து நல் நாள்
  • இரைவதி வியாழ ஓரை இரும் சிலை முளைப்ப ஏறிக்
  • கரை கடல் அழுவம் நீந்திக் காற்றினும் கடுகி ஐஞ்ஞாறு
  • உரை உடைக் காதம் ஓடி யோசனை எல்லை சார்ந்தே
   
507.
  • களித் தலை மயங்கி இப்பால்
  • இருத்தலும் கலந்து ஓர் காற்றில்
  • துளித் தலை முகில்கள் ஈண்டித்
  • தூங்கு இருள் மயங்கி மான்று
  • விளிப்பது போல மின்னி
  • வெடிபட முழங்கிக் கூற்றும்
  • ஒளித்து உலைந்து ஒழிய வெம்பி
  • உரறி நின்று இடிப்ப நாய்கன்
   
508.
  • எண் திசை வளியும் ஈண்டி
  • எதிர் எதிர் கலாவிப் பவ்வம்
  • கொண்டு மேல் எழுவது ஒப்பக்
  • குளிறி நின்று அதிர்ந்து மேகம்
  • தண் துளி பளிக்குக் கோல் போல்
  • தாரையாய்ச் சொரிந்து தெய்வம்
  • கொண்டது ஓர் செற்றம் போலும்
  • குலுங்கன்மின் என்று கூறும்
   
509.
  • இடுக்கண் வந்து உற்ற காலை
  • எரிகின்ற விளக்குப் போல
  • நடுக்கம் ஒன்றானும் இன்றி
  • நகுக தாம் நக்க போழ்து அவ்
  • இடுக்கணை அரியும் எஃகாம்
  • இருந்து அழுது யாவர் உய்ந்தார்
  • வடுப்படுத்து என்னை ஆண்மை
  • வருப வந்து உறுங்கள் அன்றே
   
510.
  • ஆடகச் செம் பொன் கிண்ணத்து
  • ஏந்திய அலங்கல் தெண்ணீர்
  • கூடகம் கொண்ட வாழ் நாள்
  • உலந்ததேல் கொல்லும் பவ்வத்து
  • ஊடகம் புக்கு முந்நீர்
  • அழுந்தினும் உய்வர் நல்லார்
  • பாடகம் போலச் சூழ்ந்த
  • பழவினைப் பயத்தின் என்றான்
   
511.
  • வினை அது விளைவின் வந்த
  • வீவு அரும் துன்பம் முன்னீர்க்
  • கனை கடல் அழுவம் நீந்திக்
  • கண் கனிந்து இரங்கல் வேண்டா
  • நனை மலர்ப் பிண்டி நாதன்
  • நலம் கிளர் பாத மூலம்
  • நினையுமின் நீவிர் எல்லாம்
  • நீங்குமின் அச்சம் என்றான்
   
512.
  • பருமித்த களிறு அனானும்
  • பை எனக் கவிழ்ந்து நிற்பக்
  • குருமித்து மதலை பொங்கிக்
  • கூம்பு இறப் பாய்ந்து வல்லே
  • நிருமித்த வகையின் ஓடி
  • நீர் நிறைந்து ஆழ்ந்த போதில்
  • உரும் இடித்து இட்டது ஒப்ப
  • உள்ளவர் ஒருங்கு மாய்ந்தார்
   
513.
  • ஓம்பிப் படைத்த பொருளும் உறு காதலாரும்
  • வேம்பு உற்ற முந்நீர் விழுங்க விரையாது நின்றான்
  • கூம்பு இற்ற துண்டம் தழுவிக் கிடந்தான் கொழித்துத்
  • தேம் பெற்ற பைந்தார் அவனைத் திரை உய்த்தது அன்றே
   
514.
  • நாவாய் இழந்து நடு ஆரும் இல் யாமம் நீந்திப்
  • போவாய் தமியே பொருளைப் பொருள் என்று கொண்டாய்
  • வீவாய் என முன் படையாய் படைத்தாய் வினை என்
  • பாவாய் எனப் போய்ப் படு வெண் மணல் திட்டை சேர்ந்தான்
   
515.
  • பொரி அரை ஞாழலும் புன்னையும் பூத்து
  • வரி தரு வண்டொடு தேன் இனம் ஆர்க்கும்
  • திரு விரி பூம் பொழில் செவ்வனம் சேர்ந்தாங்கு
  • அருவரை மார்பன் அவலித்து இருந்தான்
   
516.
  • ஓடும் திரைகள் உதைப்ப உருண்டு உருண்டு
  • ஆடும் அலவனை அன்னம் அருள் செய
  • நீடிய நெய்தல் அம் கானல் நெடுந் தகை
  • வாடி இருந்தான் வரும்கலம் நோக்கா
   
517.
  • ஆளிய மொய்ம்பன் இரும் தவப் பூம் பொழில்
  • தாள் வலியான் ஓர் மகனைத் தலைப்பட்டுக்
  • கேளிர் எனக்கு உற்ற கேண்மின் நீர் எனத்
  • தோள் வலி மிக்கான் தொடர்ந்து உரைக்கின்றான்
   
518.
  • கரும் கடல் போயிற்றும் காற்றில் கவிழ்ந்து
  • திருந்திய தன் பொருள் தீது உற்றவாறும்
  • அரும் புணை சார்வா அவண் உய்ந்தவாறும்
  • இருந்த அவற்கு எல்லாம் எடுத்து மொழிந்தான்
   
519.
  • மானும் மரனும் இரங்க மத வலி
  • தான் உற்ற துன்பம் தரனுக்கு உரைத்த பின்
  • தேனும் அமிழ்தும் திளைத்து ஆங்கு இனியன
  • ஊனம் இல் கட்டுரைக்கு உள்ளம் குளிர்ந்தான்
   
520.
  • விஞ்சைகள் வல்லேன் விளிந்த நின் தோழரொடு
  • எஞ்சிய வான் பொருள் எல்லாம் இமைப்பினுள்
  • வஞ்சம் ஒன்று இன்றி மறித்தே தருகுவன்
  • நெஞ்சில் குழைந்து நினையன்மின் என்றான்
   
521.
  • உரை அகம் கொள்ள உணர்த்தினன் ஆகி
  • வரை அகம் ஏற வலிமின் என்னா
  • விரை செலல் வெம் பரி மேழகம் ஏற்றிக்
  • குரை கழல் மைந்தனைக் கொண்டு பறந்தான்
   
522.
  • விசும்பு இவர் மேகம் விரைவினர் போழ்ந்து
  • பசும் புயல் தண் துளி பக்கம் நனைப்ப
  • நயந்தனர் போகி நறு மலர்ச் சோலை
  • அசும்பு இவர் சாரல் அருவரை சார்ந்தார்
   
523.
  • கண்டால் இனியன காண்டற்கு அரியன
  • தண் தாமரை அவள் தாழும் தகையன
  • கொண்டான் கொழுங் கனி கோட்டு இடைத் தூங்குவ
  • உண்டான் அமிழ்து ஒத்து உடம்பு குளிர்ந்தான்
   
524.
  • மழை தவழ் சோலை மலை மிசை நீண்ட
  • குழை தவழ் குங்குமம் கோழ் அரை நாகம்
  • தழை தவழ் சந்தனச் சோலையின் நோக்கி
  • இழை தவழ் மார்பன் இனிதின் உவந்தான்
   
525.
  • கோதை அருவிக் குளிர் வரை மேல் நின்று
  • காதம் கடந்த பின் கன்னிக் கொடிமதில்
  • நாதன் உறைவது ஓர் நல் நகர் உண்டு அங்குப்
  • போதும் எழுக எனப் போயினர் சார்ந்தார்
   
526.
  • மேகமே மிடைந்து தாழ இருள்
  • கொண்ட வெள்ளிக் குன்றம்
  • மாகத்து விளங்கித் தோன்றும்
  • வனப்பு நாம் வகுக்கல் உற்றால்
  • நாகம் தான் கரியது ஒன்று கீழ்
  • நின்று நடுங்கக் கவ்விப்
  • பாகமே விழுங்கப் பட்ட
  • பால் மதி போன்றது அன்றே
   
527.
  • துளங்கு பொன் நகரின் தன்மை
  • சொல்லலாம் சிறிது ஓர் தேவன்
  • விளங்கு பொன் உலகத்து உள்ள
  • துப்புரவு இடங்கள் எல்லாம்
  • அளந்து கொண்டு இன்பம் பூரித்து
  • அணி நகர் ஆக்கி மேலால்
  • இளங் கதிரப் பருதி சூட்டி
  • இயற்றியது என்னல் ஆமே
   
528.
  • பொங்கி ஆயிரம் தாமரை பூத்த போல்
  • செங் கண் ஆயிரம் சேர்ந்தவன் பொன் நகர்
  • கொங்கு தோய் குழலாரொடும் குன்றின் மேல்
  • தங்குகின்றது போல் தகை சான்றதே
   
529.
  • கிடங்கு சூழ் மதில் கேழ் கிளர் பூங் கொடி
  • மடங்கல் நோக்கியர் வாள் முகம் போலும் என்று
  • உடங்கு வெண்மதி உள் குளிரத் தம்
  • குடங்கையால் கொம்மை கொட்டுவ போன்றவே
   
530.
  • திருவ மேகலை தௌளரிக் கிண் கிணி
  • பரவை யாழ் குழல் பண் அமை மென் முழா
  • உருவம் யார் உடையார் என்று ஒளி நகர்
  • அரவம் வாய் திறந்து ஆர்ப்பது போன்றதே
   
531.
  • செம் பொன் மாடங்கள் சென்னி அழுத்திய
  • அம் பொன் திண் நிலை ஆய் மணித் தூவிகள்
  • வெம்பு நீள் சுடர் வீழ்ந்து சுடுதலின்
  • பைம் பொன் கொப்புள் பரந்தன போன்றவே
   
532.
  • உருளி மாமதி ஓட்டு ஒழிதள்து ஓங்கிய
  • வெருளி மாடங்கள் மேல் துயில் எய்தலின்
  • மருளி மான்பிணை நோக்கின் நல்லார் முகத்து
  • அருளினால் அழல் ஆற்றுவ போன்றவே
   
533.
  • அசும்பு பொன் வரை ஆய் மணிப் பூண்களும்
  • பசும் பொன் மாலையும் பட்டுழிப் பட்டவை
  • நயந்து கொள்பவர் இன்மையின் நல் நகர்
  • விசும்பு பூத்தது போன்றன வீதியே
   
534.
  • தேன்கண் இன் அகில் தேனொடு கூட்டு அமைத்து
  • ஆக்கப் பட்ட அளவில் கொழும் புகை
  • வீக்கி மாடம் திறந்திட மெல்லவே
  • ஊக்கி வாய் விட்டு உயிர்ப்பன போன்றவே
   
535.
  • தப்பு இல் வாய் மொழித் தானவர் வைகிய
  • ஒப்பு இல் மா நகர் ஒண்மை மற்று யாது எனில்
  • கப்பத்து இந்திரன் காமுறும் மாமணிச்
  • செப்பு வாய் திறந்த அன்னது ஓர் செம்மற்றே
   
536.
  • நல் நகர் நோக்கி நாய்கன்
  • நாகம் கொல் புகுந்தது என்னப்
  • பொன்னகர் பொலிய புக்குப்
  • பொங்குமா மழைகள் தங்கும்
  • மின் அவிர் செம் பொன் மாடத்து
  • இருவரும் இழிந்து புக்குப்
  • பின் அவன் விருந்து பேணிப்
  • பேசினன் பிறங்கு தாரான்
   
537.
  • மாடியம் தானை மன்னர்
  • மா மணி நாகம் ஆகக்
  • கேடு இல் சீர்க் கலுழன் ஆய
  • கலுழ வேகற்குத் தேவி
  • தோடு அலர் கோதைத் தொல் சீர்த்
  • தார் அணி சுரும்பு உண் கண்ணி
  • ஆடவர் அறிவு போழும்
  • அணி முலை அணங்கின் அன்னாள்
   
538.
  • விண் அகம் வணங்க வெண் கோட்டு
  • இளம் பிறை முளைத்ததே போல்
  • பண் அகத்து இனிய சொல்லாள்
  • பாவையைப் பயந்த ஞான்றே
  • எண் இடம் இன்றி மன்னர்
  • இம் மலை இறை கொண்டு ஈண்டி
  • அண்ணல் அம் களிற்றின் உச்சி
  • அருங் கலம் வெறுக்கை ஈந்தார்
   
539.
  • மந்திரத்து அரசன் வல்லே
  • நிமித்திகன் வருக என்றாற்கு
  • அந்தரத்து ஓடு கோளின்
  • சாதகம் அவனும் செய்தான்
  • இந்திரத் திருவில் ஏய்ப்பக்
  • குலவிய புருவத்தாட்கு
  • வந்து அடை பான்மை மண் மேல்
  • இராசமா புரத்து என்றான்
   
540.
  • அவன் உரை தெளிந்து வேந்தன்
  • ஆசையுள் அரசர் நிற்பக்
  • கவனம் கொள் புரவிக் கொட்பின்
  • காதலும் கரந்து வைத்தான்
  • அவன் அதே கருத்திற்று ஆம் கொல்
  • அன்று கொல் அறியல் ஆகாது
  • இவண் அதும் அறிதும் என்று
  • கோயிலுக்கு ஏகினானே
   
541.
  • பால் பரந்து அன்ன பட்டு ஆர்
  • பூ அணை பசும் பொன் கட்டில்
  • கால் பரந்து இருந்த வெம் கண்
  • கதிர் முலை கச்சின் வீக்கி
  • வேல் பரந்து அனைய கண்ணார்
  • வெண் மதிக் கதிர் பெய் கற்றை
  • போல் இவர் கவரி வீச
  • மன்னவன் இருந்த போழ்தின்
   
542.
  • என்வரவு இசைக்க என்ன
  • வாயிலோன் இசைப்ப ஏகி
  • மன்னர் தம் முடிகள் வேந்த
  • வயிரம் போழ்ந்து உழுது சேந்த
  • பொன் அவிர் கழல் கொள் பாதம்
  • பொழி மழைத் தடக்கை கூப்ப
  • இன் உரை முகமன் கூறித்
  • தானத்தில் இருக்க என்றான்
   
543.
  • முதிர் பெயல் மூரி வானம்
  • முழங்கி வாய் விட்டது ஒப்ப
  • அதிர் குரல் முரசம் நாண
  • அமிர்து பெய் மாரி ஏய்ப்பக்
  • கதிர் விரி பூணினாற்குத்
  • தந்தை தாய் தாரம் காதல்
  • மதுர மா மக்கள் சுற்றம் வினவி
  • மற்று இதுவும் சொன்னான்
   
544.
  • இன்றையது அன்று கேண்மை
  • எமர் நுமர் எழுவர் காறும்
  • நின்றது கிழமை நீங்கா
  • வச்சிர யாப்பின் ஊழால்
  • அன்றியும் அறனும் ஒன்றே
  • அரசன் யான் வணிகன் நீயே
  • என்று இரண்டு இல்லை கண்டாய்
  • இது நினது இல்லம் என்றான்
   
545.
  • மந்திர மன்னன் சொல் நீர்
  • மாரியால் வற்றி நின்ற
  • சந்தனம் தளிர்த்ததே போல்
  • சீதத்தன் தளிர்த்து நோக்கி
  • எந்தைக்குத் தந்தை சொன்னான்
  • இன்னணம் என்று கேட்ப
  • முந்தைத் தான் கேட்ட வாறே
  • முழுது எடுத்து இயம்புகின்றான்
   
546.
  • வெள்ளி வேதண்டத்து அம் கண்
  • வீவில் தென் சேடிப் பாலில்
  • கள் அவிழ் கைதை வேலிக்
  • காசு இல் காந்தார நாட்டுப்
  • புள் அணி கிடங்கின் விச்சா
  • லோகமா நகரில் போகா
  • வெள்ளி வேல் கலுழ வேகன்
  • வேதண்ட வேந்தர் வேந்தன்
   
547.
  • சங்கு உடைந்த அனைய வெண்
  • தாமரை மலர்த் தடங்கள் போலும்
  • நம் குடித் தெய்வம் கண்டீர்
  • நமரங்காள் அறிமின் என்னக்
  • கொங்கு உடை முல்லைப் பைம் போது
  • இருவடம் கிடந்த மார்ப
  • இங்கு அடி பிழைப்பது அன்றால்
  • எம் குலம் என்று சொன்னான்
   
548.
  • பெருந் தகைக் குருசில் தோழன்
  • பெருவிலைக் கடகம் முன்கை
  • திருந்துபு வணங்கப் பற்றிச்
  • சென்று தன் உரிமை காட்டப்
  • பொருந்துபு பொற்ப ஓம்பிப்
  • பொன் இழை சுடர நின்ற
  • கருங் கண்ணி திறத்து வேறாக்
  • கட்டுரை பயிற்று நின்றான்
   
549.
  • எரி மணிப் பளிக்கு மாடத்து
  • எழுந்தது ஓர் காமவல்லி
  • அரு மணிக் கொடிகொல் மின்கொல்
  • அமரர் கோன் எழுதி வைத்த
  • ஒரு மணி குயின்ற பாவை
  • ஒன்றுகொல் என்று நாய்கன்
  • திரு மணிக் கொடியை ஓரான்
  • தெருமர மன்னன் சொன்னான்
   
550.
  • தூசு உலாய்க் கிடந்த அல்குல்
  • துப்பு உறழ் தொண்டைச் செவ்வாய்
  • வாச வான் குழலின் மின் போல்
  • வரு முலைச் சாந்து நக்கி
  • ஊசல் பாய்ந்து ஆடிக் காதில்
  • குண்டலம் இலங்க நின்றாள்
  • காசு இல் யாழ்க் கணம் கொள் தெய்வக்
  • காந்தர்வ தத்தை என்பாள்
   
551.
  • விளங்கினாள் உலகம் எல்லாம்
  • வீணையின் வனப்பினாலே
  • அளந்து உணர்வு அரிய நங்கைக்கு
  • அருமணி முகிழ்த்தவே போல்
  • இளம் கதிர் முலையும் ஆகத்து
  • இடம் கொண்டு பரந்த மின்னின்
  • துளங்கு நுண் நுசுப்பும் தோன்றாது
  • உரு அரு என்ன உண்டே
   
552.
  • நின் மகள் இவளை நீயே
  • நின் பதிக் கொண்டு போகி
  • இன் இசை பொருது வெல்வான்
  • யாவனே யானும் ஆக
  • அன்னவற்கு உரியள் என்ன
  • அடிப் பணி செய்வல் என்றான்
  • தன் அமர் தேவி கேட்டுத்
  • தத்தைக்கே தக்கது என்றாள்
   
553.
  • முனிவு அரும் போக பூமிப்
  • போகம் முட்டாது பெற்றும்
  • தனியவர் ஆகி வாழ்தல்
  • சாதுயர் அதனின் இல்லை
  • கனி படு கிளவியார் தம்
  • காதலர் கவானில் துஞ்சின்
  • பனி இரு விசும்பில் தேவர்
  • பான்மையிற்று என்று சொன்னான்
   
554.
  • நூல் படு புலவன் சொன்ன
  • நுண்பொருள் நுழைந்து யானும்
  • வேல் கடல் தானை வேந்தர்
  • வீழ்ந்து இரந்தாலும் நேரேன்
  • சேல் கடை மதர்வை நோக்கின்
  • சில்லரித் தடங் கண் நங்கை
  • பால் படு காலம் வந்தால்
  • பான்மை யார் விலக்குகிற்பார்
   
555.
  • படைப்பு அருங் கற்பினாள் தன்
  • பாவையைப் பரிவு நீக்கிக்
  • கொடைக்கு உரிப்பால எல்லாம்
  • கொடுத்த பின் கூற்றும் உட்கும்
  • விடைப்பு அருந் தானை வேந்தன்
  • வேண்டுவ வெறுப்ப நல்கித்
  • தொடுத்து அலர் கோதை வீணா
  • பதிக்கு இது சொல்லினானே
   
556.
  • உடம்பினொடு உயிரில் பின்னி
  • ஒருவயின் நீங்கல் செல்லா
  • நெடுங் கணும் தோளும் போலும்
  • நேர் இழை அரிவை நீ நின்
  • தடங் கணி தனிமை நீங்கத்
  • தந்தையும் தாயும் ஆகி
  • அடங்கு அலர் அட்ட வேலான்
  • ஆணையிர் ஆமின் என்றான்
   
557.
  • அரு மணி வயிரம் வேய்ந்த
  • அருங் கலப் பேழை ஐந்நூறு
  • எரிமணி செம்பொன் ஆர்ந்த
  • ஈர் ஆயிரம் யவனப் பேழை
  • திருமணி பூணினாற்குச் சினம்
  • தலை மழுங்கல் இன்றிக்
  • குரு மணி முடியின் தேய்த்த
  • தரன் தமர் கொள்க என்றான்
   
558.
  • பல் வினைப் பவளப் பாய் கால்
  • பசுமணி இழிகை வம்பு ஆர்
  • நல் அகில் விம்மு கட்டில்
  • தவிசொடு நிலைக் கண்ணாடி
  • மெல்லிய தூபமுட்டி
  • மேதகு நானச் செப்போடு
  • அல்லவும் கொள்க என்றான்
  • அணங்கு உடை நிணம் கொள் வேலான்
   
559.
  • விளக்கு அழல் உறுத்த போலும்
  • விசி உறு போர்வைத் தீம் தேன்
  • துளக்கு அற ஒழுகி அன்ன
  • துய்யறத் திரண்ட திண்கோல்
  • கொளத்தகு திவவுத் திங்கள்
  • கோள் நிரைத்து அனைய ஆணி
  • அளப்ப அருஞ் சுவை கொள் நல் யாழ்
  • ஆயிரம் அமைக என்றான்
   
560.
  • அரக்கு எறி குவளை வாள் கண்
  • அவ் வளைத் தோளினாளைப்
  • பரப்பு அமை கதல் தாயர் பற்பல்
  • கால் புல்லிக் கொண்டு
  • திருப் புறக் கொடுத்த செம் பொன்
  • தாமரை போன்று கோயில்
  • புரிக் குழல் மடந்தை போகப்
  • புலம்பொடு மடிந்தது அன்றே
   
561.
  • காம்பு பொன் செய்த பிச்சம்
  • கதிர் மணிக் குடையொடு ஏந்தித்
  • தாம் பலர் கவரி வீசக்
  • கிண்கிணி ததும்ப நாகப்
  • பாம்பு பைத்த அனைய அல்குல்
  • பல்கலை மிழற்ற ஏகி
  • ஆம்பல் நாறு அமுதச் செவ்வாய்
  • அரசனைத் தொழுது நின்றாள்
   
562.
  • அடிக் கலம் அரற்ற ஏகி
  • அரும் பெறல் தாதை பாதம்
  • முடிக் கலம் சொரியச் சென்னி
  • இறைஞ்சலும் முரிந்து மின்னுக்
  • கொடிப் பல நுடங்கி ஆங்குத்
  • தோழியர் குழாத்துள் நிற்ப
  • அடுத்தனன் புல்லி வேந்தன்
  • ஆற்றுகிலாது சொன்னான்
   
563.
  • வலம்புரி ஈன்ற முத்தம்
  • மண்மிசை அவர்கட்கு அல்லால்
  • வலம்பரி பயத்தை எய்தாது
  • அனையரே மகளிர் என்ன
  • நலம் புரிந்த அனைய காதல்
  • தேவி தன் நவையை நீங்கக்
  • குலம் புரிந்து அனைய
  • குன்றிற்கு அதிபதி கூறினானே
   
564.
  • இன் சுவை யாழொடு அன்னம்
  • இளம் கிளி மழலை மஞ்ஞை
  • பொன் புனை யூகம் மந்தி
  • பொறி மயிர்ப் புறவம் பொன்னார்
  • மென் புனம் மருளின் நோக்கின்
  • மான் இனம் ஆதி ஆகத்
  • தன் புறம் சூழப் போகித்
  • தளிர் இயல் விமானம் சேர்ந்தாள்
   
565.
  • வெற்றி வேல் மணிமுடிக், கொற்றவன் ஒரு மகள்
  • அற்றம் இல் பெரும் படைச், சுற்றமோடு இயங்கினாள்
   
566.
  • கண் அயல் களிப்பன, அண்ணல் யானை ஆயிரம்
  • விண் அகத்து இயங்கு தேர், எண் அவற்று இரட்டியே
   
567.
  • வில்படை விலக்குவ, பொன்படைப் புரவியும்
  • முன்படக் கிளந்த அவற்றின், நல்புடைய நாற்றியே
   
568.
  • பாறு உடைப் பருதி வேல், வீறு உடை இளையரும்
  • ஆறு இரட்டி ஆயிரர், கூறுதற்கு அரியரே
   
569.
  • மாகம் நீள் விசும்பு இடை, மேகம் நின்று இடித்தலின்
  • நாகம் நின்று அதிர்ந்து அவர்க்கு, ஏகல் ஆவது இல்லையே
   
570.
  • வெம் சின வெகுளியில், குஞ்சரம் முழங்கலின்
  • மஞ்சு தம் வயிறு அழிந்து, அஞ்சி நீர் உகுத்தவே
   
571.
  • வேழம் மும் மதத்தொடு, தாழ் புயல் கலந்து உடன்
  • ஆழ் கடல் அகம் புறம், வீழ் தர விரைந்ததே
   
572.
  • மல்லல் மாக் கடல் இடைக், கல் எனக் கலம் கவிழ்த்து
  • அல்லல் உற்று அழுங்கிய, செல்வன் உற்ற செப்புவாம்
   
573.
  • பால் நிறப் பனி வரை, மேல் நிறம் மிகுத்தன
  • நீல் நிற நிழல் மணி, தான் நிரைத்து அகம் எலாம்
   
574.
  • வஞ்சம் இல் மனத்தினான், நெஞ்சு அகம் புகன்று உக
  • விஞ்சை அம் பெருமகன், வஞ்சம் என்று உணர்த்தினான்
   
575.
  • நங்கை தன் நலத்தினால், மங்குல் வெள்ளி மால்வரை
  • எங்கும் மன்னர் ஈண்டினர், சங்கு விம்மு தானையார்
   
576.
  • ஈர் அலங்கல் ஏந்து வேல், ஆர் அலங்கல் மார்பினான்
  • கார் கலந்த கைக் கணி, சீர் கலந்து செப்பினான்
   
577.
  • மாதர் வாழ்வு மண்ணதே, ஆதலால் அலங்கல் அம்
  • தாது அவிழ்ந்த மார்ப நின், காதலன் கடல் உளான்
   
578.
  • என்று கூற என்னையே, துன்று காதல் தோழனைச்
  • சென்று நீ கொணர்க என, அன்று வந்த வண்ணமே
   
579.
  • துன்பம் உற்றவர்க்கு அலால், இன்பம் இல்லை ஆதலின்
  • அன்ப மற்று யான் நினைத், துன்பத்தால் தொடக்கினேன்
   
580.
  • பீழை செய்து பெற்றனன், வாழி என்று மாக்கடல்
  • ஆழ்வித்து இட்ட அம்பியைத், தோழர்ச் சுட்டிக் காட்டினான்
   
581.
  • தேன் தரு மாரி போன்று திவ்விய கிளவி தம்மால்
  • ஊன் தரு குருதி வேலான் உள் அகம் குளிர்ந்து விஞ்சைக்
  • கோன் தரு துன்பம் மற்று என் குலத்தொடு முடிக என்றான்
  • கான்று வில் வயிரம் வீசும் கனமணிக் குழையினானே
   
582.
  • தோடு அலர் தெரியலான் தன் தோழரைக் கண்டு காதல்
  • ஊடு அலர்ந்து எழுந்து பொங்க உருவத் தார் குழையப் புல்லிப்
  • பாடிரும் பௌவம் முந்நீர்ப் பட்டது பகர்தலோடும்
  • நாடகம் நாங்கள் உற்றது என்று கை எறிந்து நக்கார்
   
583.
  • கட்டு அழல் கதிய புண்ணில் கருவரை அருவி ஆரம்
  • பட்டது போன்று நாய்கன் பரிவு தீர்ந்து இனியர் சூழ
  • மட்டு அவிழ் கோதையோடு மண்கனை முழவம் மூதூர்க்
  • கட்டு அவிழ் தாரினான் தன் கடிமனை மகிழ்ந்து புக்கான்
   
584.
  • பெரு மனை குறுகலோடும் பிறை என இலங்கித் தோன்றும்
  • திரு நுதல் மனைவி செம் பொன் கொடி என இறைஞ்சி நிற்ப
  • வரு முலை பொதிர்ப்ப வாங்கி வண்டு இனம் இரியப் புல்லிக்
  • கதிர் நகை முறுவல் மாதர் கண் உறு கவலை தீர்த்தான்
   
585.
  • சந்திர காந்தம் என்னும் தண் மணி நிலத்தின் அங்கண்
  • வெந்து எரி பசும் பொன் வெள்ளி பளிங்கொடு பவளம் பாய்த்தி
  • கந்து எரி மணியில் செய்த கன்னியா மாடம் எய்திப்
  • பைந்தொடிப் பாவை ஒன்றும் பரிவு இலள் வைகினாளே
   
586.
  • பாசிழைப் பரவை அல்குல் பசுங் கதிர்க் கலாபம் வீங்கக்
  • காசு கண் பரிய வைகிக் கடன் தலை கழிந்த பின்னாத்
  • தூசு அணி பரவை அல்குல் துளங்கும் நுண் நுசுப்பின் பாவை
  • ஆசு அறு வரவும் தந்தை வலித்ததும் அறியச் சொன்னான்
   
587.
  • வண்டு உண மலர்ந்த கோதை வாய் ஒருப்பட்டு நேரத்
  • தெண் கடல் அமிர்தம் பெய்த செப்பு எனச் செறிந்து வீங்கிப்
  • பெண்டிரும் ஆண்மை வெஃகிப் பேதுறு முலையினாளைக்
  • கண்டவர் மருள நாளைக் கடிவினை முடித்தும் என்றான்
   
588.
  • மால் வரை வயிறு போழ்ந்து வல்லவர் மதியில் தந்த
  • பால் வரை மணியும் பொன்னும் பற் பல கொண்டு புக்குக்
  • கால் பொரு கழலினானும் காவலன் கண்டு சொன்னான்
  • வேல் பொரு தானையானும் வேண்டுவ விதியின் நேர்ந்தான்
   
589.
  • மையல் மத யானை நிரை மன்னவன் மகிழ்ந்து ஆனாப்
  • பொய் இல் புகழ் நாய்கன் மத ஒளியினொடு போகி
  • நொய்தின் மனை எய்தி இது செய்க என நொடித்தான்
  • மொய் கொள் முலை பாய முகை விண்டு அலர்ந்த தாரான்
   
590.
  • நானக் கிடங்கு ஆடை நகர் நாகத்து இடை நன் பொன்
  • வான் நக்கிடும் மாட்சியது ஓர் மண்டபம் செய்க என்ன
  • மீனத்து இடை நாள் கிழமை வெள்ளி சயை பக்கம்
  • கானத்து இடை வேங்கை எழக் கண்ணினர்கள் அன்றே
   
591.
  • நட்புப் பகை உட்கினொடு நன்பொன் விளை கழனி
  • பட்டினொடு பஞ்சு துகில் பைம் பொன்னொடு காணம்
  • அட்ட சுவை வல்சியினொடு யாதும் ஒழியாமல்
  • ஒட்டிப் பதினாயிரவர் உற்று முயல்கின்றார்
   
592.
  • வண்டு படு தேறல் நறவு
  • வாய் விடொடு பருகிக்
  • கண்ட தொழில் கணிச்சிகளின்
  • கயம்பட நன்கு இடித்து ஆங்கு
  • எண்திசையும் ஏற்பப் படுத்து
  • ஏற்றி அதன் மேலால்
  • கண்டு உருகு பொன்னின்
  • நிலம் காமுறுவ புனைந்தார்
   
593.
  • பொன் செய் குடம் கோத்த அனைய
  • எருத்தில் பொலி பொன் தூண்
  • மின் செய் பசும் பொன் நிலத்து
  • வீறு பெற நாட்டி
  • மன் பவள மேல் நவின்று
  • பளிக்கு அலகு பரப்பி
  • நன் செய் வெளி வேய்ந்து சுவர்
  • தமனியத்தின் அமைத்தார்
   
594.
  • பாவை அவள் இருக்கும் இடம்
  • பளிக்குச் சுவர் இயற்றிக்
  • கோவை குளிர் முத்தின் இயல்
  • கோதையொடு கொழும் பொன்
  • மாலையொடு மாலை தலை
  • மணந்து வர நாற்றி
  • ஆலையம் இது ஓவியர்கட்கு
  • என்ன அணி அமைத்தார்
   
595.
  • ஆய் இதழ் பொன் அலங்கல்
  • கால் அசைப்ப ஒல்கி
  • வாய் அருகு வந்து ஒசித்து
  • மறிய மழை மின்போல்
  • சேயவர்க்கும் தோன்றியது ஓர்
  • திலகம் எனும் தகைத்தாய்
  • பாய திரை முத்த மணல்
  • பரந்து பயின்று உளதே
   
596.
  • காமர் களிறும் பிடியும் கன்றும் கலை மானும்
  • தாமரைய வாவிகளும் புள்ளும் தகை நலத்தின்
  • ஏம் உறுவ பாவையினொடு இயக்கி நிலை எழுதி
  • ஆம் ஓர் ஐயம் காண்பவர்க்கு இது அகம் புறம் இது எனவே
   
597.
  • உழந்தவரும் நோக்கி மகிழ் தூங்க ஒளி வாய்ந்து
  • விழுங்கும் எனப் பறவைகளும் பிற விலங்கும் அடையா
  • முழங்கு திரை வேலியினின் இல்லை என மொய் கொண்டு
  • எழுந்து கொடி ஆடும் இது அவ் எழில் நகரின் இயல்பே
   
598.
  • ஓடும் முகில் கீறி ஒளிர் திங்கள் சிகை வைத்தே
  • மாடம் அது வார் சடைய வள்ளலையும் ஒக்கும்
  • நாடி முகம் நான்கு அதனின் நான்முகனை ஒக்கும்
  • நேடி நிமிர் தன்மையினின் நேமியையும் ஒக்கும்
   
599.
  • கண்டவர்கள் காமுறலின் காமனையும் ஒக்கும்
  • கொண்டு உலகம் ஏத்தலின் அக் கொற்றவனை ஒக்கும்
  • வண் தெரியல் ஆரம் முலை மாதார் மகிழ் அமுதம்
  • உண்டவர்கள் எவ்வகையர் அவ்வகையது ஒன்றே
   
600.
  • முகில் தலை மதியம் அன்ன முழு மணி மாடத்து இட்ட
  • அகில் புகை தவழ்ந்து வானத்து அரு விசும்பு அறுத்து நீண்டு
  • பகல் கதிர்ப் பரப்பிற்று ஆகிப் பஞ்சவர் விமானம் முட்டிப்
  • புகற்கு அரும் அமரர் கற்பம் புக்கு அயா உயிர்த்தது அன்றே
   
601.
  • அரைசனது அருளினொடு அகல்மனை அவன் எய்தி
  • உரை செலல் வகையினொடு உலகம் அறிவுற
  • முரைசு அதிர் இமிழ் இசை முதுநகர் அறைக என
  • விரை செலல் இளையரை வியவரின் விடவே
   
602.
  • விடு கணை விசையொடு வெரு வரு தகையவர்
  • படு பணையவர் உறை பதி அது குறுகி
  • நெடு மதி அகடு உற நிழல் தவழ் கொடி உயர்
  • கடி நகர் இடி முரசு அறைமினம் எனவே
   
603.
  • மங்கல அணியினர் மலர் கதிர் மதி அன
  • புங்கவன் அற நெறி பொலிவொடு மலிக என
  • அம் கதிர் மணி நகை அலமரும் முலை வளர்
  • கொங்கு அணி குழல் அவள் கோடணை அறைவாம்
   
604.
  • வான் தரு வளத்தது ஆகி வையகம் பிணியில் தீர்க
  • தேன் தரு கிளவியாரும் கற்பினில் திரிதல் இன்றி
  • ஊன்றுக ஊழிதோறும் உலகின் உள் மாந்தர் எல்லாம்
  • ஈன்றவர் வயத்தர் ஆகி இல்லறம் புணர்க நாளும்
   
605.
  • தவம் புரிந்து அடங்கி நோற்கும்
  • தத்துவர் தலைப்பட்டு ஓம்பிப்
  • பவம் பரிக எமக்கும் என்று
  • பணிந்து அவர் உவப்ப ஈமின்
  • அவம் புரிந்து உடம்பு நீங்காது
  • அருந் தவம் முயல்மின் யாரும்
  • சிவம்புரி நெறியைச் சேரச்
  • செப்பும் இப் பொருளும் கேள்மின்
   
606.
  • அம் மலர் அனிச்சத்து அம் போது
  • அல்லியோடு அணியின் நொந்து
  • விம் உறு நுசுப்பு நைய
  • வீற்று இருந்து அணங்கு சேர்ந்த
  • வெம் முலைப் பரவை அல்குல்
  • மிடை மணிக் கலாபம் வேய்த் தோள்
  • செம் மலர்த் திருவின் சாயல்
  • தேமொழி தத்தை என்பாள்
   
607.
  • மற்று அவள் தந்தை நாய்கன்
  • வண்கைச் சீதத்தன் என்பான்
  • கொற்றவன் குலத்தின் வந்தான்
  • கூறிய பொருள் இது ஆகும்
  • முன் தவம் உடையள் ஆகி
  • மூரி நூல் கலைகள் எல்லாம்
  • கற்றவள் கணம் கொள் நல் யாழ்
  • அனங்கனைக் கனிக்கும் நீராள்
   
608.
  • தீம் தொடை மகர வீணைத்
  • தெளி விளி எடுப்பித் தேற்றிப்
  • பூந் தொடி அரிவை தன்னில்
  • புலம் மிகுத்து உடைய நம்பிக்கு
  • ஈந்திடும் இறைவர் ஆதி
  • மூவகைக் குலத்து உளார்க்கும்
  • வேந்தடு குருதி வேல் கண்
  • விளங்கு இழை தாதை என்றான்
   
609.
  • மண்ணக மடந்தை ஆகம்
  • மார்பு உற முயங்கி நின்ற
  • அண்ணலை ஆதி ஆக
  • அருங் கடி நகரை வாழ்த்தி
  • விண்ணகம் முழக்கின் ஏய்ப்ப
  • வீதிதொறும் எருக்கி எங்கும்
  • கண் ஒளிர் கடிப்பின் ஓச்சி
  • கடிமுரசு அறைந்த காலை
   
610.
  • வணக்க அருந் தானை மன்னர்
  • மத்தகம் பிளந்து வாய்த்த
  • நிணம் கொழுங் குருதி வாள் கை
  • நிலம் புடை பெயர்க்கும் ஆற்றல்
  • அணைப்ப அரும் களிகொள்
  • வேழத்து அத்தினபுரத்து வேந்தன்
  • கணைக் கவின் அழித்த உண்கண்
  • கன்னியைக் கருதி வந்தான்
   
611.
  • சிதைப்ப அருஞ் சீற்றத் துப்பின்
  • செய் கழல் நரல வீக்கி
  • மதக் களிறு அடர்த்துக் குன்றம்
  • மணி வட்டின் உருட்டும் ஆற்றல்
  • கதக் களி ஒளிறு வைவேல்
  • காம்பிலிக் காவல் மன்னன்
  • பதைப்பு அரும் பரும யானைப்
  • பாலமா குமரன் வந்தான்
   
612.
  • இலை பொர எழுதி அன்ன
  • எரிமணிக் கடக முன்கைச்
  • சிலை பொரத் திரண்ட திண்தோள்
  • சில்லரிச் சிலம்பினார் தம்
  • முலை பொர உடைந்த தண்தார்
  • மொய்ம் மதுத் துளிப்ப வந்தான்
  • மலை பொர அரிய மார்பின்
  • வாரண வாசி மன்னன்
   
613.
  • கதிர் முடி மன்னர் சூழ்ந்து
  • கை தொழுது இறைஞ்சி மாலைத்
  • திருமுடி வயிர வில்லால்
  • சேவடி திளைப்ப ஏத்தி
  • அருமுடி அணிந்த கொற்றத்து
  • அவந்தியன் முரசம் ஆர்ப்ப
  • ஒரு பிடி நுசுப்பினானை
  • உள்ளுபு வந்து விட்டான்
   
614.
  • வெள் அணி அணிந்த ஞான்றே
  • வேந்தர் தம் முடியில் கொண்ட
  • கள் அணி மாலை மோந்து
  • கனை கழல் இலங்கும் நோன் தாள்
  • புள் அணி கொடியினானின்
  • போர் பல தொலைத்த ஆற்றல்
  • அள் இலை அணிந்த வை வேல்
  • அயோத்தியர் இறையும் வந்தான்
   
615.
  • நீள் நிதி வணிகர் ஈறா
  • நிலமிசை அவர்கள் எல்லாம்
  • வீணையின் பொருது வெல்வான்
  • விரைவினர் துவன்றி மூதூர்க்
  • கோணமும் மறுகும் எல்லாம்
  • குச்சு என நிரைத்து அம் மாந்தர்
  • மாண் மது நசையின் மொய்த்த
  • மதுகர ஈட்டம் ஒத்தார்
   
616.
  • உருக்கு அமைந்து எரியும் செம் பொன்
  • ஓர் ஐவில் அகலம் ஆகத்
  • திருக் குழல் மடந்தை செல்லத்
  • திரு நிலம் திருத்திப் பின்னர்
  • விரைத் தகு நான நீரால்
  • வெண் நிறப் பொடியை மாற்றிப்
  • பரப்பினர் படு வண்டு ஆர்ப்பப்
  • பல் மலர் பக்கம் எல்லாம்
   
617.
  • விலை வரம்பு அறிதல் இல்லா
  • வெண் துகில் அடுத்து வீதி
  • அலர் தலை அனிச்சத்து அம் போது
  • ஐம் முழ அகலம் ஆகப்
  • பல படப் பரப்பிப் பாவை
  • மெல் அடிப் பரிவு தீர
  • நில வரை தன் அனாரை
  • நிதியினால் வறுமை செய்தான்
   
618.
  • மண்டலம் நிறைந்த மாசு இல்
  • மதிப் புடை வியாழம் போனறு ஓர்
  • குண்டலம் இலங்க நின்ற
  • கொடியினைக் குறுகித் தோழி
  • விண்டு அலர் கோதை விம்மும்
  • விரைக் குழல் தொழுது நீவிப்
  • பண்டு இயல் மணங்கள் எல்லாம்
  • பரிவு அறப் பணிந்து சொன்னாள்
   
619.
  • எரிமணி நெற்றி வேய்ந்த
  • இளம் பிறை இது கொல் என்னப்
  • புரிமணி சுமந்த பொன் பூண்
  • பொறுக்கலா நுசுப்பில் பாவை
  • திருமணி வீணைக் குன்றத்து
  • இழிந்த தீம் பாலை நீத்தத்து
  • அருமுடி அரசர் ஆழ்வர்
  • அம்மனை அறிவல் என்றாள்
   
620.
  • மண் இடம் மலிர எங்கும்
  • மாந்தரும் வந்து தொக்கார்
  • ஒள் நிற உரோணி ஊர்ந்த
  • ஒளிமதி ஒண் பொன் ஆட்சித்
  • தௌ நிற விசும்பில் நின்ற
  • தெளிமதி முகத்து நங்கை
  • கண்ணிய வீணை வாள் போர்க்
  • கலாம் இன்று காண்டும் என்றே
   
621.
  • பசும் கதிர்க் கடவுள் யோகம்
  • பழிப்பு அற நுனித்து வல்லான்
  • விசும்பு இவர் கடவுள் ஒப்பான்
  • விரிச்சிகன் அறிந்து கூற
  • அசும்பு தேன் அலங்கல் ஐம்பால்
  • அரிவையோடு ஆய்ந்து நாய்கன்
  • விசும்பு போல் மாந்தர் ஆர
  • விழுநிதி சிதறினானே
   
622.
  • வாச நெய் வண்டு மூச
  • மாந்தளிர் விரல்கள் சேப்பப்
  • பூசி வெள்ளி லோத்திரத்தின்
  • பூம் பொருக்கு அரைத்த சாந்தின்
  • காசு அறு குவளைக் காமர்
  • அக இதழ் பயில மட்டித்து
  • ஆசு அறத் திமிர்ந்து மாதர்
  • அணி நலம் திகழ் வித்தாரே
   
623.
  • கங்கையின் களிற்றின் உச்சிக்
  • கதிர் மணிக்குடத்தில் தந்த
  • மங்கல வாச நல்நீர்
  • மணிநிறம் கழீஇயது ஒப்ப
  • நங்கையை நயப்ப எல்லாம்
  • விரையொடு துவரும் சேர்த்தி
  • அங்கு அரவு அல்குலாளை
  • ஆட்டினார் அரம்பை அன்னார்
   
624.
  • வெண் நிற மழையின் மின்போல்
  • வெண் துகில் கலாபம் வீக்கிக்
  • கண் நிறம் முலையும் தோளும்
  • சந்தனத் தேய்வை கொட்டித்
  • தௌ நிறச் சிலம்பு செம் பொன்
  • கிண்கிணி பாதம் சேர்த்தி
  • பண் நிறச் சுரும்பு சூழும்
  • பனிமுல்லைச் சூட்டு வேய்ந்தார்
   
625.
  • எரிமணிச் சுண்ணம் மின்னும்
  • இரும் சிலை முத்தம் சேர்த்தித்
  • திருமணி முலையின் நெற்றிச்
  • சிறு புறம் செறியத் தீட்டிப்
  • புரிமணி ஆகத்து ஐதா
  • விரல் நுதி கொண்டு பூசி
  • விரிமணி வியப்ப மேனி
  • ஒளிவிட்டு விளங்கிற்று அன்றே
   
626.
  • அருங் கயம் விசும்பில் பார்க்கும்
  • அணிச் சிறு சிரலை அஞ்சி
  • இரும் கயம் துறந்து திங்கள்
  • இடம் கொண்டு கிடந்த நீலம்
  • நெருங்கிய மணிவில் காப்ப
  • நீண்டு உலாய்ப் பிறழ்வ செங்கேழ்க்
  • கருங் கயல் அல்ல கண்ணே
  • எனக் கரி போக்கினாரே
   
627.
  • பொருந்து பொன் தூண்கள் நான்கின்
  • பொலிந்து நூல் புலவர் செந்நா
  • வருந்தியும் புகழ்தல் ஆகா
  • மரகத மணி செய் கூடத்து
  • இருந்து இளையார்கள் கோலம்
  • இந்திரன் நிருமித்தால் போல்
  • திருந்தச் செய்து அதன்பின் நங்கை
  • திருவிற்கு ஓர் திலகம் ஒத்தாள்
   
628.
  • மண் கனை முழவம் விம்ம
  • வரிவளை துவைப்ப வள்வார்க்
  • கண் கனைந்து இடியின் வெம்பிக்
  • கடல் என முரசம் ஆர்ப்ப
  • விண் கனிந்து உருகு நீர்மை
  • வெள்வளைத் தோளி போந்தாள்
  • பண் கனிந்து உருகு நல் யாழ்ப்
  • படை பொருது உடைக்கல் உற்றே
   
629.
  • பரந்து ஒளி உமிழும் பைம் பொன்
  • கண்ணடி பதாகை தோட்டி
  • விரிந்து இருள் மேயும் செம்பொன்
  • விளக்கு வெண்முரசு கும்பம்
  • சுரந்த வெண் மதியைச் சூன்று
  • கதிர் கொண்டு தொகுத்த போலும்
  • பொருந்து பொன் கதிர் பெய் கற்றை
  • புணர் கயல் போந்த அன்றே
   
630.
  • வென்றவன் அகலம் பூட்ட
  • விளங்கு ஒளி மணி செய் செப்பின்
  • நின்று எரி பசும் பொன் மாலை
  • போந்தது நெறியில் பின்னர்
  • ஒன்றிய மணி செய் நல்யாழ்
  • போந்தன உருவம் மாலை
  • தின்று தேன் இசைகள் பாடத்
  • திருநகர்ச் சுடர அன்றே
   
631.
  • ஆரம் துயல்வர அம் துகில் சோர்தர
  • வீரம் படக் கையை மெய்வழி வீசித்
  • தேரை நடப்பன போல் குறள் சிந்தினொடு
  • ஓரும் நடந்தன ஒண்தொடி முன்னே
   
632.
  • வட்டச் சூரையர் வார் முலைக் கச்சினர்
  • பட்டு வீக்கிய அல்குலர் பல்கணை
  • விட்ட தூணியர் வில்லினர் வாளினர்
  • ஒட்டி ஆயிரத்து ஓர் எண்மர் முன்னினார்
   
633.
  • வம்பு வீக்கி வருமுலை உள் கரந்து
  • அம்பின் நொய்யவர் ஆண் உடைத் தானையர்
  • பைம் பொன் கேடகம் வாளொடு பற்றுபுளளள
  • செம் பொன் பாவையைச் சேவித்து முன்னினர்
   
634.
  • ஆணை ஆணை அகலுமின் நீர் என
  • வேணுக் கோலின் மிடைந்தவர் ஒற்றலின்
  • ஆணை இன்று எமதே என்று அணிநகர்
  • காணும் காதலில் கண் நெருக்கு உற்றவே
   
635.
  • கண்ணி னோடு பிறந்தது காரிகை
  • வண்ணம் காண்டற்கு அன்றோ என்று வைது அவர்
  • விண்ணும் மண்ணும் விருந்து செய்தால் ஒப்ப
  • எண்ணின் எண் இடம் இன்றி நெருங்கினார்
   
636.
  • இனம் சேரா ஆகி இளையார்
  • உயிரின் மேல் எண்ணம் கொள்வான்
  • புனம் சேர் கொடி முல்லை
  • பூம் பவளத்துள் புக்குப் பூத்த போலும்
  • வனம் சேர் துவர்ச் செவ்வாய் வாள் எயிறும்
  • கண்மலரும் வளையல் ஆகாக்
  • கனம் சேர் கதிர் முலையும் கண்டார்கள்
  • வீட்டு உலகம் காணார் போலும்
   
637.
  • மீன் சேர் குழாம் அனைய மேகலையும்
  • வெம் முலையும் கூற்றம் கூற்றம்
  • ஊன் சேர் உயிர் உய்யக் கொண்டு
  • ஓடிப் போமின்கள் உரைத்தேம் என்று
  • கான் சேர் கமழ் கோதை கால்
  • தொடர்ந்து கைவிடாது அரற்றுகின்ற
  • தேன் சேர் திருவடி மேல் கிண்கிணி
  • பொன் ஆவதற்கே தக்கது என்பார்
   
638.
  • கள் வாய்ப் பெயப் பட்ட மாலைக்
  • கருங் குழல்கள் கண்டார் நைய
  • உள் வாய்ப் பெயப் பட்ட
  • வெம்மதுச் செப்பு ஓர் இணை மெல் ஆகம் ஈன்ற
  • புள் வாய் மணி மழலைப் பொன்
  • சிலம்பின் இக் கொடியை ஈன்றாள் போலும்
  • கொள்வான் உலகுக்கு ஓர் கூற்று
  • ஈன்றாள் அம்மவோ கொடிய வாறே
   
639.
  • செய்ய தாமரை மேல் திருவே கொலோ
  • வெய்ய நோக்கின் விச்சாதரியே கொலோ
  • மையில் வானவர் தம் மகளே கொல் என்று
  • ஐயம் உற்று அலர் தார் மன்னர் கூறினார்
   
640.
  • வீணை வென்று இவள் வெம் முலைப் பூந் தடம்
  • ஆணை தோய்வது அல்லால் பிறன் வெளவுமேல்
  • கோணைப் போரில் குளிக்குவம் அன்று எனின்
  • மாண நல் தவம் செய்குவம் என்மரும்
   
641.
  • குலிகச் செப்பு அன கொம்மை வரிமுலை
  • நலியும் எம்மை என்பார் நல்ல கண்களால்
  • வலிய வாங்கி எய்தாள் எம்மை வாழ்கலேம்
  • மெலிய ஆவி விடுக்கும் மற்று என்மரும்
   
642.
  • ஊட்டி அன்ன உருக்கு அரக்கு ஆர் அடி
  • நீட்டி மெல் மலர் மேல் வந்து நின் நலம்
  • காட்டி எம்மைக் கொன்றாய் எனக் கைதொழுது
  • ஓட்டை நெஞ்சினர் ஆய் உழல்வார் களும்
   
643.
  • திங்கள் மதி முகத்த சேலும்
  • பவளமும்சிலையும் முத்தும்
  • கொங்கு உண் குழலாள் மெல் ஆகத்த
  • கு அரும்பும் கொழிப்பில் பொன்னும்
  • அங் கை குழியா அரக்கு ஈத்த
  • செந்தளிர் நெய் தோய்த்த போலும்
  • மங்கை மலர் அடியும் தாமரையே
  • யாம் அறியேம் அணங்கே என்பார்
   
644.
  • பொன் மகரம் வாய் போழ்ந்த முத்த நூல்
  • தோள் யாப்பில் பொலிந்த ஆறும்
  • மின் மகரம் கூத்தாடி வில்லிட்டு இரும்
  • குழைக் கீழ் இலங்கும் ஆறும்
  • மன் மகர வெல் கொடியான் மால்
  • கொள்ளக் கால் கொண்ட முலையினாளை
  • என் அரம்பை என்னாவாறு என்பார்
  • இமைக்கும் கண் இவையோ என்பார்
   
645.
  • கோள் வயிர நீள் அருவிக் குன்று இவர்ந்த
  • சென்சுடர் போல் கொலை வேல் மன்னர்
  • நீள்வயிர வெண் மருப்பின் நீலக்
  • களிற்றின் மேல் நிரைத் தார் பொங்கத்
  • தோள் வயிரம் தோன்றத் தொழுவார்
  • அழுது நைவார் தொக்கோர் கோடி
  • வாள் வயிரம் விற்கும் மட நோக்கி
  • யார்கொலோ பெறுவார் என்பார்
   
646.
  • பைம் பொன் நிமிர் கொடி பாவை
  • வனப்பு என்னும் தளிரை ஈன்று
  • செம் பொன் மலர்ந்து இளையார் கண் என்னும்
  • சீர் மணிவண்டு உழலச் சில் என்று
  • அம்பொன் சிலம்பு அரற்ற அன்னம் போல்
  • மெல்லவே ஒதுங்கி அம் பூஞ்
  • செம்பொன் புரிசை அடைந்தாள் செந்
  • தாமரை மேல் திருவோடு ஒப்பாள்
   
647.
  • பட்டு இயன்ற கண்டத் திரை வளைத்துப்
  • பல் மலர் நல் மாலை நாற்றி
  • விட்டு அகலாச் சாந்தின் நிலம்
  • மெழுகி மெல் மலர்கள் சிதறித் தூமம்
  • இட்டு இளையர் ஏத்த இமையார்
  • மட மகள் போல் இருந்து நல் யாழ்
  • தொட்டு எழீஇப் பண் எறிந்தாள்
  • கின்னரும் மெய்ம்மறந்து சோர்ந்தார் அன்றே
   
648.
  • புன் காஞ்சித் தாது தன் புறம்
  • புதையக் கிளி எனக் கண்டு
  • அன்பு கொள் மடப் பெடை
  • அலமந்து ஆங்கு அகல்வதனை
  • என்பு உருகு குரல் அழைஇ
  • இரும் சிறகர் குலைத்து உகுத்துத்
  • தன் பெடையைக் குயில் தழுவத்
  • தலை வந்தது இளவேனில்
   
649.
  • தண் காஞ்சித் தாது ஆடித் தன் நிறம் கரந்ததனைக்
  • கண்டு ஆனா மடப் பெடை கிளி எனப் போய்க் கை அகல
  • நுண்தூவி இளஞ் சேவல் நோக்கோடு விளி பயிற்றித்
  • தன் சிறகால் பெடை தழுவத் தலை வந்தது இளவேனில்
   
650.
  • குறுத் தாள் குயில் சேவல்
  • கொழுங் காஞ்சித் தாது ஆடி
  • வெறுத்து ஆங்கே மடப் பெடை
  • விழைவு அகன்று நடப்பதனை
  • மறுத்து ஆங்கே சிறகு உளர்ந்து
  • மகிழ்வு ஆனாக் கொளத் தேற்றி
  • உறுப்பினால் அடி பணியத்
  • தலை வந்தது இளவேனில்
   
651.
  • தளை அவிழ் கோதை பாடித்
  • தான் அமர்ந்து இருப்பத் தோழி
  • விளை மதுக் கண்ணி வீணாபதி
  • எனும் பேடி வேல் கண்
  • இளையவள் பாட வீரர் எழால்
  • வகை தொடங்கல் அன்றேல்
  • வளையவள் எழாலின் மைந்தர்
  • பாடுக வல்லை என்றாள்
   
652.
  • வேயே திரள் மென்தோள் வில்லே கொடும் புருவம்
  • வாயே வளர்பவளம் மாந்தளிரே மாமேனி
  • நோயே முலை சுமப்பது என்றார்க்கு அருகு இருந்தார்
  • ஏஏ இவள் ஒருத்தி பேடியோ என்றார்
  • எரி மணீப்பூண் மேகலையாள் பேடியோ என்றார்
   
653.
  • பலி கொண்டு பேராத பாசம் இவள் கண்
  • ஒலி கொண்டு உயிர் உண்ணும் கூற்றம் என்று எல்லே
  • கலி கொண்டு தேவர் முலை கரந்து வைத்தார்
  • இலை கொண்ட பூணினீர் என்று எழினி சேர்ந்தாள்
  • இலங்கு பொன் கிண்கிணியாள் நக்கு எழினி சேர்ந்தாள்
   
654.
  • நுண் துகில் அகல் அல்குல் நொசித்த வெம் முலை
  • உண்டு இவள் நுசுப்பு என உரைப்பின் அல்லது
  • கண்டு அறிகிலா இடைக் காம வல்லி யாழ்
  • கொண்டவர் குழாத்து இடைக் கொடியின் ஒல்கினாள்
   
655.
  • பளிக்கு ஒளி மணிச்சுவர் எழினி பையவே
  • கிளிச் சொலின் இனியவர் நீக்கக் கிண்கிணி
  • ஒளிக்கும் இன்று ஆடவர் உயிர்கள் என்ன நொந்து
  • அளித்து அவை இரங்கச் சென்று அணையில் ஏறினான்
   
656.
  • உறை கழித்து இலங்கு வாள் உடற்றும் கண்ணினாள்
  • மறை ஒளி மணிச் சுவர் இடை இட்டு இத்தலை
  • இறை வளை யாழ் தழீஇ இருப்ப அத்தலைக்
  • கறை கெழு வேலினார் கண்ணி தீந்தவே
   
657.
  • சிலைத் தொழில் சிறு நுதல் தெய்வப் பாவை போல்
  • கலைத் தொழில் பட எழீஇ இப் பாடினாள் கனிந்து
  • இலைப் பொழில் குரங்கின ஈன்ற தூண்தளிர்
  • நிலத்து இடைப் பறவை மெய்ம் மறந்து வீழ்ந்தவே
   
658.
  • கருங் கொடிப் புருவம் ஏறா கயல் நெடுங் கண்ணும் ஆடா
  • அருங் கடி மிடறும் விம்மாது அணிமணி எயிறும் தோன்றா
  • இரும் கடல் பவளச் செவ்வாய் திறந்து இவள் பாடினாளோ
  • நரம்பொடு வீணை நாவின் நவின்றதோ என்று நைந்தார்
   
659.
  • இசைத் திறத்து அனங்கனே அனைய நீரினார்
  • வசைத்திறம் இலாதவர் வான் பொன் யாழ் எழீஇ
  • விசைத்து அவர் பாடலின் வெருவிப் புள் எலாம்
  • அசிப்ப போன்று இரு விசும்பு அடைந்த என்பவே
   
660.
  • மாதர் யாழ் தடவர வந்த மைந்தர் கைக்
  • கீதத்தான் மீண்டன கேள்விக் கின்னரம்
  • போதரப் பாடினாள் புகுந்த போயின
  • தாது அலர் தாரினார் தாங்கள் பாடவே
   
661.
  • சுரும்பு எழுந்து இருந்து உணும் தொங்கல் வார் குழல்
  • அரும் பெறல் அவட்கு இசை அரசர் தோற்றபின்
  • நரம்பு உறு தௌவிளி நவின்ற நால் மறை
  • வரம் பெறு நெறியவர் மலைதல் மேயினார்
   
662.
  • திருமலர்க் கமலத்து அங் கண்
  • தேனின் முரல்வது ஒப்ப
  • விரிமலர்க் கோதை பாட எழால்
  • வகை வீரர் தோற்றார்
  • எரிமலர்ப் பவளச் செவ்வாய்
  • இன் நரம்பு உளர மைந்தர்
  • புரி நரம்பு இசை கொள் பாடல்
  • உடைந்தனர் பொன் அனாட்கே
   
663.
  • வால் அரக்கு எறிந்த காந்தள்
  • மணி அரும்பு அனைய ஆகிக்
  • கோல் பொரச் சிவந்த கோலக்
  • குவிவிரல் மடந்தை வீணை
  • நூல் பொரப் புகுந்த நுண் நூல்
  • வணிகரும் தொலைந்து மாதோ
  • கால் பொரக் கரிந்த காமர்
  • பங்கயப் பழனம் ஒத்தார்
   
664.
  • தேன் உயர் மகரவீணைத்
  • தீம் சுவை இவளை வெல்வான்
  • வான் உயர் மதுகை வாட்டும்
  • வார்சிலைக் காமன் ஆகும்
  • ஊன் உயர் நுதி கொள் வேலீர்
  • ஒழிக ஈங்கு இல்லை என்றான்
  • கான் உயர் அலங்கல் மாலைக்
  • கட்டியங் காரன் அன்றே
   
665.
  • மறு முயற்கு இவர்ந்த வேக
  • மாசுணம் அடையப் பட்ட
  • நிறை மதி போன்று மன்னர்
  • ஒளி குறைந்து உருகி நைய
  • அறு பகல் கழிந்த பின்றை
  • அந்நகர்க்கு ஆதி நாய்கன்
  • சிறுவன் ஓர் சிங்க ஏற்றை
  • சீவக சாமி என்பான்
   
666.
  • தம்பியும் தோழன் மாரும்
  • தானும் மற்று எண்ணிச் சூழ்ந்து
  • வெம்பிய வீணைப் போருள்
  • செல்குவம் யாமும் முன்னே
  • தும்பு அறப் புத்திசேன சொல்
  • இது குரவற்கு என்னக்
  • கந்துகற்கு அவனும் சொன்னான்
  • அவன் இது விளம்பினானே
   
667.
  • ஐயனுக்கு அமைந்த நீரார்
  • அறுபத்து நால்வர் அம்பொன்
  • வையகத்து அமிர்தம் அன்னார்
  • வாக்கு அமை பாவை ஒப்பார்
  • எய்திய இளமை மிக்கார்
  • இயைந்தனர் என்று பின்னும்
  • கை அமை சிலையினாற்குக்
  • கந்துகன் இதுவும் கூறும்
   
668.
  • மறை வல்லாற்கு உரைக்கும் போழ்தில்
  • கோயிலுள் நின்று மாலைப்
  • பிறை வெல்லும் நுதலினாள் ஓர்
  • பெண்கொடி வந்து கூந்தல்
  • உறை செல நீக்கிப் பைந்தாள்
  • ஒண்மணிக் குவளை நீட்ட
  • நறை வெல்லும் நாக மாலை
  • நோக்கொடு பூக் கொண்டானே
   
669.
  • நல்லவள் நோக்கம் நாய்கன்
  • தேர்ந்து பூங் குவளைப் போதின்
  • அல்லியுள் கிடந்த ஓலை தாள்
  • அது சலாகை ஆதல்
  • சொல்லும் என்றும் ஆய்ந்து கொண்டு
  • துகிலிகைக் கணக்கு நோக்கி
  • வல்லிதில் சலாகை சுற்றி
  • ஓலையை வாசிக் கின்றான்
   
670.
  • நம்பனை நகரின் நீக்கிச்
  • சேமத்தால் வைக்க தீயுள்
  • செம் பொன் போல் பெரிதும் சேந்து
  • செகுத்திடல் உற்று நின்றான்
  • வெம்பினான் காரி உண்டிக்
  • கடவுளின் கனன்று வேந்தன்
  • இம்பர் இன்று எனக்குச் சொன்னான்
  • இது பட்டது அடிகள் என்றான்
   
671.
  • ஓலையை அவட்கு நீட்டி
  • ஒண் மணிக் குழையும் முத்தும்
  • மாலையும் படுசொல் ஒற்றி
  • வம் என மறைய நல்கி
  • வேலை நெய் பெய்த திங்கள்
  • விரவிய பெயரினாற்கு
  • மேலை நாள் பட்டது ஒன்று
  • விளம்புவல் கேள் இது என்றான்
   
672.
  • கடி அரங்கு அணிந்து மூதூர்க் கடல்
  • கிளர்ந்தது அனையது ஒப்ப
  • நடை அறி புலவர் ஈண்டி
  • நாடகம் நயந்து காண்பான்
  • குடை உடையவனொடு எண்ணிச்
  • சீவகன் கொணர்மின் என்னத்
  • தொடையல் சூழ் வேலினானும்
  • தோழரும் காணச் சென்றார்
   
673.
  • நிலம் அறிந்து அணிக ஐயன்
  • சீவகன் நெறியின் என்ன
  • நல் நுதல் பட்டம் கட்டி
  • நகை முடிக் கோதை சூட்டி
  • அலர் முலைக் குருதிச் சாந்தும்
  • ஆரமும் பூணும் சேர்த்திக்
  • குலவிய குருதிப் பட்டின்
  • கலைநலம் கொளுத்தி இட்டான்
   
674.
  • திருவிலே சொரிந்து மின்னும்
  • குண்டலம் செம் பொன் ஓலை
  • உருவு கொள் மதியம் அன்ன
  • ஒளி முகம் சுடர ஆக்கிப்
  • பரி அகம் சிலம்பு செம் பொன்
  • கிண்கிணி பாதம் சேர்த்தி
  • அரிவையை அரம்பை நாண
  • அணிந்தனன் அனங்கன் அன்னான்
   
675.
  • தோல் பொலி முழவும்
  • துளை பயில் குழலும் ஏங்கக்
  • காற்கு ஒசி கொம்பு போலப்
  • போந்து கைத் தலங்கள் காட்டி
  • மேல் பட வெருவி நோக்கித்
  • தானையை விட்டிட்டு ஒல்கித்
  • தோற்றினாள் முகம் செய் கோலம்
  • துளக்கினாள் மனத்தை எல்லாம்
   
676.
  • தௌ மட்டுத் துவலை மாலை
  • தேனொடு துளிப்பத் திங்கள்
  • உள் நட்ட குவளை போலும்
  • உருவக் கண் வெருவி ஆட
  • விண் விட்டுக் கடவுள் வீழ
  • நுடங்கின புருவம் நெஞ்சம்
  • பண் விட்டது இருந்து காணும்
  • பல்மணிக் கழலி னார்க்கே
   
677.
  • செங் கதிர்ச் சிலம்பு செம் பொன்
  • கிண்கிணி சிலம்பக் கோதை
  • பொங்கப் பொன் ஓலை வட்டம்
  • பொழிந்து மின் உகுப்பப் போர்த்த
  • குங்குமச் சாந்து வேய்ந்து
  • குண்டலம் திருவில் வீச
  • அம் கதிர் ஆரம் மின்ன
  • அரிவை கூத்து ஆடுகின்றாள்
   
678.
  • மருங்குலும் ஒன்று தாய்க்கு
  • ஒரு மகள் ஆதல் ஓர்ந்தும்
  • இரும்பினால் இயன்ற நெஞ்சத்து
  • இவர்களோ இருந்து காண்க
  • அரங்கின் மேல் இவளைத் தந்த தாய்
  • கொலோ கயத்தி அன்றேல்
  • சுரும்பு சூழ் கண்ணி சூட்டி அவர்
  • கொலோ கயவர் சொல்லீர்
   
679.
  • அகிலார் புகை அலால் சாந்து
  • அணியாள் பூச்சாரச் செல்லாள் செல்லின்
  • பகலே பகை வளர்த்த பாவை
  • சிறு நுசுப்பு ஒன்று உண்டே பாவம்
  • இகல் ஏந்து இள முலை மேல் சாந்து
  • எழுதி முத்து அணிந்து பூவும் சூட்ட
  • முகில் ஏந்து மின் மருங்குல் மொய்
  • குழல் தாய் இதுகண்டும் உளளே பாவம்
   
680.
  • தேந் தாமம் செம் பவளத் தாமம் செம் பொன்
  • எரி தாமம் மின்னுத்திரள் தாமங்கள்
  • தாம்தாம் தாம் எனத் தாழ்ந்த பொன் மேகலைத்
  • தாம அரங்கின்மேல் தாது ஆர் முல்லைப்
  • பூந் தாமக் கொம்பு ஆடக் கண்டார் எல்லாம்
  • புன மயிலே அன்னமே பொன்னம் கொம்பே
  • ஆம் தாமரை மகளே அல்லள் ஆயின்
  • அமரர்மகள் என்பாரும் ஆயினாரே
   
681.
  • கொடியார் குளிர் முத்தம் சூட்டி வைத்தார்
  • கொல்வானே குங்குமச் சேறு ஆட்டினார்கள்
  • அடி சார்ந்து வாழ்வாரை அம் முலைகள்தாமே
  • அழித்திடுமேல் தாமே அழித்திடுக என்று
  • ஒடியாத மாத்திரையால் உண்டே நுசுப்பு
  • இருந்துகாண்பாரும் உளரே செங்கண்
  • நெடியான் மகன் சிலையும் அம்பும் வைத்த
  • நிழல்மதியோ வாள் முகமோ நோக்கிக் காணீர்
   
682.
  • நெய் பருகி நீண்ட இருள் கற்றை போலும்
  • குழல்கற்றை கண்டு நிறை
  • கலங்குவார் மை பருகி நீண்டு மதர்த்த உண்கண்
  • வாள்ஏறு பெற்று நைவார் மா நாகத்தின்
  • பை பருகு அல்குல் இலயம் பற்றிப்
  • பதன் அமைத்த பாவை நிருத்தம் நோக்கி
  • மெய் உருகிக் கண் உருகி நெஞ்சு உருகிக் காம
  • வெயில் வெண்ணெய்ப் பாவை போல் மெலிகின்றாரே
   
683.
  • ஆடவர் மனங்கள் என்னும் அரங்கின் மேல் அனங்க மாலை
  • ஆடினாள் முறுவல் என்னும் தோழியை ஐயன் காண
  • ஓடு அரி நெடுங் கண் என்னும் ஓலையை எழுதிவிட்டாள்
  • வாடிய வாறு நோயும் உரைத்து வார் கொடி அனாளே
   
684.
  • வள மலர் அணியப் பெற்றேன் வால்வளை திருத்தப் பெற்றேன்
  • களன் எனக் கரையும் அல்குல் கையினால் தீண்டப் பெற்றேன்
  • இளமுலை சுமந்து பெற்ற வருத்தமும் இன்று தீர்ந்தேன்
  • உள மெலி மகளிர் எய்தும் இன்பமும் இன்று பெற்றேன்
   
685.
  • என்றவள் அரசன் தன்னை நோக்கலள் இவன்கண் ஆர்வம்
  • சென்றமை குறிப்பில் தேறிக் கூத்து எலாம் இறந்த பின்றை
  • நின்றது மனத்தில் செற்றம் நீங்கித் தன் கோயில் புக்கான்
  • மன்றல மடந்தை தன்னை வலிதில் கொண்டு ஒலிகொள் தாரான்
   
686.
  • தேன் உடைந்து ஒழுகும் செவ்வித் தாமரைப் போது புல்லி
  • ஊன் உடை உருவக் காக்கை இதழ் உகக் குடைந்திட்டாங்குக்
  • கான் உடை மாலை தன்னைக் கட்டியங்காரன் சூழ்ந்து
  • தான் உடை முல்லை எல்லாம் தாது உகப் பறித்திட்டானே
   
687.
  • கலையினில் கன்னி நீக்கித் தாமரைக் கண்கள் தம்மால்
  • முலையினில் எழுதிச் செவ்வாய் பயந்த தேன் பருகி முள்கும்
  • சிலை வலாய் புல்லு நம்பி சீவக சாமியோ என்று
  • அலை கடல் புலம்பின் நோவாது அரற்றுமால் அணங்கின் அன்னாள்
   
688.
  • பிறன் நலம் அரற்றக் கேட்டும் பீடினால் கனிந்த காம
  • நறு மலர் அணிந்த மாலை நாற்றக்கு ஓர் நான்கு காதம்
  • உற நடந்து அறிதல் இல்லான் ஒண்தொடிக்கு உருகிப் பின்னும்
  • திறன் அல தமர்க்குச் செப்பும் தீ உமிழ்ந்து இலங்கும் வேலான்
   
689.
  • விலங்கல் அன்ன வேக வேழம் நான்கு வெல்லும் ஆற்றலான்
  • கலம் கலந்து இலங்கும் மார்பின் கந்துகன மகன் என
  • நலம் கலந்து உரைக்குமால் இந் நல்நகர்க்கு மன்னனோ
  • உலம் கலந்த தோளினீர் நீர் உரைமின் நீவிர் என்னவே
   
690.
  • மட்டு அவிழ்ந்த தாரினான் இம் மாநகர்க்குள் ஆயிரர்
  • தொட்டு எடுக்கலா உலம் ஓர் தோளின் ஏந்தி ஆடினான்
  • ஒட்டி நாகம் ஓர் இரண்டு எடுக்கலாத கல்லினை
  • விட்டு அலர்ந்த போது போல ஏந்தல் ஏந்தி நீக்கினான்
   
691.
  • வெம் சிலையின் வேடர் வெள்ளம் அப்பு மாரி தூவலின்
  • எஞ்சல் இன்றி நம் படை இரு முறையும் உடைந்த பின்
  • மஞ்சு சூழ் கணை மழை பொழிந்து மா நிரை பெயர்த்து
  • அம் சில் ஓதியார் புனைந்த செஞ் சொல் மாலை சூடினான்
   
692.
  • தீம் பயறு இயன்ற சோறு செப்பின் ஆயிரம் மிடா
  • நீங்கலா நறு நெய் வெள்ளம் கன்னல் ஆயிரம் குடம்
  • ஏந்து வித்து நாம் மிசைய வந்து தந்து நீக்கினான்
  • ஆங்கு நாம் பசித்து அசைந்த காலை அன்று அவ் அண்ணலே
   
693.
  • இன்னன் என்ன இன்புறான் இழந்தனன் அன்ன அரசு என
  • என்னை வெளவும் வாயில் தான் என்னும் சூழ்ச்சி தன்னுளான்
  • அன்னதால் அரில்தப அறிந்து கூத்தி கூறினாள்
  • இன்னதால் படை அமைத்து எழுமின் என்று இயம்பினான்
   
694.
  • தாதை தான் உரைத்த எல்லாம் தன் உயிர்த் தோழன் கூறக்
  • கோதை முத்து அணிந்த மார்பன் கூர் எயிறு இலங்க நக்கு ஆங்கு
  • ஏதம் ஒன்று இல்லை சேறும் என்றலும் இலங்கு வாள் கைப்
  • போது உலாம் கண்ணி மைந்தர் போர்ப் புலிக் குழாத்தின் சூழ்ந்தார்
   
695.
  • கண் நுதல் கடவுள் சீறக் கனல் எரி குளித்த காமன்
  • மண் மிசைத் தோன்றி அன்ன வகை நலம் உடைய காளை
  • தௌ மணி ஆர மார்பன் திரு நுதல் மகளிர் நெஞ்சத்து
  • உள் நிறை பருகும் வண் தார் உரு அமை திருவின் மிக்கான்
   
696.
  • கரு நெறி பயின்ற குஞ்சிக் காழ் அகில் கமழ ஊட்டி
  • வரி நிற வண்ண மாலை வலம் பட மிலைச்சி வாள் ஆர்
  • திரு நிற முகத்திற்கு ஏற்பச் செம் பொன் ஓர் ஓலை சேர்த்தி
  • எரி நிறக் குழை ஓர் காதிற்கு இருள் அறச் சுடர வைத்தான்
   
697.
  • தென் வரைப் பொதியில் தந்த சந்தனத் தேய்வை தேம் கொள்
  • மன் வரை அகலத்து அப்பி வலம்புரி ஆரம் தாங்கி
  • மின் விரித்து அன்னயது ஒத்து விலை வரம்பு அறியல் ஆகா
  • இன் நுரைக் கலிங்கம் ஏற்ப மருங்குலுக்கு எழுதி வைத்தான்
   
698.
  • இரும்பு அறக் கழுவி எஃகின் இருள் அற வடிக்கப் பட்ட
  • அரும் பெறல் சுரிகை அம் பூங் கச்சிடைக் கோத்து வாங்கிப்
  • பெருந் தகைக் குருசில் கொண்டு பெருவலம் சுடர வீக்கித்
  • திருந்து இழை மகளிர் வெஃகும் தே இளங் குமரன் ஒத்தான்
   
699.
  • வரை விழித்து இமைப்பது ஒக்கும் வாள் ஒளி ஆர மார்பின்
  • விரை வழித்து இளையர் எல்லாம் விழு மணிக் கலங்கள் தாங்கி
  • நுரை கிழித்த அனைய நொய்ம்மை நுண் துகில் மருங்குல் சேர்த்தி
  • உரை கிழித்து உணரும் ஒப்பின் ஓவியப் பாவை ஒத்தார்
   
700.
  • அரக்கு நீர் எறியப் பட்ட அஞ்சனக் குன்றம் அன்ன
  • திருக் கிளர் ஓடை சூழ்ந்த செம்புகர் நெற்றித்து ஆகி
  • உருக்கி ஊன் உண்ணும் வேகத்து உறுபுலி அனைய நாகம்
  • அருக்கன் ஓர் குன்றம் சேர்நதாங்கு அண்ணல் தான் ஏறினானே
   
701.
  • விடுகணை விசையின் வெய்ய விளங்கு ஒளி இவுளித் திண்தேர்
  • கடு நடைக் கவரி நெற்றிக் கால் இயல் புரவி காய்ந்து
  • வடி நுனை ஒளிறும் மாலை வாள்படை மறவர் சூழ
  • அடுதிரைச் சங்கம் ஆர்ப்ப அணி நகர் முன்னினானே
   
702.
  • தோற்றனள் மடந்தை நல்யாழ் தோன்றலுக்கு என்று நிற்பார்
  • நோற்றனள் நங்கை மைந்தன் இள நலம் நுகர்தற்கு என்பார்
  • கோல் தொடி மகளிர் செம்பொன் கோதையும் குழையும் மின்ன
  • ஏற்றன சொல்லி நிற்பார் எங்கணும் ஆயினாரே
   
703.
  • சுறா நிறக் கொடுங் குழை சுழன்று எருத்து அலைத்தர
  • அறா மலர்த் தெரியலான் அழன்று நோக்கி ஐ எனப்
  • பொறா மனப் பொலிவு எனும் மணிக்கை மத்திகையினால்
  • அறாவி வந்து தோன்றினான் அனங்கன் அன்ன அண்ணலே
   
704.
  • குனி கொள்பாக வெண் மதிக் கூர் இரும்பு தான் உறீஇப்
  • பனி கொள் மால்வரை எனப் படு மதக் களிறு இரீஇ
  • இனிது இழிந்து இளையர் ஏத்த இன் அகில் கொழும் புகை
  • முனிய உண்ட குஞ்சியான் முரண் கொள் மாடம் முன்னினான்
   
705.
  • புதிதின் இட்ட பூந் தவிசின் உச்சிமேல் நடந்து அவண்
  • புதிதின் இட்ட மெல் அணைப் பொலிந்த வண்ணம் போகுஉயர்
  • மதியது ஏறி வெம் சுடர் வெம்மை நீங்க மன்னிய
  • உதயம் என்னும் மால்வரை உவந்து இருந்தது ஒத்ததே
   
706.
  • முருகு விம்மு கோதையார் மொய் அலங்கல் வண்டு போல்
  • பருகுவான் இவள் நலம் பாரித்திட்ட இந்நகர்
  • உருகும் ஐங்கணை ஒழித்து உருவின் ஐய காமனார்
  • கருதி வந்தது என்று தம் கண்கள் கொண்டு நோக்கினார்
   
707.
  • முனைத் திறத்து மிக்க சீர் முனைவர் தம் முனைவனார்
  • வனப்பு மிக்கவர்களின் வனப்பு மிக்கு இனியனா
  • நினைத்து இருந்து இயற்றிய நிருமித மகனிவன்
  • கனைத்து வண்டு உளர்ந்த தார்க் காளை சீவகன் அரோ
   
708.
  • பொன்னை விட்ட சாயலாள் புணர் முலைத் தடத்தினால்
  • மின்னை விட்டு இலங்கு பூண் விரை செய் மார்பம் ஓலையா
  • என்னை பட்டவாறு அரோ எழுதி நங்கை ஆட் கொள்வான்
  • மன்னும் வந்து பட்டனன் மணி செய் வீணை வாரியே
   
709.
  • இனைய கூறி மற்று அவள் தோழிமாரும் இன்புற
  • வனையலாம் படித்து அலா வடிவிற்கு எல்லை ஆகிய
  • கனை வண்டு ஓதி கை தொழும் கடவுள் கண்ணில் கண்டவர்
  • எனையது எனையது எய்தினார் அனையது அனையது ஆயினார்
   
710.
  • குட்ட நீர்க் குவளை எல்லாம் கூடி முன் நிற்கல் ஆற்றாக்
  • கட்டழகு அமைந்த கண்ணாள் நிறை எனும் சிறையைக் கைபோய்
  • இட்ட நாண் வேலி உந்திக் கடல் என எழுந்த வேட்கை
  • விட்டுஎரி கொளுவ நின்றாள் எரி உறு மெழுகின் நின்றாள்
   
711.
  • நலத்தை மத்து ஆக நாட்டி
  • நல்வலி இளமை வாராக்
  • குலப் பிறப்பு என்னும் கையால்
  • கோலப் பாசம் கொளுத்திக்
  • கலக்கி இன் காமம் பொங்கக்
  • கடைந்திடுகின்ற காளை
  • இலைப்பொலி அலங்கல் மார்பம்
  • இயைவது என்று ஆகும் கொல்லோ
   
712.
  • தீங் கரும்பு எருத்தில் தூங்கி ஈ இன்றி இருந்த தீம் தேன்
  • நாம் கணால் பருகியிட்டு நலன் உணப்பட்ட நம்பி
  • பூங் குழல் மகளிர் முன்னர்ப் புலம்பல் நீ நெஞ்சே என்றாள்
  • வீங்கிய காமம் வென்றார் விளைத்த இன்பத்தோடு ஒப்பாள்
   
713.
  • கண் எனும் வலையின் உள்ளான் கை அகப்பட்டு இருந்தான்
  • பெண் எனும் உழலை பாயும் பெருவனப்பு உடைய நம்பி
  • எண்ணின் மற்று யாவன் ஆம் கொல் என் இதில் படுத்த ஏந்தல்
  • ஒண்ணிற உருவச் செந்தீ உருவுகொண்ட அனைய வேலான்
   
714.
  • யாவனே யானும் ஆக அருநிறைக் கதவம் நீக்கிக்
  • காவல் என் நெஞ்சம் என்னும் கன்னி மாடம் புகுந்து
  • நோவ என் உள்ளம் யாத்தாய் நின்னையும் மாலை யாலே
  • தேவரின் செறிய யாப்பன் சிறிது இடைப்படுக என்றான்
   
715.
  • கழித்த வேல் ஏறு பெற்ற
  • கடத்து இடைப் பிணையின் மாழ்கி
  • விழித்து வெய்துயிர்த்து மெல்ல
  • நடுங்கித் தன்தோழி கூந்தல்
  • இழுக்கி வண்டு இரியச் சேர்ந்து ஓர்
  • கொடிப் புல்லும் கொடியின் புல்லி
  • எழில்தகை மார்பற்கு இன் யாழ்
  • இது உய்த்துக் கொடுமோ என்றாள்
   
716.
  • தடங் கணாள் பணியினால் தான் அவ்வீணை ஒன்றினை
  • நெடுங் கணால் எழினியை நீக்கி உய்த்து நீட்டினாள்
  • மடங்கல் அன்ன மொய்ம்பினான் வருக என்று கொண்டு தன்
  • கிடந்த ஞானத்து எல்லையைக் கிளக்கல் உற்று நோக்கினான்
   
717.
  • சுரந்து வானம் சூல் முதிர்ந்து மெய் நொந்து ஈன்ற துளியே போல்
  • பரந்த கேள்வித் துறை போய பைந்தார் மார்பன் பசும்பொன் யாழ்
  • நரம்பு தேன் ஆர்த்து எனத் தீண்டி நல்லாள் வீணை பொல்லாமை
  • இருந்த முலையாள் நின்றாளை நோக்கி இசையின் இது சொன்னான்
   
718.
  • நீர் நின்று இளகிற்று இது வேண்டா நீரின் வந்தது இதுபோக
  • வார் நின்று இளகும் முலையினாய் வாள் புண் உற்றது இது நடக்க
  • ஓரும் உரும் ஏறு இது உண்டது ஒழிக ஒண் பொன் உகு கொடியே
  • சீர்சால் கணிகை சிறுவன் போல் சிறப்பு இன்று அம்ம இது என்றான்
   
719.
  • கல் சேர் பூண் கொள் கதிர் முலையாய் காமத் தீயால் வெந்தவர்போல்
  • கொல்லை உழவர் சுடப் பட்டுக் குரங்கி வெந்தது இது களிறு
  • புல்ல முரிந்தது எனப் போக்கித் தூமம் ஆர்ந்த துகில் உறையுள்
  • நல் யாழ் நீட்ட அது கொண்டு நங்கை நலத்தது இது என்றான்
   
720.
  • இரு நில மடந்தை ஈன்றது இருவிசும்பு என்னும் கைத்தாய்
  • திருநலம் மின்னுப் பொன் ஞாண் முகில் முலை மாரித் தீம்பால்
  • ஒருநலம் கவின் ஊட்ட உண்டு நோய் நான்கும் நீங்கி
  • அருநலம் கவினி வாள்வாய் அரிந்து இது வந்தது என்றான்
   
721.
  • தீந் தொடை நரம்பின் தீமை சிறிது அலாப் பொழுதும் ஓதிப்
  • பூந் தொடை அரிவை காண புரி நெகிழ்த்து உரோமம் காட்டத்
  • தேங் கமழ் ஓதி தோற்றாள் செல்வனுக்கு என்ன மைந்தன்
  • வாங்குபு நபுலன் கையுள் வார்புரி நரம்பு கொண்டான்
   
722.
  • பணிவரும் பைம் பொன் பத்தர் பல்வினைப் பவள ஆணி
  • மணிகடை மருப்பின் வாளார் மாடக வயிரத் தீம்தேன்
  • அணிபெற ஒழுகி அன்ன அமிழ்து உறழ் நரம்பின் நல்யாழ்
  • கணிபுகழ் காளை கொண்டு கடல் அகம் வளைக்கல் உற்றான்
   
723.
  • குரல் குரல் ஆகப் பண்ணிக் கோதை தாழ் குஞ்சியான் தன்
  • விரல் கவர்ந்து எடுத்த கீதம் மிடறு எனத் தெரிதல் தேற்றார்
  • சுரரொடு மக்கள் வீழ்ந்தார் சோர்ந்தன புள்ளும் மாவும்
  • உருகின மரமும் கல்லும் ஓர்த்து எழீஇப் பாடுகின்றான்
   
724.
  • கன்னி நாகம் கலங்க மலங்கி
  • மின்னும் இரங்கும் மழை என்கோ யான்
  • மின்னும் மழையின் மெலியும் அரிவை
  • பொன் நாண் பொருத முலை என்கோ யான்
   
725.
  • கருவி வானம் கான்ற புயலின்
  • அருவி அரற்றும் மலை என்கோ யான்
  • அருவி அரற்றும் மலை கண்டு அழுங்கும்
  • மருவார் சாயல் மனம் என்கோ யான்
   
726.
  • வானம் மீன் அரும்பி மலர்ந்து
  • கானம் பூத்த கார் என்கோ யான்
  • கானம் பூத்த கார் கண்டு அழுங்கும்
  • தேன் ஆர் கோதை பரிந்து என்கோ யான்
   
727.
  • அண்ணல் யாழ் நரம்பை ஆய்ந்து மணிவிரல் தவழ்ந்த வாறும்
  • பண்ணிய இலயம் பற்றிப் பாடிய வனப்பும் நோக்கி
  • விண்ணவர் வீணை வீழ்த்தார் விஞ்சையர் கனிந்து சோர்ந்தார்
  • மண்ணவர் மருளின் மாய்ந்தார் சித்தரும் மனத்துள் வைத்தார்
   
728.
  • வீழ்மணி வண்டு பாய்ந்து மிதித்திடக் கிழிந்த மாலை
  • சூழ் மணிக் கோட்டு வீணைச் சுகிர் புரி நரம்பு நம்பி
  • ஊழ் மணி மிடறும் ஒன்றய்ப் பணி செய்தவாறு நோக்கித்
  • தாழ் மணித் தாம மார்பின் கின்னரர் சாம்பினாரே
   
729.
  • விண்ணவர் வியப்ப விஞ்சை வீரர்கள் விரும்பி ஏத்த
  • மண்ணவர் மகிழ வான் கண் பறவை மெய்ம் மறந்து சோர
  • அண்ணல்தான் அனங்கன் நாணப் பாடினான் அரசர் எல்லாம்
  • பண் அமைத்து எழுதப் பட்ட பாவை போல் ஆயினாரே
   
730.
  • பருந்தும் நிழலும் போல் பாட்டும் எழாலும்
  • திருந்து தார்ச் சீவகற்கே சேர்ந்தன என்று எண்ணி
  • விருந்தாக யாழ் பண்ணி வீணை தான் தோற்பான்
  • இருந்தாள் இளம் மயில் போல் ஏந்து இலை வேல் கண்ணாள்
   
731.
  • கோதை புறம் தாழக் குண்டலமும் பொன் தோடும்
  • காதின் ஒளிர்ந்து இலங்கக் காமர் நுதல் வியர்ப்ப
  • மாதர் எருத்தம் இடம் கோட்டி மா மதுர
  • கீதம் கிடை இலாள் பாடத் தொடங்கினாள்
   
732.
  • இலையார் எரிமணிப் பூண் ஏந்து முலையும்
  • சிலையார் திருநுதலும் செம் பசலை மூழ்க
  • மலையார் இலங்கு அருவி வாள் போல மின்னும்
  • கலையார் தீம் சொல்லினாய் காணார் கொல் கேள்வர்
   
733.
  • பிறையார் திருநுதலும் பேரமர் உண் கண்ணும்
  • பொறையார் வன முலையும் பூம் பசலை மூழ்க
  • நிறை வாள் இலங்கு அருவி நீள் வரை மேல் மின்னும்
  • கறைவேல் உண் கண்ணினாய் காணார் கொல் கேள்வர்
   
734.
  • அரும்பு ஏர் வன முலையும் ஆடு அமை மென் தோளும்
  • திருந்து ஏர் பிறை நுதலும் செம் பசலை மூழ்க
  • நெருங்கார் மணி அருவி நீள் வரை மேல் மின்னும்
  • கரும்பார் தீம் சொல்லினாய் காணார் கொல் கேள்வர்
   
735.
  • பண் ஒன்று பாடல் அது ஒன்று பல் வளைக் கை
  • மண் ஒன்று மெல் விரலும் வாள் நரம்பின் மேல் நடவா
  • விண் நின்று இயங்கி மிடறு நடு நடுங்கி
  • எண் இன்றி மாதர் இசை தோற்று இருந்தனளே
   
736.
  • மையார் நெடுங் கண்ணாள் மா மணி யாழ் தான் உடைந்து
  • நையா நடு நடுங்கா நனி நாணம் மீது ஊராப்
  • பொய்யாது ஓர் குன்று எடுப்பாள் போல் மெலிந்து பொன்மாலை
  • பெய் பூங் கழலாற்குப் பெண் அரசி ஏந்தினளே
   
737.
  • மெல் என்று சிலம்பு அரற்ற மேகலைகள் மின் உமிழ
  • நல்ல பெடையன்னம் நாண அடி ஒதுங்கி
  • ஒல்லென் உயர்தவமே செய்ம்மின் உலகத்தீர்
  • எல்லீரும் என்பாள் போல் ஏந்தல் மேல் வீழ்ந்தனளே
   
738.
  • நாகத்துப் படம் கொள் அல்குல் நலம் கிளர் செம்பொன் மாலை
  • மேகத்துப் பிறந்தது ஓர் மின்னு மணி வரை வீழ்ந்ததே போல்
  • ஆகத்துப் பூட்டி மைந்தன் அடி தொழுது இறைஞ்சி நின்றாள்
  • போகத்து நெறியைக் காட்டும் பூமகள் புணர்ந்தது ஒப்பாள்
   
739.
  • செம்மலர் அடியும் நோக்கித் திருமணி அல்குல் நோக்கி
  • வெம் முலைத் தடமும் நோக்கி விரிமதி முகமும் நோக்கி
  • விம்மிதப் பட்டு மாதோ விழுங்குவான் போல ஆகி
  • மைம்மலர்த் தடங் கண் நங்கை மரைமலர்த் தேவி என்றான்
   
740.
  • கோதையும் தோடும் மின்னக் குண்டலம் திருவில் வீச
  • மாதரம் பாவை நாணி மழை மினின் ஒசிந்து நிற்பக்
  • காதல் அம் தோழி மார்கள் கருங் கயல் கண்ணினாளை
  • ஏதம் ஒன்று இன்றிப் பூம் பட்டு எந்திர எழினி வீழ்த்தார்
   
741.
  • வெள் இலை வேல் கணாளைச் சீவகன் வீணை வென்றான்
  • ஒள்ளியன் என்று மாந்தர் உவாக் கடல் மெலிய ஆர்ப்பக்
  • கள்ளரால் புலியை வேறு காணிய காவல் மன்னன்
  • உள்ளகம் புழுங்கி மாதோ உரைத்தனன் மன்னர்க்கு எல்லாம்
   
742.
  • வடதிசைக் குன்றம் அன்ன வான் குலம் மாசு செய்தீர்
  • விடுகதிர்ப் பருதி முன்னர் மின்மினி விளக்கம் ஒத்தீர்
  • வடு உரை என்று மாயும் வாள் அமர் அஞ்சினீரேல்
  • முடி துறந்து அளியிர் போகி முனிவனம் புகுமின் என்றான்
   
743.
  • மல்லுப் பூத்து அகன்ற மார்பீர்
  • புகழ் எனும் போர்வை போர்த்துச்
  • செல்வப் பூ மகளும் நாளை
  • அவன் உழைச் செல்லும் என்றான்
  • முல்லைப் பூம் பந்து தன்னை
  • மும்மதக் களிற்று வேலிக்
  • கொல்லைப் பூங் குன்றம் செய்தீர்
  • குங்குமக் குழங்கல் மாலை
   
744.
  • திருமகள் இவளைச் சேர்ந்தான்
  • தெண் திரை ஆடை வேலி
  • இரு நில மகட்கும் செம்பொன்
  • நேமிக்கும் இறைவன் ஆகும்
  • செரு நிலத்து இவனை வென்றீர்
  • திருவினுக்கு உரியீர் என்றான்
  • கரு மனம் நச்சு வெம் சொல்
  • கட்டியங் காரன் அன்றே
   
745.
  • அனிச்சப் பூங் கோதை சூட்டின்
  • அம்மனையோ என்று அஞ்சிப்
  • பனிக்கும் நுண் நுசுப்பின் பாவை
  • ஒருத்தி நாம் பலர் என்று எண்ணித்
  • துனித்து நீர் துளங்கல் வேண்டாம்
  • தூமணிச் சிவிறி நீர் தூய்த்
  • தனிக் கயத்து உழக்கி வென்றீர்
  • தையலைச் சார்மின் என்றான்
   
746.
  • வெம் திறலாளன் கூற வேகமோடு உரறி மன்னர்
  • பந்தணி விரலினாள் தன் படா முலைப் போகம் வேண்டிக்
  • கந்து எனத் திரண்ட திண் தோள் கந்துகன் சிறுவன் காயும்
  • ஐந்தலை அரவின் சீற்றத்து ஆர் அழல் குளிக்கல் உற்றார்
   
747.
  • பண்ணியல் யானை மேலான் பது முகன் பரவைத் தானை
  • கண்ணியது உணர்ந்து கல்லாக் கட்டியங் காரன் நெஞ்சில்
  • எண்ணியது எண்ணி மன்னர் இகல் மலைந்து எழுந்த போழ்தில்
  • தண்ணிய சிறிய வெய்ய தழல் சொலால் சாற்று கின்றான்
   
748.
  • இசையினில் இவட்குத் தோற்றாம்
  • யானையால் வேறும் என்னின்
  • இசைவது ஒன்று அன்று கண்டீர்
  • இதனை யான் இரந்து சொன்னேன்
  • வசை உடைத்து அரசர்க்கு எல்லாம்
  • வழிமுறை வந்தவாறே
  • திசை முகம் படர்க வல்லே
  • தீத் தொட்டால் சுடுவது அன்றே
   
749.
  • தோளினால் மிடைந்து புல்லும்
  • தொண்டைவாய் அமிர்தம் வேட்டோர்
  • வாளினால் மலைந்து கொள்ளின்
  • வாழ்க நும் கலையும் மாதோ
  • கோள் உலாம் சிங்கம் அன்னான்
  • கொடியினை எய்தப் பெற்றீர்
  • தாளினால் நொய்யீராகித்
  • தரணிதாம் விடுமின் என்றான்
   
750.
  • நாறும் மும் மதத்தினாலே நாகத்தை இரிக்கும் நாகம்
  • ஆறிய சினத்தது அன்றி அதிங்கத்தின் கவளம் கொண்டால்
  • வேறு நீர் நினைந்து காணீர் யாவர்க்கும் விடுக்கல் ஆகாது
  • ஊறித் தேன் ஒழுகும் கோதை நம்பிக்கும் அன்னள் என்றான்
   
751.
  • இள வள நாகு புல்லி இனத்து இடை ஏறு நின்றால்
  • உள வளம் கருதி ஊக்கல் உழப்பு எருது உடையது ஆமே
  • தள வள முகை கொள் பல்லாள் சீவகன் தழுவி நின்றால்
  • கொள உளைந்து எழுவது அல்லால் கூடுதல் நுங்கட்கு ஆமோ
   
752.
  • எழுந்து விண் படரும் சிங்கம்
  • பெட்டைமேல் இவர்ந்து நின்றால்
  • மழுங்க மேல் சென்று பாய்தல்
  • மறப்புலி தனக்கும் ஆமோ
  • கொழுங் கயல் கண்ணினாளைச்
  • சீவக குமரன் சூழ்ந்தால்
  • அழுங்கச் சென்று அணைதல் பேய்காள்
  • அநங்கற்கும் ஆவது உண்டோ
   
753.
  • மத்திரிப்பு உடைய நாகம் வாய் வழி கடாத்தது ஆகி
  • உத்தமப் பிடிக்கண் நின்றால் உடற்றுதல் களபக்கு ஆமே
  • பத்தினிப் பாவை நம்பி சீவகன் பாலள் ஆனால்
  • அத்திறம் கருதி ஊக்கல் அரசிர்காள் நுங்கட்கு ஆமோ
   
754.
  • தூமத்தால் கெழீஇய கோதை
  • தோள் துணை பிரித்தல் விண்மேல்
  • தாமத்தால் கெழீஇய மார்பன்
  • இந்திரன் தனக்கும் ஆகாது
  • ஏம் உற்றீர் இன்னும் கேண்மின்
  • இரதியைப் புணர்தும் என்று
  • காமத்தால் கெழுமினார்க்குக்
  • காமனில் பிரிக்கல் ஆமே
   
755.
  • எம்மை நீர் வெல்லப் பெற்றீர்
  • வென்றபின் இருந்த வேந்தன்
  • நும்மையும் வேறு செய்து
  • நும் உளே பொருது வீந்தால்
  • வெம்மை செய்து உலகம்
  • எல்லாம் ஆண்டிட விளைக்கும் நீதி
  • அம்ம மற்று அதனை ஓரீர்
  • அவன் கருத்து அன்னது என்றான்
   
756.
  • சொல் திறல் அன்றி மன்னீர் தொக்கு நீர் காண்மின் எங்கள்
  • வில் திறல் என்று வில் வாய் வெம் கணை தொடுத்து வாங்கிக்
  • கல் திரள் கழிந்து மண்ணுள் கரந்து அது குளிப்ப எய்திட்டு
  • இற்று எமர் கல்வி என்றான் இடி உருமேற்றொடு ஒப்பான்
   
757.
  • ஆழி அம் கழனி தன்னுள்
  • அம்பொடு கணையம் வித்திச்
  • சூழ் குடர்ப் பிணங்கள் மல்க
  • விளைத்த பின் தொழுதிப் பல்பேய்க்கு
  • ஊழ்படு குருதி நெய்யின்
  • இறைச்சிச் சோறு ஊட்டி வென்றி
  • வீழ்தர வேட்டு நின்றார்
  • எய்துப வெகுளல் வேண்டா
   
758.
  • போர்ப் பறை முழங்கி எங்கும்
  • பொருவளி புடைக்கப் பட்ட
  • கார்க் கடல் போன்று சேனை
  • கலக்கமோடு உரறி ஆர்ப்பத்
  • தார் பொலி மார்பன் ஓர்த்துத்
  • தன் கையில் வீணை நீக்கி
  • வார் பொலி முலையினாட்கு
  • வாய் திறந்து இதனைச் சொன்னான்
   
759.
  • தேய்ந்து நுண் இடை நைந்து உகச் செப்பினைக்
  • காய்ந்த வெம் முலையாய் நின கண்கள்போல்
  • ஆய்ந்த அம்பினுக்கு ஆர் இரை ஆகிய
  • வேந்தர் வேண்டி நின்றார் விம்மல் நீ என்றான்
   
760.
  • அண்ணல் கூறலும் அம்மனையோ எனாத்
  • துண் என் நெஞ்சினளாய்த் துடித்து ஆய் இழை
  • கண்ணின் நீர் முலை பாயக் கலங்கினாள்
  • வண்ண மாக் கவின் சொல்லொடு மாய்ந்ததே
   
761.
  • மேவி நம்பிக்கு வெம் பகை ஆக்கிய
  • பாவியேன் உயிர் பாழ் உடல் பற்று விட்டு
  • ஆவியோ நடவாய் என்று அழுது தன்
  • காவி வாள் கண் கலங்க அதுக்கினாள்
   
762.
  • பாழி நம் படை மேல் அது இப் பார் எலாம்
  • நூழில் ஆட்டி நுடக்கிக் குடித்திடும்
  • வாழி நங்கை கண்டாய் என்று வாள் கண் நீர்
  • தோழி தூத்துகில் தோகையின் நீக்கினாள்
   
763.
  • எங்கள் பெண்மையும் ஈர்மலர்த் தார் மன்னர்
  • தங்கள் ஆண்மையும் சால்வது காண்டும் என்று
  • இங்கு வார் முரலும் கலை ஏந்து அல்குல்
  • நங்கை வாள் படை நங்கையைச் சூழ்ந்ததே
   
764.
  • கூன்களும் குறளும் அஞ்சிக்
  • குடர் வெந்து கொழும் பொன் பேழை
  • தான் கொளப் பாய ஓடிச்
  • சாந்துக் கோய் புகிய செல்வ
  • தேன் கொள் பூமாலை சூடித்
  • தாமம் ஆய்த் திரண்டு நிற்ப
  • வான் பளிங்கு உருவத் தூணே
  • மறைபவும் ஆய அன்றே
   
765.
  • இங்கித நிலைமை நோக்கி
  • முறுவலித்து எரிபொன் மார்பன்
  • நங்கையைக் காக்கும் வண்ணம்
  • நகா நின்று மொழிந்து பேழ்வாய்ச்
  • சிங்கம் தான் கடியது ஆங்கு ஓர்
  • செழும் சிங்க முழக்கின் சீறிப்
  • பொங்கி மேல் செல்வதே போல்
  • பொலங் கழல் நரலச் சென்றான்
   
766.
  • பதுமுக குமரன் மற்று இப் பாவையைக் காவல் ஓம்பி
  • மதுமுக மாலை நெற்றி மதகளிறு உந்தி நிற்ப
  • நுதிமுக வாளும் வில்லும் நுண் இலை வேலும் ஏந்திச்
  • சதுமுகம் ஆகச் சேனை நமர் தலைப் பெய்க என்றான்
   
767.
  • வட்டு உடை மருங்குல் சேர்த்தி
  • வாள் இரு புடையும் வீக்கித்
  • தட்டு உடைப் பொலிந்த திண் தேர்
  • தனஞ்சயன் போல ஏறிக்
  • கட்டளைப் புரவி சூழ்ந்து
  • கால் புடை காப்ப ஏவி
  • அட்டு உயிர் பருகும் கூற்றம் கோள்
  • எழுந்த அனையது ஒத்தான்
   
768.
  • புள் இரைப்பு அன்ன பொன் தார்ப்
  • புரவித் தேர் இரவி போலா
  • உள் உறுத்து எழுந்து பொங்கி
  • உடல் சினம் கடவ நோக்கி
  • முள் எயிறு இலங்க நக்கு
  • முடிக் குழாம் மன்னர் கேட்பக்
  • கள் அவிழ் அலங்கல் மார்பன்
  • கார் மழை முழக்கின் சொன்னான்
   
769.
  • முருகு உலா முல்லை மாலை
  • மூப்பு இலா முலையினார் நும்
  • அருகு உலாம் புலவி நோக்கத்து
  • அமிர்தம் இன்று உகுப்ப கொல்லோ
  • கருதலாம் படியது அன்றிக்
  • கலதி அம்பு இவையும் காய்ந்த
  • பொருது உலாம் புகழை வேட்டு
  • இவ் எஃகமும் புகைந்த என்றான்
   
770.
  • வாணிகம் ஒன்றும் தேற்றாய் முதலொடும் கேடு வந்தால்
  • ஊண் இகந்து ஈட்டப்பட்ட ஊதிய ஒழுக்கின் நெஞ்சத்து
  • ஏண் இகந்து இலேசு நோக்கி இருமுதல் கெடாமை கொள்வார்
  • சேண் இகந்து உய்யப் போ நின் செறிதொடி ஒழிய என்றார்
   
771.
  • தம்முடைப் பண்டம் தன்னைக்
  • கொடுத்து அவர் உடைமை கோடல்
  • எம்முடையவர்கள் வாழ்க்கை
  • எமக்கும் அஃது ஒக்கும் அன்றே
  • அம்முடி அரசிர்க்கு எல்லாம்
  • என் கையில் அம்பு தந்து
  • நும்முடைத் திருவும் தேசும்
  • நோக்குமின் கொள்வல் என்றான்
   
772.
  • மட்டு உலாம் தாரினாய் நின்
  • வனப்பினோடு இளமை கல்வி
  • கெட்டு உலாய்ச் சிலம்பு செம் பொன்
  • கிண்கிணி மகளிர் கோங்க
  • மொட்டு உலாய் முலைகள் பாய்ந்த
  • அகலத்துச் சரங்கள் மூழ்கப்
  • பட்டு உலாய்க் கிடக்கல் உற்றாய்
  • என் சொலாய் பாவி என்றார்
   
773.
  • எரிசுடர்ப் பருதி முன்னர்
  • இருள் என உடைந்து நீங்கப்
  • பொருபடை மன்னர் நுங்கள்
  • புறக் கொடை கண்டு மற்று இம்
  • முருகு உடைக் குழலினாள் தன்
  • முகிழ் முலை கலப்பல் அன்றேல்
  • இருசுடர் வழங்கும் வையத்து
  • என்பெயர் கெடுக என்றான்
   
774.
  • ஆள் மர வாள் நிலத்து அப்பு வேல் செய்முள்
  • காண் வரு காட்டு இனக் களிற்று நீள் வரை
  • நீள் நில வேந்து எனும் வேழப் பேர் இனம்
  • பூண் முலைப் பிடிக்கு அவாய்ப் போர் செய்குற்றவே
   
775.
  • தாழ் இரும் தடக்கையும் மருப்பும் தம்பியர்
  • தோழர் தன் தாள்களாச் சொரியும் மும்மதம்
  • ஆழ் கடல் சுற்றமா அழன்று சீவக
  • ஏழுயர் போதகம் இனத்தொடு ஏற்றதே
   
776.
  • குடை உடை வேந்து எனும் குழாம் கொள் நாகமும்
  • கொடி எனும் பிடி உடைக் குமர வேழமும்
  • வெடிபடு போர்த் தொழில் காண விஞ்சையர்
  • இடி உடை இன மழை நெற்றி ஏறினார்
   
777.
  • கரை பொரு கடலொடு கார் கண் உற்று என
  • முரைசொடு வரி வளை முழங்கி ஆர்த்தன
  • அரைசரும் அமர் மலைந்து அரணம் வீசினார்
  • குரை கடல் தானை போர்க் கோலம் செய்தவே
   
778.
  • தெய்வதம் வணங்குபு செம்பொன் வாயுள் இட்டு
  • எய் கணைப் படுமழை சிதறி எங்கணும்
  • மொய் அமர் மலைந்தனர் முருகு விம்முதார்ச்
  • செய் கழல் சீவகன் வாழ்க என்னவே
   
779.
  • கலந்தது பெரும் படை கணை பெய் மாரி தூய்
  • இலங்கின வாள் குழாம் இவுளி ஏற்றன
  • விலங்கின தேர்த்தொகை வேழம் காய்ந்தன
  • சிலம்பின இய மரம் தெழித்த சங்கமே
   
780.
  • சுற்று அணி கொடும் சிலை மேகம் தூவிய
  • முற்று அணி பிறை எயிற்று அம்பு மூழ்கலின்
  • அற்று வீழ் குழை முகம் அலர்ந்த தாமரை
  • மற்று அவை சொரிவது ஓர் மாரி ஒத்தவே
   
781.
  • மறப் படை பசித்தன வயிறு இன்று ஆர்க எனக்
  • குறைத்தனர் குஞ்சரம் கூந்தல் மாத் துணித்து
  • இறக்கினரோடு தேர் மைந்தர் இன் உயிர்
  • துறக்கம் போய்ப் புகுக எனத் துணிய நூறினார்
   
782.
  • ஆற்றுவீர் வம்மின் எம்மோடு
  • ஆண்மை மேம்படீஇய என்பார்
  • ஏற்றவர் மார்பத்து அல்லால்
  • இரும்பு மேல் விடாது நிற்பார்
  • கூற்றம் போல் கொடிய யானைக்
  • கோடு உழுது அகன்ற மார்பம்
  • கீற்றுப் பட்டு அழகிதாகக்
  • கிடக்க எனக் கொடுத்து நிற்பார்
   
783.
  • கழித்து வாள் அமலை ஆடிக்
  • காட்டுவார் கண்கள் செந்தீ
  • விழித்து மேல் சென்ற வேழம்
  • வேலினால் விலக்கி நிற்பார்
  • தெழித்துத் தேர்க் கயிறு வாளால்
  • அரிந்திட்டுப் புரவி போக்கிப்
  • பழிப்பு இல கொணர்ந்து பூட்டு
  • பாக நீ என்று நிற்பார்
   
784.
  • ஐங் கதிக் கலினப் பாய் மாச் சிறிது
  • போர் களை ஈது என்பார்
  • வெம் கதிர் வேலில் சுட்டி
  • வேந்து எதிர் கொண்டு நிற்பார்
  • நங்கை கல்யாணம் நன்றே
  • நமக்கு என நக்கு நிற்பார்
  • சிங்கமும் புலியும் போன்றார்
  • சீவகன் தோழன் மாரே
   
785.
  • ஒருங்கு அவன் பிறந்த ஞான்றே
  • பிறந்தவர் உதயத்து உச்சி
  • இரும்பினால் பின்னி அன்ன
  • எறுழ் வலி முழவுத் தோளார்
  • விரும்புவார் வேழ வேல் போர்
  • நூற்றுவர் நூறு கோடிக்கு
  • இருந்தனம் வருக என்பார்
  • இன்னணம் ஆயினாரே
   
786.
  • கூட்டு உற முறுக்கி விட்ட
  • குய மகன் திகிரி போல
  • வாள் திறல் தேவ தத்தன்
  • கலின மா மாலை வெள்வேல்
  • ஈட்டம் போழ்ந்து யானை நெற்றி
  • இரும் குளம்பு அழுத்தி மன்னர்
  • சூட்டொடு கண்ணி சூளாமணி
  • சிந்தித் திரியும் அன்றே
   
787.
  • பாய்ந்தது கலின மாவோ
  • பறவையோ என்ன உட்கி
  • வேந்தர்தம் வயிறு வேவ
  • நபுல மாவிபுலர் என்பார்
  • காய்ந்து தம் புரவிக் காமர்
  • குளம்பினால் களிற்றின் ஓடை
  • தேய்ந்து உகச் சேர்த்தி மாலைத்
  • திருமுடித் திலகம் கொண்டார்
   
788.
  • காயத்தின் குழம்பு தீற்றிக்
  • கார் இரும்பு எறிய மேகம்
  • தோயும் முள் இலவின் கூன் காய்
  • சினை தொறும்உதிர்வவே போல்
  • மாயம் கொல் மறவர் மாலைப்
  • பைந்தலை உதிர்ந்த செங் கண்
  • சேய் அனான் திருவின் பேரான்
  • செழுஞ் சிலைப் பகழியாலே
   
789.
  • நீல் நிறப் பௌவம் மேய்ந்து சூல் முற்றி நீல மேகம்
  • வால் நிற விசும்பின் நின்ற மாரியின் மறை வலாளன்
  • போன் நிறப் புத்தி சேனன் பொன் அணி பகழி சிந்தி
  • வேல் நிற மன்னர் சேனை கூற்றிற்கு விருந்து செய்தான்
   
790.
  • வீர வேல் உடம்பு எலாம் சூழ வெம் புலால்
  • சோரும் செங்குருதியுள் மைந்தர் தோன்றுவார்
  • ஒருமேல் ஒண்மணிச் சூட்டு வைக்கிய
  • ஆரமே அமைந்த தேர்க் குழிசி ஆயினார்
   
791.
  • பொன் அனாள் புணர் முலைப் போகம் வேண்டிய
  • மன்னரோடு இளையவர் மறலி வாள் அமர்
  • இன்னணம் இத்தலை மயங்க அத்தலைக்
  • கொல் நவில் வேலினான் நிலைமை கூறுவாம்
   
792.
  • தம்பியைச் சீவகன் நோக்கிச் சாமரை
  • வெம் பரி மான் செவி வீரமந்திரம்
  • இம்பர் நம் இடர் கெட இரண்டும் வல்லையாய்
  • நம்பி நீ மொழிக என நயந்து கூறினான்
   
793.
  • மந்திரம் கேட்டு நான்கும் வான் எட்டிப் புகுவவே போல்
  • அந்தரத்து இவர்ந்த ஆழிக் கால் நிலம் விட்ட மாலைச்
  • சுந்தரச் சுண்ண மேனி மகளிர்தம் கண்ணுள் இட்ட
  • மைந்தரும் இரும்பும் ஒவ்வா வான் புலம் காவல் கொண்டார்
   
794.
  • வடி கயிறு ஆய்ந்து முள்கோல் வலக் கையால் தாங்கி வென்றி
  • முடிகெனப் புரவி முள்ளால் உறுத்தினான் மொழிதல் தேற்றேன்
  • கடுகிய வண்ணம் மாவின் தாரொலி காமர் பொன்தேர்
  • படையது செவியும் கண்ணும் பற்றி நின்றிட்ட அன்றே
   
795.
  • அண்ணல் தேர் பறவை என்பார் அருவமே உருவம் என்பார்
  • மண்ணதே வான் அது என்பார் மனத்ததே முகத்தது என்பார்
  • கண்ணதே செவி அது என்பார் கலங்க நூல் கழிய நோக்கிப்
  • பண்ணிய வீதி பற்றி மண்டலம் பயிற்றினானே
   
796.
  • அகில் கொண்ட கொள்ளி வட்டம் ஆர் உயிர் மேயும் நேமி
  • முகில் கொண்ட மின்னுத் தோற்ப முறுகிய விசை இற்றாகி
  • மிகல் கொண்ட இகலைத் தானே விழுங்கிய சிறகர்த் தோற்றிப்
  • பகல் கொண்டு பறக்கும் தேரால் காளை தன் பைம்பொன் தேரே
   
797.
  • கால் அற்ற வயிர மாலை வெண்குடை கவிழ்ந்த பிச்சம்
  • மேல் அற்ற கவசம் வீழ்ந்த சாமரை அற்ற வில் ஞாண்
  • மால் உற்ற மன்னர் தங்கள் மனம் கையற்று ஒழிந்த வள்ளல்
  • கோல் ஒற்றக் குனிந்த வாறே சிலை குனிந்து ஒழிந்தது அன்றே
   
798.
  • நுங்களை வீணை வென்ற நூபுர அடியினாள் தன்
  • வெம் களித் தடங்கண் கண்டீர் விருந்து எதிர் கொள்மின் என்னா
  • அம் களி அரசர்க்கு எல்லாம் ஓர் ஒன்றும் இரண்டும் ஆகச்
  • செம் களிப் பகழி ஒப்பித்து உள்ளவாறு ஊட்டினானே
   
799.
  • நன் மன வேந்தர் தங்கள் நகை மணி மார்பம் நக்கிப்
  • புன் மன வேந்தர் தங்கள் பொன் அணி கவசம் கீறி
  • இன் உயிர் கவர்ந்து தீமை இனிக் கொள்ளும் உடம்பினாலும்
  • துன்னன்மின் என்பவே போல் சுடுசரம் பரந்த அன்றே
   
800.
  • மீன் எறி தூண்டில் போன்ற வெம் சிலை நாண்கள் அற்ற
  • தேன் எறி குன்றம் ஒத்த திண் கச்சை துணிந்த வேழம்
  • மான் நெறி காட்டும் திண்தேர் கயிறு அற்று மறிய வேந்தர்
  • ஊன் எறி ஆழி ஏந்தி ஒய் என உலம்பி ஆர்த்தார்
   
801.
  • ஆர்ப்பு எதிர் மாரி பெய்யும் அணி நெடுங் குன்றம் போலப்
  • போர்க்கு எதிர்ந்தவரும் ஆர்த்தார் ஆர்த்தலும் பூண்ட வல்வில்
  • கார்க்கு எதிர் மேகம் போலக் கணைமழை கான்றது இப்பால்
  • ஈர்த்தது குருதி வெள்ளம் இறைச்சிக் குன்று ஆக்கினானே
   
802.
  • மன்னர்கள் வெகுண்டு விட்ட மறப் படை அழுவ மாரி
  • கொல் நுனை எஃகின் நீக்கிக் குனிந்துவில் பகழி கான்ற
  • மின் அவிர் இலங்கும் ஒள்வாள் விழித்து உயிர் விழுங்க இன்ன
  • தன்மையால் தானை நீந்தித் தான் விளையாடு கின்றான்
   
803.
  • வேழ வெண் கோட்டு மெல் கோல் தின்று கூன் குருதி வாளால்
  • ஆழ நா வழித்து நெய்த்தோர் கொப்புளித்து அழிந்த மாவின்
  • சூழ் குடர்க் கண்ணி சூடி நிணத் துகில் உடுத்து வெள் என்பு
  • ஊழ் பெற அணிந்து சூல் பேய் ஆடக் கண்டு உவந்து நக்கான்
   
804.
  • வெளிற்று உடல் குருதி வெள்ள நிலை இது என்பவே போல்
  • களிற்று உகிர்ப் பிறழ் பல் பேய்கள் கைகளை உச்சிக் கூப்பி
  • அளித்தவை பாடி ஆடக் குறு நரி நக்கு வேழம்
  • விளித்தன கழுகும் பாறும் விலா இற்றுக் கிடந்த அன்றே
   
805.
  • கடல் விளை அமுதம் கண்ட
  • பொழுதின் நெய் கனிந்த தீம் சோற்று
  • அடிசில் அம் சுவை மிக்கு ஆங்கு
  • அண்ணல் அம் குமரன் ஒன்னார்
  • உடலின் மேல் திரியும் திண்தேர்
  • காண்டலும் மைந்தர் நெஞ்சத்
  • திடல் பிளந்து இட்ட எஃகம்
  • சுமந்து அமர்த் திறத்தின் மிக்கார்
   
806.
  • கடாம் திறந்திட்டு வானின்
  • களகள முழங்கும் வேழம்
  • படாம் திறந்து ஊழித் தீயின்
  • பதுமுகன் காட்டியிட்டான்
  • தடாம் பிறை மருப்புத் திண்கை
  • அபர காத்திரங்கள் தம்மால்
  • கொடாம் பிற குமரிப் போருள்
  • பிறர்க்கு எனக் கொன்றது அன்றே
   
807.
  • மருப்பினால் வேழம் வீழா
  • மன்னரை வாலில் சீறா
  • முருக்கித் தேர் தடக்கை தன்னால்
  • முழங்கிப் பாய் மாக்கள் காலின்
  • நெரித்திடாக் கண்ணுள் தீயால் சுட்டு
  • நீறு ஆக்கி நெய்த்தோர்
  • ஒருக்கிப் பேய் பாடி ஆட
  • உறுசிலை உடன்று கொண்டான்
   
808.
  • கொண்டான் பகழி தொடுத்தான் சிலை கால் குனிந்தது
  • ஒண் தேர் மிசையும் உருவக் களிற்று உச்சி மேலும்
  • வண் தார்ப் புரவி நிறுத்தும் மற மன்னர் மேலும்
  • கண்டான் சொரிந்தான் கணை மாரி கலந்தது அன்றே
   
809.
  • பைம் பொன் புளகப் பருமக்
  • களியானை ஈட்டம்
  • செம் பொன் நெடுந் தேர்த் தொகை
  • மாக் கடல் சேனை வெள்ளம்
  • நம்பன் சிலை வாய் நடக்கும்
  • கணை மிச்சில் அல்லால்
  • அம்பொன் மணிப் பூண் அரசும்
  • இலை என்று நக்கான்
   
810.
  • ஒருவனே சிலையும் ஒன்றே உடையது ஓர் களிற்றின் மேலான்
  • அருவரை மார்பில் சென்றது அறிந்திலன் எஃகம் இன்னும்
  • பொருவரோ மன்னர் என்றான் பொருசிலை மடக்கி இட்டார்
  • வரு களி யானை மீட்டார் வாள் படை வாங்கிக் கொண்டார்
   
811.
  • செங்கண் மால் தெழிக்கப் பட்ட வலம்புரித் துருவம் கொண்ட
  • சங்குவாய் வைத்து நம்பன் தெழித்தலும் தறுகண் ஆளி
  • பொங்கிய முழக்கில் வேழப் பேரினம் புலம்பினால் போல்
  • தங்கு தார் மன்னர் எல்லாம் தளர்ந்து கண் சாம்பினாரே
   
812.
  • அருவரை நாகம் சுற்றி ஆழியான் கடைய அன்று
  • கருவரை குடையப் பட்ட கடல் எனக் கலங்கி வேந்தர்
  • திருவரை மார்பன் திண்தேர் மஞ்ஞையே முருகன் தான் என்று
  • ஒருவரோடு ஒருவர் கூடா வண்ணமே உடையல் உற்றார்
   
813.
  • முளி மரக்காடு மேய்ந்த முழங்கல் போன்று மைந்தன்
  • தெளி நலக் குமரர் கூற்றின் தெழித்தனர் பகழி சிந்தி
  • ஒளி நலம் உப்புக் குன்றம் ஊர் புனற்கு உடைந்ததே போல்
  • களி நல மன்னர் தங்கள் கடல் படை உடைந்தது அன்றே
   
814.
  • உறுபடை மன்னர் தம்மை உடற்றி ஒன்றானும் இன்றிச்
  • சிறுபடையவர்கள் வென்று செகுப்பவோ என்ன வேண்டா
  • செறி எயிற்று ஆளி வேழப் பேரினம் செகுத்தது அன்றே
  • உறுபுலி ஒன்றுதானே கலை இனம் உடற்றிற்று அன்றே
   
815.
  • நல்லவை புரியும் மாந்தர் நாந்தகம் பிழைத்து வீழா
  • அல்லவை புரியும் மாந்தர்க்கு அத்திரம் ஒன்றும் வாயா
  • வெல்வதோ குணத்தின் மிக்கார் வெற்றிலை விடினும் வேலாம்
  • இல்லையே வென்றி தீமை இடம் கொண்ட மனத்தினார்க்கே
   
816.
  • குழை உடை முகத்தினாள் கண் கோணைப் போர் செய்த மன்னர்
  • மழையிடை மின்னின் நொய்தா மறைந்தனர் விஞ்சை வேந்தர்
  • முழையுடைச் சிங்கம் அன்னான் மொய் அமர் ஏத்தி ஆர்த்தார்
  • விழவுடை வீதி மூதூர் விருப்பொடு மலிந்தது அன்றே.
   
817.
  • பார்மிசை உலகம் ஏத்தும் படுகளம் கண்டு பற்றார்
  • போர்முகக் களிற்று வெண்கோடு உழுத செஞ் சால் கொள் மார்பின்
  • சீர் முகத் தோழர் சூழச் சீவகன் திருவின் சாயல்
  • வார் முக முலையினாளை மனை வயின் கொண்டு புக்கான்
   
818.
  • நெய்க் கிழி வைக்கப் பட்டார் நெய்ப் பத்தல் கிடத்தப் பட்டார்
  • புக்குழி எஃகம் நாடி இரும்பினால் போழப் பட்டார்
  • மைக்கு இழிந்து ஒழுகும் கண்ணீர் மா நிலத்து உகுக்கப் பட்டார்
  • கைக் கிழி கொடுக்கப் பட்டார் கலம் பல நல்கப் பட்டார்
   
819.
  • முது மரப் பொந்து போல முழு மெயும் புண்கள் உற்றார்க்கு
  • இது மருந்து என்ன நல்லார் இழுது சேர் கவளம் வைத்துப்
  • பதுமுகன் பரவை மார்பின் நெய்க் கிழி பயிலச் சேர்த்தி
  • நுதி மயிர்த் துகில் குப்பாயம் புகுக என நூக்கினானே
   
820.
  • பார் கெழு பைம் பொன் தன்னால் பண்ணவன் உருவம் ஆக்கி
  • ஊர் கெழு விழவு செய்து ஆங்கு உறு பொருள் உவப்ப நல்கித்
  • தார் கெழு மின்னு வீசித் தனிவடம் திளைக்கும் மார்பன்
  • போர் கெழு களத்துப் பாவம் புலம்பொடு போக்கினானே
   
821.
  • செய்த அப் பாவம் எல்லாம் தீர்த்திடும் தீர்த்தன் பாதம்
  • எய்திய சேடம் கூவித்து இறைஞ்சுபு தொழுது வாழ்த்தி
  • மை அறு மணியின் செய்த வலம்புரி அதன் நீர் கொண்டான்
  • வையகம் அளிக்க நீண்ட வலம்புரித் தடக்கை யானே
   
822.
  • கருமணி அழுத்திய காமர் செங் கதிர்த்
  • திருமணிச் செப்பு எனச் செறிந்த வெம் முலை
  • அருமணி அலம் வரும் அம்பொன் கொம்பு அனாள்
  • பெரு மணக் கிழமை யாம் பேசுகின்றதே
   
823.
  • நான்கு நூறு ஆயிரம் குடத்து நல்லன
  • ஆன் தயிர் பால் நெயொடு அழகிதா நிறைத்து
  • ஊன் திகழ் வேலினான் வேள்விக்கு ஊர்மருள்
  • கோன் தொறுக் காவலன் கொண்டு முன்னினான்
   
824.
  • வளை நிற வார் செந் நெல் அரிசிப் பண்டியோடு
  • அளவு அறு சருக்கரைப் பண்டி ஆர்ந்தன
  • பிளவு இயல் பயறு பெய் பண்டி உப்பு நீர்
  • விளைவு அமை பண்டியின் வெறுத்தது ஆங்கு ஓர் பால்
   
825.
  • சினைத் துணர் முழவு அன பலவின் தீம் கனி
  • கனைத்து வண்டு உழல்வன வாழை மாங் கனி
  • எனைத்து உள கிழங்கு காய் குருகொடு ஏந்திய
  • சனத்தினால் தகைத்து இடம் பெறாது தான் ஓர் பால்
   
826.
  • மரகத மணிப் பசும் காய் கொள்வான் குலை
  • கவர் பழுக் காய்க் குலை கனியக் கா உறீஇ
  • இவர் தரு மெல் இலைக் காவும் ஏந்திய
  • உவரியாய்ச் சொரிந்து இடம் பெறாது தான் ஓர் பால்
   
827.
  • சண்பகம் தமநகம் தமாலம் மல்லிகை
  • தண் கழுநீரொடு குவளை தாமரை
  • வண்டு இனம் மிசை கொள வாசப் பூச் சுமை
  • கொண்டவர் குழாம் பொலிவு உற்றது ஆங்கு ஓர் பால்
   
828.
  • ஆர் கெழு குறடு சூட்டு ஆழி போன்றவன்
  • சீர் கெழு வள மனை திளைத்து மாசனம்
  • கார் கெழு கடல் எனக் கலந்த அல்லதூஉம்
  • பார் கெழு பழுமரப் பறவை ஒத்தவே
   
829.
  • கை உறை எழுதினர் கை நொந்து ஏடு அறுத்து
  • ஐ என இருப்ப மற்றன்னது ஆதலான்
  • வையக மருங்கினில் வாழ்நர் மற்று இவன்
  • செய் தவம் நமக்கு இசைக என்னச் சென்றதே
   
830.
  • வால் அரி கழுவிய வண்ணச் செம்புனல்
  • கால் இயல் இவுளியும் களிறும் ஆழ்ந்து அவண்
  • கோல நீர்க் குவளையும் மரையும் பூத்து வண்டு
  • ஆலி இவண் குருகு பாய் தடங்கள் ஆனவே
   
831.
  • உடுப்பன துகில்களும் உரைக்கும் நானமும்
  • தொடுத்தன மாலையும் குழையும் சாந்தமும்
  • கொடுப்பவர் கொள்பவர் வீழ்த்த பல் கலம்
  • அடுத்து விண் பூத்தது ஓர் அழகின் மிக்கதே
   
832.
  • இலங்கு பொன் கிண் கிணி இரங்கும் ஓசையும்
  • உலம்பு மால் உவர்க் கடல் ஒலியின் மிக்கவே
  • கலம் கழும் அரவமும் கருனை ஆக்குவார்
  • சிலம்பு ஒலி அரவமும் மிச்சில் சீப்பவர்
   
833.
  • மூழி வாய் முல்லை மாலை முருகு உலாம் குழலினாளும்
  • ஊழி வாய்த் தீயொடு ஒக்கும் ஒளிறு வாள் தடக்கையானும்
  • ஆழிவாய் விரலில் காமன் அம்பொடு சிலை கை ஏந்தத்
  • தாழி வாய்க் குவளை வாள் கண் தையலார் பரவச் சார்ந்தார்
   
834.
  • இன்னியம் முழங்கி ஆர்ப்ப ஈண்டு எரி திகழ வேதம்
  • துன்னினர் பலாசில் செய்த துடுப்பின் நெய் சொரிந்து வேட்ப
  • மின் இயல் கலசம் நல்நீர் சொரிந்தனன் வீரன் ஏற்றான்
  • முன்னுபு விளங்கு வெள்ளி முளைத்து எழ முருகன் அன்னான்
   
835.
  • இட்ட உத்தரியம் மின்னும் எரிமணிப் பருமுத்து ஆரம்
  • மட்டு அவிழ் கோதை வெய்ய வருமுலை தாங்கல் ஆற்றா
  • நெட்டு இரும் கூந்தலாள் தன் நேர்வளை முன்கை பற்றிக்
  • கட்டு அழல் வலம் கொண்டு ஆய் பொன்கட்டில் தான் ஏறினானே
   
836.
  • மந்திரத்து அரசன் காதல் மாதர் அம் பாவை தன்னைக்
  • கந்துகன் சிறுவன் வேட்ட கடிவினை நொடியின் மற்று ஓர்
  • அந்தர விசும்பில் தேவர்க்கு அதிபதி ஆய கோமான்
  • இந்திரன் தனக்கும் ஆகாது என்பது நடந்தது அன்றே
   
837.
  • அடி மனை பவளம் ஆக அரும் பொன்னால் அலகு சேர்த்தி
  • முடி மணி அழுத்திச் செய்த மூரிக் காழ் நெற்றி மூழ்கக்
  • கடி மலர் மாலை நாற்றிக் கம்பல விதானம் கோலி
  • இடு புகை மஞ்சில் சூழ மணவறை இயற்றினாரே
   
838.
  • ஐந்து மூன்று அடுத்த செல்வத்து
  • அமளி மூன்று இயற்றிப் பூம்பட்டு
  • எந்திர எழினி வாங்கி
  • இன் முக வாசச் செப்பும்
  • சந்தனச் சாந்தச் செப்பும்
  • தண்மலர் மாலை பெய்த
  • இந்திர நீலச் செப்பும்
  • இளையவர் ஏந்தினாரே
   
839.
  • கடைந்து பெய் மணிக்கைச் செம்பொன்
  • காசு அறுதட்டின் சூழ்ந்து
  • மிடைந்து பெய் மணிக் கண் பீலி
  • மின்னு சாந்து ஆற்றி பொன்னார்
  • அடைந்து வீசு ஆல வட்டம்
  • அரிவையர் ஏந்தி ஆற்றத்
  • தடங் கண்கள் குவளைப் பூப்பத்
  • தையலோடு ஆடும் அன்றே
   
840.
  • பஞ்சு சூழ் பரவை அல்குல் பசும் கதிர்க் கலாபம் வீங்கச்
  • செந் தளிர்க் கோதை சோரக் கிண்கிணி சிலம்பொடு ஏங்க
  • மைந்தருள் காமன் அன்னான் மகளிருள் திரு அனாளை
  • அந்தரத்து அமரர் பெற்ற அமிர்து எனப் பருகினானே
   
841.
  • இளமுலை மணிக்கண் சேப்ப
  • எழுது வில் புருவம் ஏறக்
  • கிளை நரம்பு அனைய தீம் சொல்
  • பவளவாய் திகழத் தேன் சோர்
  • வள மலர்க் கோதை தன்னை
  • வாய்விடான் குழையப்புல்லி
  • அளமரல் இலாத இன்பக் கடல்
  • அகத்து அழுந்தினானே
   
842.
  • இன்னணம் ஒழுகு நாளுள் இளமரக் காவு காண்பான்
  • பொன் அணி மார்பன் சென்று புகுதலும் ஒருவன் தோன்றித்
  • துன்னி ஓர் ஓலை நீட்டித் தொழுதனன் பெயர்ந்து நிற்ப
  • மன்னிய குருசில் கொண்டு மரபினான் நோக்கு கின்றான்
   
843.
  • உருமுக் கதிர் வேல் கலுழன் ஓலை உலகு என்னும்
  • பருமைக் குருப் பளிங்கில் புகழ்ப் பஞ்சி முழுது அடுத்த
  • திரு மிக்கு உடைச் செல்வன் திறல் சாமி நனி காண்க
  • அருமை அறன் இன்பம் பொருள் ஆக என விடுத்தேன்
   
844.
  • தத்தையொடு வீணை மனர் தாம் பொருது தோற்ப
  • மொய்த்த கலை நம்பி முகிழ் முலையை இசை வெல்ல
  • வைத்த கதிர் வேலின் வலியார்க்கு உரியள் என்னச்
  • சித்தம் கரிந்து ஆங்குக் கொடியான் செரு விளைத்தான்
   
845.
  • தேன் முழங்கு தார்க் குரிசில் செம் பொன் நெடுந் தேர் மேல்
  • வான் முழங்கு வெம் சிலையின் வாளி மழை தூவி
  • ஊன் முழங்கு வெம் குருதி வேழமுடன் மூழ்க
  • வேல் முழங்கு தானை விளையாடியதும் கேட்டேன்
   
846.
  • வந்து தரன் கூறிய இவ் வாய் மொழியும் அன்றி
  • முந்து வரன் மொழிந்த பொருள் முற்றும் வகை நாடிப்
  • பந்து புடை பாணி எனப் பாயும் கலி மான் தேர்
  • எந்தை திறம் முன்னம் உணர்ந்து இன்னணம் விடுத்தேன்
   
847.
  • எள்ளுநர்கள் சாய என தோள் இரண்டு நோக்கி
  • வெள்ளி மலை முழுதும் கொடி எடுத்தது இகல் ஏத்திக்
  • கள் செய் மலர் மார்பன் உறு காப்பு இகழ்தல் இன்றி
  • உள்ளு பொருள் எம் உணர்த்தி அன்றி உள வேண்டா
   
848.
  • ஆம் பொருள்கள் ஆகும் அது யார்க்கும் அழிக்க ஒண்ணாப்
  • போம் பொருள்கள் போகும் அவை பொறியின் வகை வண்ணம்
  • தேம் புனலை நீர்க் கடலும் சென்று தரல் இன்றே
  • வீங்கு புனல் யாறு மழை வேண்டி அறியாதே
   
849.
  • மன் பெரிய மாமன் அடி மகிழ்ந்து திசை வணங்கி
  • அன்பின் அகலாதவனை விடுத்து அலர்ந்த கோதைக்கு
  • இன்ப நிலத்து இயன்ற பொருள் இவை இவை நும் கோமான்
  • தந்த எனச் சொல்லி நனி சாமி கொடுத்தானே
   
850.
  • குங்குமமும் சந்தனமும் கூட்டி இடு கொடியா
  • வெம் கண் இளமுலையின் மிசை எழுதி விளையாடிக்
  • கொங்கு உண் மலர்க் கோதையொடு குருசில் செலும் வழிநாள்
  • அங்கண் நகர்ப்பட்ட பொருள் ஆகியது மொழிவாம்