1355.அனையது ஆகிய உவகையன்,
     கண்கள் நீர் அரும்ப,
முனிவன் மா மலர்ப் பாதங்கள்
     முறைமையின் இறைஞ்சி,
‘இனிய சொல்லினை ; எம்பெருமான்
     அருள் அன்றோ,
தனியன் நானிலம் தாங்கியது?
     அவற்கு இது தகாதோ?

    அனையது ஆகிய உவகையன் - அத்தன்மைத்தாகிய மகிழ்ச்சி
யடைந்த தயரதன் ;  கண்கள் நீர் அரும்ப - அம் மகிழ்ச்சிக்குப் போக்கு
வீடாகக்கண்களில் நீர் துளிர்க்க ;  முனிவன் மாமலர்ப் பாதங்கள் -
வசிட்ட முனிவனுடையசிறந்த தாமரை மலர் போன்ற திருவடிகளை ;
முறைமையின் இறைஞ்சி -வணங்குதற்குரிய முறைப்படி வணங்கி ;
‘இனிய சொல்லினை - செவிக்கும்சிந்தைக்கும் இனிய கருத்தினைத்
தெரிவித்தாய் ;  தனியன் நானிலம் தாங்கியது - தனியொருவனாக யான்
மண்ணுலகினைப் போற்றிக் காத்தது; எம்பெருமான் அருள்அன்றோ -
என் இறைவனாகிய நினது அருளால் அல்லவா? அவற்கு இது தகாதோ-
அந்தஇராமனுக்கு இவ்வாறு அரசுபுரிதல் தகுதியுடையதாகாதோ?
(ஆகும்).’                                                    42