1395. | ‘பனை அவாம் நெடுங் கரப் பரும யானையாய்! நினை அவாம் தன்மையை நிமிர்ந்த மன்னுயிர்க்கு, எனையவாறு அன்பினன் இராமன், ஈண்டு, அவற்கு அனையவாறு அன்பின அவையும்’ என்றனர். |
‘பனை அவாம் நெடுங் கரப் பரும யானையாய் - பனை மரம் போன்ற நீண்ட துதிக்கையையும்,அம்பாரியையும் உடைய யானையை உடைய அரசே!; நினை அவாம் தன்மையை நிமிர்ந்த - உன்னை விரும்பும் தன்மையை மிகுதியாகக் கொண்டிருந்த; மன் உயிர்க்கு - நிலைபேறுடைய உயிர்களிடத்தில்; ஈண்டு இராமன் எனையவாறு அன்பினன் - இங்கே இராமன் எவ்வாறு அன்புடையவனாய் இருக்கின்றானோ; அனையவாறு அவையும் அவற்கு அன்பின - அவ்வாறு அவ்வுயிர்களும் அவனிடத்தில்அன்புடையனவாய் இருக்கின்றன; என்றனர் - என்று கூறினர். இராமன் மக்களிடத்தும், மக்கள் அவனிடத்தும் காட்டிய அன்புத்திறன் இங்குச் குறிக்கப்பட்டது.பாலகாண்டத்துள் 308 - 312 ஆத்ம பாடல்களில் இத்தன்மை குறிக்கப்பட்டுள்ளமை ஒப்புநோக்கற்கு உரியது. மன்உயிர்க்கு, அவற்கு - வேற்றுமை மயக்கங்கள்;‘கு’ உருபு ஏழாம் வேற்றுமையில் மயங்கியது. 82 |