1326. ‘வெய்யவன் குல முதல் வேந்தர், மேலவர்,
செய்கையின் ஒரு முறை திறம்பல் இன்றியே,
வையம் என் புயத்திடை, நுங்கள் மாட்சியால்,
ஐ-இரண்டு ஆயிரத்து ஆறு தாங்கினேன்.

    வெய்யவன் குலம் முதல் வேந்தர் - சூரிய குலத்தில் தோன்றிய
முதன்மையான அரசர்களாகிய ;  மேலவர் -முன்னோர்களின் ;
செய்கையின் - ஒழுக்கத்திலிருந்து ;  ஒருமுறைதிறம்பல் இன்றியே -
ஒருசிறிதும் வழுவுதல் இல்லாமல் ;  வையம் -உலகத்தை ;  ஐ-இரண்டு
ஆயிரத்து ஆறு
- அறுபதினாயிரம் ஆண்டுகள் ; நுங்கள்மாட்சியால் -
உங்களதுநற்குண நற்செயல்களாகிய பேருதவியால் ; என் புயத்திடைத்
தாங்கினேன்
- என்தோள்களில் சுமந்தேன்.

     செய்கை - ஒழுக்கம்.முறையும் என்னும் இழிவு சிறப்பும்மை
விகாரத்தால்தொக்கது. அரசாட்சி பாரம் ஆதலின் தோள்களில்
தாங்குவதாகக் கூறப்பட்டது.                                     13