மந்திரக் கிழவரை வருவித்தல்  

1315.புக்கபின், 'நிருபரும், பொரு இல் சுற்றமும்,
பக்கமும், பெயர்க' என, பரிவின் நீக்கினான்,
ஒக்க நின்று உலகு அளித்து, யோகின் எய்திய
சக்கரத்தவன் எனத் தமியன் ஆயினான்.

    புக்க பின் - தசரதன் மந்திராலோசனை மண்டபத்தில் புகுந்த
பிறகு ; நிருபரும் - மன்னர்களும் ; பொருவு இல் சுற்றமும்- நிகரற்ற
உறவினர்களும் ;  பக்கமும் - தன் அன்பிற்குரியநண்பர்களும் ; பெயர்க
என
- இவ்விடத்தை விட்டு அகல்க என்று சொல்லி; பரிவின்நீக்கினான்-
அவர்களை அன்புடன் நீங்குமாறு செய்து; ஒக்க நின்று உலகுஅளித்து-
பின்பு அவன் யாவரிடமும் சமமாக நின்று உலகத்தைக் காத்து ;  யோகின்
எய்திய சக்கரத்தவன் என -
அறிதுயிலை அடைந்த சக்கரம் ஏந்திய
திருமாலைப் போல ;  தமியன் ஆயினான் -தனித்தவன் ஆயினான்.

     மன்னர்கள் முதலியோர் அரசனை அரண்மனையிலிருந்து பின்
தொடர்ந்துவந்தவர். சக்கரம் உடைமை, உலகு அளித்தல், தனியனாய்
இருத்தல் ஆகியவற்றால் திருமால்தயரதனுக்கு உவமை ஆயினான். யோகு-
அறிதுயில். மந்திராலோசனை ஆதலின் அன்புடையராயினும்அவர்களை
அன்புடன் அகலச்செய்தான் என்க.                                 2