1357.பழுது இல் மா தவன், பின் ஒன்றும்
     பணித்திலன், இருந்தான் ; 
முழுதும் எண்ணுறும் மந்திரக்
     கிழவர் தம் முகத்தால்
எழுதி நீட்டிய இங்கிதம்,
     இறை மகற்கு ஏற்க.
தொழுத கையினன், சுமந்திரன்
     முன் நின்று, சொல்லும் :

     பழுது இல் மா தவன் - குற்றம் இல்லாத சிறந்த தவத்தையுடை
யோனாகியவசிட்டன் ;  பின் ஒன்றும் பணித்திலன் இருந்தான் - பிறகு
வேறு யாதும் சொல்லாமல்இருந்தான் ;  முழுதும் எண்ணுறும் மந்திரக்
கிழவர்
- எதனையும் தீரச்சிந்திக்கின்ற அமைச்சர்கள் ;  தம் முகத்தால்
எழுதி நீட்டிய இங்கிதம்
- தம்முகத்தினால் எழுதிக் கொடுத்த
குறிப்பினை ; இறை மகற்கு ஏற்க - தயரதனுக்குப்பொருந்த ; சுமந்திரன்
முன் நின்று
- சுமந்திரன் எதிரில் எழுந்து நின்று; தொழுத வகையினன்-
கும்பிட்ட கைகளையுடையவனாய் ;  சொல்லும் -சொல்வான்.         44