1431.ஏவின வள்ளுவர், ‘இராமன், நாளையே
பூமகள் கொழுநனாய், புனையும் மௌலி; இக்
கோ நகர் அணிக!’ என, கொட்டும் பேரி அத்
தேவரும் களி கொள, திரிந்து சாற்றினார்.

     ஏவின வள்ளுவர் - (அரசனால்) ஏவப்பட்ட வள்ளுவர்;  இராமன் -;
நாளையே -
நாளைக்கே;  பூமகள் கொழுநனாய் - நிலமகள் கணவனாய்;
மௌலி புனையும் - மகுடம்சூடுவான்;  (ஆதலால்) இக்கோநகர் - இந்தத்
தலைமை நகரத்தை; அணிக - அலங்கரிக்க; என - என்று சொல்லி; 
கொட்டும் - முழுக்குகின்ற;  பேரி - முரசத்தை; அத்தேவரும் களிகொள-
விண்ணுலகத்துத் தேவரும் மகிழ்ச்சிகொள்ள;  திரிந்து- நகர் எங்கும் சுற்றி;
சாற்றினார் - அடித்து முழக்கினார்கள்.

     வள்ளுவர் பறையறைந்து முடிசூட்டுவிழாச் செய்தியைத் தெரிவித்தனர்.
தேவர் களிகொள்ளல்அரக்கர் குலம் அழியச் சமயம் அணுகியது என்பதால்
ஆகும்.  பேரி - பெருமுரசு.  கோநகர் -தலைநகர்; அரசு வீற்றிருக்கின்ற
நகரம்.                                                      33