1317. | பூ வரு பொலன் கழல் பொரு இல் மன்னவன் காவலின் ஆணைசெய் கடவுள் ஆம் என, தேவரும், முனிவரும் உணரும், தேவர்கள் மூவரின் நால்வர் ஆம், முனி வந்து எய்தினான். |
பூ வருபொலன் கழல் - அழகு பொருந்திய பொன்னால் ஆன வீரக் கழலை அணிந்த ; பொரு இல் மன்னவன் காவலின் - நிகரில்லாத அரசனான தயரதனின்ஆட்சியில் ; ஆணை செய் கடவுள் ஆம் என - கட்டளையிடும் கடவுளாக உள்ளான்என்னும்படி ; தேவரும் முனிவரும் உணரும் - தேவர்களும் இருடிகளும் தேடி அறியும்; தேவர்கள் மூவரின்- தேவர்களான நான்முகன், திருமால், சிவபிரான் என்றுசொல்லப்பெறும் மூவர்களோடு சேர்த்து ; நால்வராம் முனிவந்து எய்தினான் - நால்வராக எண்ணப்படுகின்ற வசிட்ட முனிவன்வந்து சேர்ந்தான். தயரதன் ஆட்சியில் அவனுக்கு ஆணையிடும் ஆற்றல் உடையவன் வசிட்டன் என்றுவசிட்டனின் ஏற்றம் கூறப்பட்டது. அவன் அமைச்சருள் முதல்வனும், புரோகிதனும், குலகுருவும் பிரமஇருடியுமாகத் திகழ்தலின் அவன் வரவு தனியே பிரித்துரைக்கப்பட்டது. பொலன் கழல்-பொன்கழல். 4 அமைச்சர் மாண்பு |