முகப்பு |
தொடக்கம் |
தானம்
|
|
2823. |
- நல் நிலத்து இட்ட வித்தின் நயம் வர விளைந்து செல்வம்
-
பின் நிலம் பெருக ஈனும் பெறல் அருங் கொடையும் பேசின்
-
புன் நிலத்து இட்ட வித்தின் புற்கு என விளைந்து போகம்
-
மின் எனத் துறக்கும் தானத்து இயற்கையும் விரித்தும் அன்றே
|
|
|
|
|
2824. |
- ஐவகைப் பொறியும் வாட்டி யாமையின் அடங்கி ஐந்தின்
-
மெய் வகை தெரியும் சிந்தை விளக்கு நின்று எரிய விட்டுப்
-
பொய் கொலை களவு காமம் அவா இருள் புகாது போற்றிச்
-
செய்தவம் நுனித்த சீலக் கனை கதிர்த் திங்கள் ஒப்பார்
|
|
|
|
|
2825. |
- வாய்ச்சி வாய் உறுத்தி மாந்தர் மயிர் தொறும் செத்தினாலும்
-
பூச்சுறு சாந்தம் ஏந்திப் புகழ்ந்து அடி பணிந்த போதும்
-
தூக்கி இவ் இரண்டும் நோக்கித் தொல் வினை என்று தேறி
-
நாச் செறு பராவு கொள்ளார் நமர் பிறர் என்றும் உள்ளார்
|
|
|
|
|
2826. |
- பால் கதிர்த் திங்கள் கொட்பின் பருமித்த களிறு போல
-
நூல் கதி கொண்டு கண்ணால் நுகத்து அளவு எல்லை நோக்கி
-
மேல் கதிக்கு ஏணி ஆய விழுத்தவர் மனையில் வந்தால்
-
காற்கு ஒசி கொம்பு போலக் கை தொழுது இறைஞ்சி மாதோ
|
|
|
|
|
2827. |
- தொடிக் கையால் தொழுது வாழ்த்தித் தூமணி நிலத்துள் ஏற்றிப்
-
பொடிப் புனை துகிலின் நீக்கிப் புகழ்ந்து அடி கழீஇய பின்றை
-
அடுத்த சாந்து அகிலின் ஆவி ஆய் மலர் அருச்சித்து ஆனார்
-
கொடுப்பர் நால் அமிர்தம் மூன்றின் குணம் புரிந்து அடங்கினார்க்கே
|
|
|
|
|
2828. |
- ஒன்பது வகையின் ஓதிற்று உத்தமர்க்கு ஆகும் ஆர்ந்த
-
இன்பதம் அருளி ஈதல் இடை என மொழிப யார்க்கும்
-
துன்பு உற விலங்கு கொன்று சொரிந்து சோறு ஊட்டினார்க்கும்
-
நன் பொருள் வழங்கினார்க்கும் பயன் நமக்கு அறியல் ஆகா
|
|
|
|
|