1397.‘செம்மையின், தருமத்தின், செயலின், தீங்கின்பால்
வெம்மையின், ஒழுக்கத்தின் மெய்ம்மை மேவினீர்.
என் மகன் என்பது என் ? நெறியின், ஈங்கு, இவன்
நும் மகன்; கையடை; நோக்கும் ஈங்கு’ என்றான்.

     ‘செம்மையின் - (தயரதன் அரசர்களை நோக்கி)  நடுநிலைமையிலும்; 
தருமத்தின்- அரசியல் அறத்திலும்; செயலின் - நற் செய்கையிலும்; 
தீங்கின்பால் வெம்மையின்- திச்செயல்களில் கொண்ட வெறுப்பிலும்;
ஒழுக்கத்தின் நடத்தையிலும்; மெய்மை மேவினீர்- உண்மையாக
இருப்பவர்களே!;  இவன் ஈங்கு - இவ்விராமன்  இனிமேல்;  என்மகன்
என்பது என்
- என் பிள்ளை என்று சொல்லுவது ஏன்?;  நும் மகன் -
உங்கள்பிள்ளையாவான்;  கையடை - அவனை உங்களிடம்
அடைக்கலமாக்கினேன்; ஈங்கு நோக்கும்என்றான் - இங்கே அவ்வாறே
கருதிப்பேணுங்கள்’ என்றான்.

     இவனை என்மகன் என்ன வேண்டா; உங்கள் மகனாகக் கொண்டு
போற்றுங்கள் எனத் தயரதன் கூறினான்.நோக்கும் - பேணுங்கள்; முன்னிலை
வினைமுற்று.                                                  84