முகப்பு |
தொடக்கம் |
தானப் பயன்
|
|
2829. |
- கூற்று நா அலறுவது அனைய கூர் இலை
-
ஏற்ற நீர்த் துளும்பு வாள் இறைவ ஈங்கு இனிப்
-
போற்றினை கேள்மதி பொரு இல் புண்ணியர்க்கு
-
ஆற்றிய கொடைப் பயன் அறியக் கூறுவாம்
|
|
|
|
|
2830. |
- கடிப்பு வார் அங்குலி கொளீஇய கை துரந்து
-
அடுத்து வார் மயிர்த் துதி அலற ஊதலின்
-
பொடித்த பொன் தாமரை அனைய பொங்கு அழல்
-
இடைக் கிடந்து எவ்வளவு இரும்பு காய்ந்ததுவே
|
|
|
|
|
2831. |
- காய்ந்த அவ் அளவினால் கௌவும் நீரது ஒத்து
-
ஆய்ந்து அறி கொடையினது அளவில் புண்ணியம்
-
தோய்ந்து உயிர் உடம்பு இவண் ஒழியத் தொக்க நாள்
-
வீந்து போய் வயிற்று அகம் விதியின் எய்துமே
|
|
|
|
|
2832. |
- திங்கள் ஒன்பதும் வயிற்றில் சேர்ந்த பின்
-
வங்க வான் துகில் பொதி மணி செய் பாவை போல்
-
அங்கு அவர் இரட்டைகள் ஆகித் தோன்றலும்
-
சிங்கினார் இரு முது குரவர் என்பவே
|
|
|
|
|
2833. |
- இற்று அவர் தேவராய்ப் பிறப்ப ஈண்டு உடல்
-
பற்றிய விசும்பு இடைப் பரவும் மா முகில்
-
தெற்று என வீந்து எனச் சிதைந்து போகுமால்
-
மற்ற அம் மக்கள் தம் வண்ணம் செப்புவாம்
|
|
|
|
|
2834. |
- பிறந்த அக் குழவிகள் பிறர்கள் யாவரும்
-
புறந்தரல் இன்றியே வளர்ந்து செல்லும் நாள்
-
அறைந்தனர் ஒன்று இலா ஐம்பது ஆயிடை
-
நிறைந்தனர் கலை குணம் உறுப்பு நீரவே
|
|
|
|
|
2835. |
- சோலை மீன் அரும்பித் திங்கள் சுடரொடு பூத்ததே போல்
-
மாலையும் கலனும் ஈன்று வடகமும் துகிலும் நான்று
-
காலையும் இரவும் இல்லாக் கற்பக மரத்தின் நீழல்
-
பாலை யாழ் மழலை வேறாய்ப் பல் மணிக் கொம்பின் நின்றாள்
|
|
|
|
|
2836. |
- இலங்கு பொன் குவடு சாந்தம் எழுதியது அனைய தோள் மேல்
-
நலம் கிளர் குழைகள் நான்று சாந்தின் வாய் நக்கி மின்னக்
-
கலம் கலந்து அகன்ற மார்பில் கற்பக மாலை தாழக்
-
விலங்கு அரசு அனைய காளை வேனில் வேந்து என்னச் சேர்ந்தான்
|
|
|
|
|
2837. |
- குண்டலம் குலவி மின்னப் பொன்னரி மாலை தாழத்
-
தெண் கடல் அமிர்தின் செய்த பாவையின் பாவை நிற்ப
-
விண்டு அலர் மாலை மார்பன் விதியினால் சென்று மாதோ
-
கண்டனன் கலந்த உள்ளம் காதலின் ஒருவர் ஆனார்
|
|
|
|
|
2838. |
- கொதி நுனைக் காமன் அம்பு கொப்புளித்து உமிழ்ந்து காமம்
-
மதுநிறை பெய்து விம்மும் மணிக் குடம் இரண்டு போல
-
நுதி முகம் முத்தம் சூடி நோக்குநர் ஆவி வாட்ட
-
விதி முலை வெய்ய ஆகித் தாரொடு மிடைந்த அன்றே
|
|
|
|
|
2839. |
- இமைத்த நும் கண்கள் என்னை இகழ்ந்தனிர் என்று சீற
-
அமைத்து நின் அழகு கோலம் ஆர உண்டு அறுக்கல் ஆற்றாது
-
இமைத்தன வஞ்சி என்ன இளையவள் சிலம்பில் குஞ்சி
-
நமைத்த பூந் தாமம் தோய நகைமுக விருந்து பெற்றான்
|
|
|
|
|
2840. |
- இன் நகில் ஆவி விம்மும் எழு நிலை மாடம் சேர்ந்தும்
-
பொன் மலர்க் காவு புக்கும் புரிமணி வீணை ஓர்த்தும்
-
நல் மலர் நான வாவி நீர் அணி நயந்தும் செல்வத்
-
தொல் நலம் பருகிக் காமத் தொங்கலால் பிணிக்கப் பட்டார்
|
|
|
|
|
2841. |
- பூ முற்றும் தடம் கண்ணாளும் பொன் நெடுங் குன்று அனானும்
-
காமுற்று நினைந்த எல்லாம் கற்பக மரங்கள் ஏந்தத்
-
தாம் உற்றுக் கழிப்பர் தானம் இடையது செய்த நீரார்
-
ஏமுற்றுக் கரும பூமி இருநிதிக் கிழமை வேந்தே
|
|
|
|
|
2842. |
- அடங்கலர்க்கு ஈந்த தானப் பயத்தினால் அலறும் முந்நீர்த்
-
தடம் கடல் நடுவுள் தீவு பல உள அவற்றுள் தோன்றி
-
உடம்பொடு முகங்கள் ஒவ்வார் ஊழ் கனி மாந்தி வாழ்வர்
-
மடங்கல் அம் சீற்றத் துப்பின் மான வேல் மன்னர் ஏறே
|
|
|
|
|