1377. | ‘முன்னை ஊழ்வினைப் பயத்தினும், முற்றிய வேள்விப் பின்னை எய்திய நலத்தினும், அரிதினின் பெற்றேன் ; இன்னம், யான் இந்த அரசியல் இடும்பையின் நின்றால், நின்னை ஈன்றுள பயத்தினின் நிரம்புவது யாதோ? |
‘முன்னைஊழ்வினைப் பயத்தினும் - முற்பிறப்பில் செய்த நல் வினையின் விளைவாகவும் ; பின்னை முற்றிய வேள்வி எய்தி நலத்தினும்- பிறகு இப்பிறப்பில் செய்து முடித்த வேள்வியால் அடைந்த நன்மையாலும் ; அரிதினின் பெற்றேன் - உன்னைஅரிய பேறாகப் பெற்றேன் ; இன்னம் - இன்னமும் ; யான்இந்த அரசியல் இடும்பையின் நின்றால் -நான் இந்த அரச வாழ்க்கையாகிய துன்பத்தில் இருந்தால் ; நின்னை ஈன்றுளபயத்தினின் -உன்னைப் பெற்றதால் அடைந்த பயனால் ; நிரம்புவதுயாதோ - நிறைவதுஎவ்வாறு? முற்றிய வேள்வி - அசுவமேதம். புத்திரகாமேஷ்டி முதலியன. ‘மெய்யாயவேதத்துறை வேந்தருக்கு ஏய்ந்த யாரும் செய்யாத யாகம் இவன் செய்தும் மறந்த மாதோ’ என்றுதயரதன் செய்த வேள்விகள் பற்றி முன்னும் சொன்னார். (170) 64 |