முகப்பு |
தொடக்கம் |
பெரிய யாத்திரை
|
|
2995. |
- இலம் பெரிது என இரந்தவர்கட்கு ஏந்திய
-
கலம் சொரி காவலன் கடகக் கை இணை
-
புலம் புரிந்து உயர்ந்தன இரண்டு பொன் நிற
-
வலம்புரி மணி சொரிகின்ற போன்றவே
|
|
|
|
|
2996. |
- என்பு அரிந்து எரிதலைக் கொள்ள ஈண்டிய
-
அன்பு அரிந்து இடுகலா உலகம் ஆர்க என
-
மின் சொரி வெண் கலம் வீசும் வண் கைகள்
-
பொன் சொரி தாமரைப் போது போன்றவே
|
|
|
|
|
2997. |
- பூந் துகில் புனை கலம் மாலை பூசு சாந்து
-
ஆய்ந்து உலகு உண உவந்து அருளி மாமணி
-
காந்திய கற்பகக் கானம் ஆயினான்
-
ஏந்திய மணி முடி இறைவன் என்பவே
|
|
|
|
|
2998. |
- தேய் பிறை உருவக் கேணித்
-
தேறு நீர் மலர்ந்த தேனார்
-
ஆய் நிறக் குவளை அஞ்சிக்
-
குறுவிழிக் கொள்ளும் வாள் கண்
-
வேய் நிறை அழித்த மென் தோள்
-
விசயையைத் தொழுது வாழ்த்திச்
-
சேய் நிறச் சிவிகை சேர்ந்தான்
-
தேவர் கொண்டு ஏகினாரே
|
|
|
|
|