1407.என்று இறைஞ்சி, அவ் இந்திரை கேள்வனுக்கு
ஒன்றும் நான்மறை ஒதிய பூசனை
நன்று இழைத்து, அவண், நல்ல தவர்க்கு எலாம்
கன்றுடைப் பசுவின் கடல் நல்கினாள்.

     என்று- என்று வேண்டி;  இறைஞ்சி - வணங்கி; அவ் இந்திரை
கேள்வனுக்கு -
அந்த இலக்குமி நாயகனாகிய நாராயணனுக்கு;  ஒன்றும்
நான்மறை ஓதிய பூசனை -
பொருந்திய வேதங்களிற்சொல்லப்
பட்ட முறைமையில் ஆன வழிபாட்டை; நன்று இழைத்து - நன்றாகச்
செய்து;  அவண் -அவ்விடத்தில்;  நல்ல தவர்க்கு எலாம் - நல்ல
தவத்தோர்களுக்கெல்லாம்;  கன்றுடைப்பசுவின் கடல் - கன்றோடு கூடிய
பசுவின் கூட்டங்களை; நல்கினாள் - தானமாகக் கொடுத்தாள்.

ஸ்ரீ நாராயணனை வழிபட்டு, வழிபாட்டின் முடிவில் கோதானம்
செய்தாள்.                                                    9