முகப்பு |
தொடக்கம் |
தேவிமார் துறவு
|
|
2991. |
- தெண் திரை நீத்தம் நீந்தித் தீம் கதிர் சுமந்து திங்கள்
-
விண் படர்ந்த அனைய மாலை வெண் குடை வேந்தர் வேந்தன்
-
கண் திரள் முத்த மாலைக் கதிர் முலை நங்கைமாரை
-
வெண் திரை வியக்கும் கேள்வி விசயைகண் அபயம் வைத்தான்
|
|
|
|
|
2992. |
- கடி மலர் நிறைந்து பூத்த கற்பகக் கொம்பும் காமர்
-
வடிமலர் மலர்ந்த காம வல்லியும் தம்மைத் தாமே
-
உடை மலர் கொய்து போக உகுத்திடு கின்றது ஒத்தார்
-
படை மலர் நெடுங் கண் நல்லார் பாசிழை நீக்கு கின்றார்
|
|
|
|
|
2993. |
- தழுமலர்த் தாமம் நான்று சந்து அகில் மணந்து விம்மும்
-
செழுமணி நிலத்துச் செம் பொன் திரு முத்த விதான நீழல்
-
எழுமையும் பெறுக என்னும் எழில் முலை நெற்றி சூழ்ந்தார்
-
கழுமிய துகிலின் காமன் கண் புடைத்து இரங்க மாதோ
|
|
|
|
|
2994. |
- நறும் புகை நான நாவிக் குழம்பொடு பளிதச் சுண்ணம்
-
அறிந்தவர் ஆய்ந்த மாலை அணிந்த பைங் கூந்தலாய் பொன்
-
நிறம் தரு கொம்பு நீலக் கதிர்க் கற்றை உமிழ்வவே போல்
-
செறிந்து இருந்து உகுத்துச் செம்பொன் குணக்கொடி ஆயினாரே
|
|
|
|
|