முகப்பு |
தொடக்கம் |
அறிவர் சிறப்பு
|
|
2737. |
- ஒரு பகல் பூசின் ஓர் ஆண்டு ஒழிவு இன்றி விடாது நாறும்
-
பெரியவர் கேண்மை போலும் பெறற்கு அரும் வாச எண்ணெய்
-
அரிவையர் பூசி ஆடி அகில் புகை ஆவி ஊட்டித்
-
திரு விழை துகிலும் பூணும் திறப்படத் தாங்கினாரே
|
|
|
|
|
2738. |
- நல் தவம் செய்த வீரர் உள வழி நயந்து நாடும்
-
பொற்ற தாமரையினாளின் பூஞ் சிகை முத்தம் மின்னக்
-
கொற்றவன் தொழுது சேர்ந்தார் கொம்பு அனார் வாமன் கோயில்
-
மற்று அவன் மகிழ்ந்து புக்கு மணி முடி துளக்கினானே
|
|
|
|
|
2739. |
- கடி மலர்ப் பிண்டிக் கடவுள் கமலத்து
-
அடி மலர் சூடியவர் உலகில் யாரே
-
அடி மலர் சூடியவர் உலகம் ஏத்த
-
வடி மலர் தூவ வருகின்றார் அன்றே
|
|
|
|
|
2740. |
- முத்து அணிந்த முக் குடைக் கீழ் மூர்த்தி திருவடியைப்
-
பத்திமையால் நாளும் பணிகின்றார் யாரே
-
பத்திமையால் நாளும் பணிவார் பகட்டு எருத்தின்
-
நித்தில வெண் குடைக் கீழ் நீங்காதார் அன்றே
|
|
|
|
|
2741. |
- கருமக் கடல் கடந்த கை வலச் செல்வன்
-
எரி மலர்ச் சேவடியை ஏத்துவார் யாரே
-
எரி மலர்ச் சேவடியை ஏத்துவார் வான் தோய்
-
திரு முத்து அவிர் ஆழிச் செல்வரே அன்றே
|
|
|
|
|
2742. |
- வண்ண மா மலர் மாலை வாய்ந்தன
-
சுண்ணம் குங்குமம் தூமத்தால் புனைந்து
-
அண்ணல் சேவடி அருச்சித்தான் அரோ
-
விண் இல் இன்பமே விழைந்த வேட்கையான்
|
|
|
|
|