1376. | ‘மைந்த ! நம் குல மரபினில் மணி முடி வேந்தர், தம்தம் மக்களே கடன்முறை நெடு நிலம் தாங்க, ஐந்தொடு ஆகிய முப் பகை மருங்கு அற அகற்றி, உய்ந்து போயினர்; ஊழி நின்று எண்ணினும் உலவார். |
‘மைந்த - மகனே ! நம்குல மரபினில் மணிமுடி வேந்தர் - நமது சிறந்த குலத்தில் தோன்றிய அழகிய முடிசூடி ஆண்ட வேந்தர்கள் ; தம் தம்மக்களே - தம் தம் பிள்ளைகளே ; கடன்முறை நெடு நிலம் தாங்க - முறைப்படிநெடிய உலகை அரசர்களாகிக் காப்பாற்ற; ஐந்தொடு ஆகிய முப்பகை - ஐந்துபொறிகளால் உண்டாகிய மூன்று பகைகளையும்; மருங்கு அற அகற்றி - வேரோடுநீக்கி ; உய்ந்து போயினர் - பிழைத்துப் போனார்கள் ; ஊழிநின்று எண்ணினும் - அவ்வாறு உய்ந்தவர்களை ஊழிக்காலம் இருந்து எண்ணினாலும் ; உலவார் - குறையார் (எண்ணற்றவர் என்றவாறு)’ ஐந்தொடு ஆகிய முப்பகை - ஐம்பொறிகளாகிய மெய், வாய், கண், மூக்கு,செவி ஆகியவற்றின் வாயிலாகப் புலப்படும் காமம், வெகுளி, மயக்கம் என்னும் பகைகள். ஐந்தொடு- ஒடு உருபு ஐந்தால் எனப் பொருள்பட்டுக் கருத்தாப் பொருளில் வந்தது. ‘ஊழி நின்று எண்ணினும்உலவார்’ என்றது எவ்வளவு காலம் நின்று எண்ணினாலும் எண்ணி முடிவுகாண முடியாதவாறு மிகப் பலராவர்என்பதனைக் காட்டிற்று. 63 |