முகப்பு |
தொடக்கம் |
நகர விலாவணை
|
|
2971. |
- நீர் நிறை குளத்து மாரி சொரிந்து என நறு நெய் துள்ளும்
-
நேர் நிறை பொரியும் குய்யும் வறைகளும் நிவந்த வாசம்
-
பார் நிறை அடிகில் பள்ளி தளியொடு சாலை எல்லாம்
-
ஊர் நிறை உயிர்த்தல் இன்றி உயிர் சென்ற போன்ற அன்றே
|
|
|
|
|
2972. |
- கோள் புலிச் சுழல் கண் அன்ன
-
கொழுஞ் சுவைக் கருனை முல்லை
-
மோட்டு இள முகையின் மொய் கொள்
-
கொக்கு உகிர் நிமிரல் வெண் சோறு
-
ஊட்டுறு கறி கொள் தேமாங்கனி
-
சுவைத் தயிரொடு ஏந்தி
-
வேட்டவரப் பெறாது வீதி
-
வெறு நிலம் கிடந்த அன்றே
|
|
|
|
|
2973. |
- மைந்தர் தம் வண்கையால் முன் மணி வள்ளத்து எடுத்த தேறல்
-
பைந் துகில் மகளிர் மேவார் பாசிழை பசும் பொன் மாலை
-
சிந்தியே கரந்தார் சொல் போல் மெய்யின் கண் சேர்தல் இன்றாய்ச்
-
சந்தனச் சாந்தொடு ஆரம் தாம் கவின் இழந்த அன்றே
|
|
|
|
|
2974. |
- தாழி வாய் மறைக்கும் தண் என் தடம் பெருங் குவளைக் கண்ணார்
-
மூழி வாய் முல்லை மாலை முலைமுகம் முரிந்து நக்க
-
யாழின் வாய் முழவம் விம்ம ஆட்டு ஒழிந்து அயர்ந்து தீம் தேன்
-
ஊழி வாய்க் கொண்டது ஒக்கும் பாடலும் ஒழிந்தது அன்றே
|
|
|
|
|
2975. |
- அருங்கலம் நிறைந்த அம்பூம் பவழக்கால் திகழும் பைம்பொன்
-
பெருங் கிடுகு என்னும் கோலப் பேரிமை பொருந்தி மெல்ல
-
ஒருங்கு உடன் நகரம் எல்லாம் உறங்குவது ஒத்தது ஒல் என்
-
கருங் கடல் கல் என் சும்மை கரந்ததும் ஒத்தது அன்றே
|
|
|
|
|
2976. |
- கலை உலாய் நிமிர்ந்த அல்குல் கடல் விளை அமுதம் அன்னார்
-
முலை உலாய் நிமிர்ந்த மொய்தார் முழவு முத்து உரிஞ்சி மின்னச்
-
சிலை உலாய் நிமிர்ந்த மார்பன் திருநகர் தெருள்கலாதாய்
-
நிலை இலா உலகின் தன்மை நீர்மை மீக் கூறிற்று அன்றே
|
|
|
|
|
2977. |
- கூந்தல் அகில் புகையும் வேள்விக் கொழும் புகையும்
-
எந்து துகில் புகையும் மாலைக்கு இடும் புகையும்
-
ஆய்ந்த பொருள் ஒருவர்க்கு ஈயா அதிலோப
-
மாந்தர் புகழே போல் தோன்றா மறைந்தனவே
|
|
|
|
|
2978. |
- புல் உண் புரவி புலம்பு விடு குரல் போல்
-
நல்ல வளை போழ் அரவம் நாரை நரல் குரல் போல்
-
கல்லா இளையர் கலங்காச் சிரிப்பு ஒலியும்
-
கொல் யானைச் சங்கு ஒலியும் கூடாது ஒழிந்தனவே
|
|
|
|
|
2979. |
- பொற்பு உடைய பூ மாலை சாந்தம் புனை கலன்கள்
-
கற்பு உடைய மங்கையரின் காவல் அவை இழந்த
-
நற்பு உடைய தேன் ஆர் நறவு நயம் புல்லார்
-
சொல் பொருள் போல் வேட்கப்படா சோர்ந்து ஒழிந்தனவே
|
|
|
|
|
2980. |
- தீம் பால் கிளி மறந்து தேவர் அவி மடங்கித்
-
தூம்பு ஆர் நெடுங் கைம்மாத் தீம் கரும்பு துற்றாவாய்
-
ஆம் பால் உரை மடங்கி யாரும் பிறர் பிறர் ஆய்க்
-
காம்பு ஆர் நடு இருள் கண் காடே போல் ஆயிற்றே
|
|
|
|
|
2981. |
- நீர் முழங்கு நீல நெடு மேக மால் யானைத்
-
தேர் முழங்கு தானைத் திருமாலின் முன் துறப்பான்
-
பார் முழங்கு தெண் திரை போல் செல்வம் தம் பாலர்க்கு ஈந்து
-
ஊர் முழுது நாடும் உரவோன் தாள் சேர்ந்தவே
|
|
|
|
|