1379. ‘ஆளும் நல் நெறிக்கு
     அமைவரும் அமைதி இன்றாக
நாளும் நம் குல நாயகன்
     நறை விரி கமலத்
தாளின் நல்கிய கங்கையைத்
     தந்து, தந்தையரை
மீள்வு இலா உலகு ஏற்றினான் ஒருமகன்,
     மேல்நாள்.

     ‘மேல்நாள் - முற்காலத்தில்; ஒருமகன் -ஒப்பற்றவனாகிய பகீரதன்;
ஆளும் நல்நெறிக்கு - தாம் நுகரக்கூடிய(வீட்டுக்குரிய) நல்ல வழிக்கு ;
அமைவரும் அமைதி இன்றாக - பொருந்தும் தன்மைதன்
முன்னோர்களுக்கு இல்லாமற்போனதால் ;  நாளும் - (அவர்கள் உய்வின்
பொருட்டு) எந்நாளும் ;  நம்குலம் நாயகன் - நமக்குக் குல தெய்வமாகிய
திருமாலின் ;  நறை விரி கமலத் தாளின் - தேன் நிறைந்த தாமரை
போலும்திருவடிகளினின்றும் ;  நல்கிய கங்கையைத் தந்து -
வெளிப்படுத்திய கங்கையாற்றைஇவ்வுலகில் கொண்டுவந்து ;  தந்தையரை
மீள்வு இலா உலகு
- தன் முன்னோர்களை(சகர புத்திரர்களை) மீண்டு
வாராத வீட்டுலகத்தில் ;  ஏற்றினான் -ஏறச்செய்தான்.’

     மக்கட் பேற்றின் பயனை விளக்க ஓர் எடுத்துக்காட்டாகப் பகீரதன்
வரலாற்றினை எடுத்துக் காட்டுகிறான். நம்குலம் - இக்குவாகு குலம். மீள்வு
இலா உலகு - திருநாடு ; வீடு.                                  66