10322.

மங்கல கீதம் பாட, மறை ஒலி முழங்க, வல் வாய்ச்

சங்குஇனம் குமுற, பாண்டில் தண்ணுமை ஒலிப்ப,

தா இல்

பொங்கு பல்லியங்கள் ஆர்ப்ப, பூ மழை பொழிய,

விண்ணோர்

எங்கள் நாயகனை வெவ்வேறு எதிர்ந்து, அபிடேகம்

செய்தார்.*

 

மங்கல  கீதம்  பாட -  மங்கலப்  பாடல்கள்  ஒலிக்கவும்;
மறை ஒலி முழங்க - வேத முழக்கம்  கேட்கவும்;  வல் வாய்ச்
சங்கு  இனம் குமுற
-  பெரிய      வாயை  உடைய  சங்குகள்
ஒலிக்கவும்; பாண்டில் தண்ணுமை ஒலிப்ப- தாளமும் மத்தளமும்
ஓசை செய்யவும்; தா இல் பல்லியம் பொங்கி ஆர்ப்ப- குற்றம்
தீர்ந்த    பல்வகை       இசைக்       கருவிகள்  மேலெழுந்து 
ஆரவாரிக்கவும்;   பூ  மழை  பொழிய -  பூ மாரி  பெய்யவும்;
விண்ணோர் - வானோர்;     எங்கள்   நாயகனை  - எங்கள்
தலைவனாகிய இராமபிரானை;   வெவ்வேறு   -  தனித்தனியாக; 
எதிர்ந்து  அபிடேகம் செய்தார்-   அயோத்தியில் வரவேற்று
தீர்த்தமாட்டினர்.
 

(23)