முகப்பு |
தொடக்கம் |
புதல்வர்ப் பேறு
|
|
2701. |
- இவ்வாறு எங்கும் விளையாடி
-
இளையான் மார்பின் நலம் பருகிச்
-
செவ்வாய் விளர்த்துத் தோள் மெலிந்து
-
செய்ய முலையின் முகம் கருகி
-
அவ்வாய் வயிறு கால் வீங்கி
-
அனிச்ச மலரும் பொறை ஆகி
-
ஒவ்வாப் பஞ்சி மெல் அணை மேல்
-
அசைந்தார் ஒண் பொன் கொடி அன்னார்
|
|
|
|
|
2702. |
- தீம் பால் சுமந்து முலை வீங்கித்
-
திருமுத்து ஈன்ற வலம்புரி போல்
-
காம்பு ஏர் தோளார் களிறு ஈன்றார்
-
கடைகள் தோறும் கடி முரசம்
-
தம் பால் பட்ட தனிச் செங் கோல்
-
தரணி மன்னன் மகிழ் தூங்கி
-
ஓம்பாது ஒண் பொன் சொரி மாரி
-
உலகம் உண்ணச் சிதறினான்
|
|
|
|
|
2703. |
- காடி ஆட்டித் தராய்ச் சாறும்
-
கன்னல் மணியும் நறு நெய்யும்
-
கூடச் செம் பொன் கொளத் தேய்த்துக்
-
கொண்டு நாளும் வாய் உறீஇப்
-
பாடற்கு இனிய பகுவாயும்
-
கண்ணும் பெருக உகிர் உறுத்தித்
-
தேடித் தீம் தேன் திப்பிலி தேய்த்து
-
அண்ணா உரிஞ்சி மூக்கு உயர்த்தார்
|
|
|
|
|
2704. |
- யாழும் குழலும் அணி முழவும்
-
அரங்கம் எல்லாம் பரந்து இசைப்பத்
-
தோழன் விண்ணோன் அவண் தோன்றி
-
வயங்காக் கூத்து வயங்கிய பின்
-
காழ் ஆர் வெள்ளி மலை மேலும்
-
காவல் மன்னர் கடி நகர்க்கும்
-
வீழா ஓகை அவன் விட்டான்
-
விண் பெற்றாரின் விரும்பினார்
|
|
|
|
|
2705. |
- தத்தம் நிலனும் உயர்வு இழிவும் பகையும் நட்பும் தம் தசையும்
-
வைத்து வழுஇல் சாதகமும் வகுத்த பின்னர்த் தொகுத்த நாள்
-
சச்சந்தணனே சுதஞ்சணனே தரணி கந்துக் கடன் விசயன்
-
தத்தன் பரதன் கோவிந்தன் என்று நாமம் தரித்தாரே
|
|
|
|
|
2706. |
- ஐ ஆண்டு எய்தி மை ஆடி
-
அறிந்தார் கலைகள் படை நவின்றார்
-
கொய் பூ மாலை குழல் மின்னும்
-
கொழும் பொன் தோடும் குண்டலமும்
-
ஐயன் மார்கள் துளக்கு இன்றி
-
ஆலும் கலிமா வெகுண்டு ஊர்ந்தார்
-
மொய்யார் அலங்கல் மார்பற்கு
-
முப்பது ஆகி நிறைந்ததே
|
|
|
|
|