1359. | ‘புரைசை மாக் கரி நிருபர்க்கும், புரத்து உறைவோர்க்கும், உரைசெய் மந்திரக் கிழவர்க்கும், முனிவர்க்கும், உள்ளம் முரைசம் ஆர்ப்ப, நின் முதல் மணிப் புதல்வனை, முறையால் அரைசன் ஆக்கி, பின் அப் புறத்து அடுத்தது புரிவாய் !’ |
புரைசை மாக் கரி நிருபர்க்கும் - கழுத்தில் இடப்படும் கயிற்றையுடைய பெரிய யானைப் படையையுடைய அரசர்களுக்கும்; புரத்து உறைவோர்க்கும்- அயோத்தி நகரத்தில் வாழ்பவர்களுக்கும்; உரை செய் மந்திரக் கிழவர்க்கும்- தம் கருத்தை எடுத்துரைத்த அமைச்சர்களுக்கும்; முனிவர்க்கும் -வசிட்டன் தொடக்கமான முனிவர்களுக்கும் ; உள்ளம் முரைசம் ஆர்ப்ப - மனம் மகிழ்ச்சியால்முரசடிக்க (ஒலிக்க) ; நின் முதல் மணிப் புதல்வனை - நினக்கு முதல் மகனும்நீலமணி போலும் நிறத்தையுடையவனுமான இராமனை ; முறையால் - செய்ய வேண்டிய முறையோடு ; அரசன் ஆக்கி - அரசனாக முடிசூட்டி; பின் அப் புறத்து அடுத்தது - பிறகு உனக்குத் தக்கதான துறவு மேற்கொள்ளுதலை ; புரிவாய் -செய்வாய். புரைசை, முரைசு, அரைசு - இடைப் போலிகள். முதல் புதல்வன், மணிப்புதல்வன் எனத் தனித்தனிக் கூட்டுக. தயரதன் துறவு மேற்கொள்வது தனக்கு வருத்தம் தருவதாயினும்அறம் கருதி அதுவும் செய்ய வேண்டுவதாய் இருத்தலால் நேரே சொல்லாமல் ‘அப்புறத்து அடுத்தது புரிவாய்’ என்கிறான். 46 |