1416. ‘ஆவதற்கும், அழிவதற்கும், அவர்
ஏவ, நிற்கும் விதியும் என்றால், இனி
ஆவது எப்பொருள், இம்மையும் அம்மையும்
தேவரைப் பரவும் துணை சீர்த்ததே?

     ‘அவர் ஏவ - அந்தணர் ஆணையிட; ஆவதற்கும் - (ஒருவர்)
மேம்படுவதற்கும்; அழிவதற்கும் - அழிந்துபோவதற்கும்; விதியும் நிற்கும்-
விதியும் துணையாக நின்றுஉதவும்; என்றால்-;  இனி -;  இம்மையும் -
இவ்வுலகத்தும்; அம்மையும் - அவ்வுலகத்தும்;தேவரைப் பரவும்துணை-
பூசுரராகிய அந்தணரைத் துதிக்கின்ற அளவு; சீர்த்தது -சிறப்புடையது; 
ஆவது - பொருந்திய;  எப்பொருள் - எந்தப் பொருள்?’  (எதுவும்
இல்லை.)

     தெய்வங்களுக்கும்  கட்டுப்படாது  தன்வழியில்  செயற்படும் விதியும்
அந்தணர்க்கு  ஏவல் செய்யும் என்பதாம். ‘ஏ’ ஈற்றசை.              18