முகப்பு |
தொடக்கம் |
நீர் விளையாட்டு அணி
|
|
2652. |
- உடை திரை முத்தம் சிந்த ஓசனிக்கின்ற அன்னம்
-
படர் கதிர்த் திங்கள் ஆகப் பரந்துவான் பூத்தது என்னா
-
அடர் பிணி அவிழும் ஆம்பல் அலை கடல் கானல் சேர்ப்பன்
-
குடை கெழு வேந்தற்கு இப்பால் உற்றது கூறல் உற்றேன்
|
|
|
|
|
2653. |
- துறவின் பால் படர்தல் அஞ்சித் தொத்து ஒளி முத்துத் தாமம்
-
உறைகின்ற உருவக் கோலச் சிகழிகை மகளிர் இன்பத்து
-
இறைவனை மகிழ்ச்சி செய்து மயக்குவான் அமைச்சர் எண்ணி
-
நிறைய நீர் வாவி சாந்தம் கலந்து உடன் பூரித்தாரே
|
|
|
|
|
2654. |
- நீர் அணி மாட வாவி நேர்ம் புணை நிறைத்து நீள் நீர்ப்
-
போர் அணி மாலை சாந்தம் புனை மணிச் சிவிறி சுண்ணம்
-
வார் அணி முலையினார்க்கும் மன்னர்க்கும் வகுத்து வாவி
-
ஏர் அணி கொண்ட இந் நீர் இறைவ கண்டு அருளுக என்றார்
|
|
|
|
|
2655. |
- கணமலை அரசன் மங்கை கட்டியங்காரன் ஆகப்
-
பணை முலை மகளிர் எல்லாம் பவித்திரன் படையது ஆக
-
இணை மலர் மாலை சுண்ணம் எரி மணிச் சிவிறி ஏந்திப்
-
புணை புறம் தழுவித் தூநீர்ப் போர்த் தொழில் தொடங்கினாரே
|
|
|
|
|
2656. |
- தூமலர் மாலை வாளாச் சுரும்பு எழப் புடைத்தும் தேன் சோர்
-
தாமரைச் சதங்கை மாலை சக்கரம் என்ன வீழ்த்தும்
-
காமரு கணையம் ஆகக் கண்ணிகள் ஒழுக விட்டும்
-
தோமரம் ஆகத் தொங்கல் சிதறுபு மயங்கினாரே
|
|
|
|
|
2657. |
- அரக்கு நீர்ச் சிவிறி ஏந்தி ஆயிரம் தாரை செல்லப்
-
பரப்பினாள் பாவை தத்தை பைந் தொடி மகளிர் எல்லாம்
-
தரிக்கிலர் ஆகித் தாழ்ந்து தட முகில் குளிக்கும் மின் போல்
-
செருக்கிய நெடுங் கண் சேப்பச் சீத நீர் மூழ்கினாரே
|
|
|
|
|
2658. |
- தானக மாடம் ஏறித் தையலார் ததும்பப் பாய்வார்
-
வான் அகத்து இழியும் தோகை மட மயில் குழாங்கள் ஒத்தார்
-
தேன் இனம் இரியத் தெண் நீர் குளித்து எழும் திருவின் அன்னார்
-
பால் மிசைச் சொரியும் திங்கள் பனிக் கடல் முளைத்தது ஒத்தார்
|
|
|
|
|
2659. |
- கண்ணி கொண்டு எறிய அஞ்சிக் கால் தளர்ந்து அசைந்து சோர்வார்
-
சுண்ணமும் சாந்தும் வீழத் தொழுதனர் இரந்து நிற்பார்
-
ஒண் மலர் மாலை ஓச்ச ஒசிந்து கண் பிறழ ஒல்கி
-
வெண்ணெயின் குழைந்து நிற்பார் வேல் கணார் ஆயினாரே
|
|
|
|
|
2660. |
- கூந்தலை ஒருகை ஏந்திக் குங்குமத் தாரை பாயப்
-
பூந்துகில் ஒருகை ஏந்திப் புகும் இடம் காண்டல் செல்லார்
-
வேந்தனைச் சரண் என்று எய்த விம்முறு துயரம் நோக்கிக்
-
காய்ந்து பொன் சிவிறி ஏந்திக் கார் மழை பொழிவது ஒத்தான்
|
|
|
|
|
2661. |
- வீக்கினான் தாரை வெய்தாச் சந்தனத் தளிர் நல் மாலை
-
ஓக்கினார் கண்ணி சுண்ணம் உடற்றினார் உருவச் சாந்தின்
-
பூக் கமழ் துகிலும் தோடும் மாலையும் சொரியப் போர் தோற்று
-
ஆக்கிய அநங்கன் சேனை ஆறு அல் ஆறு ஆயிற்று அன்றே
|
|
|
|
|
2662. |
- அன்னங்கள் ஆகி அம் பூந் தாமரை அல்லி மேய்வார்
-
பொன் மயில் ஆகிக் கூந்தல் போர்த்தனர் குனிந்து நிற்பார்
-
இன் மலர்க் கமலம் ஆகிப் பூ முகம் பொருந்த வைப்பார்
-
மின்னும் மேகலையும் தோடும் கொடுத்து அடி தொழுது நிற்பார்
|
|
|
|
|
2663. |
- பண் உரை மகளிர் மாலை பைந்துகில் கவர்ந்து கொள்ளக்
-
கண் உரை மகளிர் சேர்ந்து கார் இருள் திவளும் மின் போல்
-
பெண் உரைப் பிடிக்கைக் கூந்தல் பொன் அரி மாலை தாழ
-
வெண் நுரை உடுத்து நின்றார் வேந்தன் நோக்கு உண்ண நின்றார்
|
|
|
|
|
2664. |
- தன் படை உடையத் தத்தை சந்தனத் தாரை வீக்கி
-
ஒன்பது முகத்தின் ஓடி உறுவலி அகலம் பாயப்
-
பொன் படு சுணங்கு போர்த்த பொங்கு இள முலையில் தூவான்
-
முன்பு அடு குலிகத் தாரை முழு வலி முறுக்கல் உற்றான்
|
|
|
|
|
2665. |
- மெய்ப்படு தாரை வீழின் நோம் இவட்கு என்ன அஞ்சிக்
-
கைப்படை மன்னன் நிற்பக் கதுப்பு அயல் மாலை வாங்கிச்
-
செப்பட முன்கை யாப்பத் திருமகன் தொலைந்து நின்றான்
-
பைப்புடை அல்குலாளைப் பாழியால் படுக்கல் உற்றே
|
|
|
|
|
2666. |
- அடுத்த சாந்து அலங்கல் சுண்ணம் அரும் புனல் கவர அஞ்சி
-
உடுத்த பட்டு ஒளிப்ப ஒண்பொன் மேகலை ஒன்றும் பேசா
-
கிடப்ப மற்று அரசன் நோக்கிக் கெட்டது உன் துகில் மற்று என்ன
-
மடத்தகை நாணிப் புல்லி மின்னுச் சேர் பருதி ஒத்தான்
|
|
|
|
|
2667. |
- விம் அகில் புகையின் மேவி உடம்பினை வேது செய்து
-
கொம் என நாவி நாறும் கூந்தலை உலர்த்தி நொய்ய
-
அம் மலர் உரோமப் பூம் பட்டு உடுத்த பின் அனிச்ச மாலை
-
செம் மலர்த் திருவின் அன்னார் சிகழிகைச் சேர்த்தினாரே
|
|
|
|
|