மக்கள் மகிழ்ந்து, நகரை அழகு செய்தல் 1432. | ‘கவி அமை கீர்த்தி அக் காளை நாளையே புவி அமை மணி முடி புனையும்’ என்ற சொல், செவி அமை நுகர்ச்சியது எனினும், தேவர்தம் அவி அமுது ஆனது, அந் நகர் உளார்க்கு எலாம். |
கவி அமை கீர்த்தி அக் காளை - கவிதைகளில் புனையப்படும் புகழை உடைய அந்த இராமன்;நாளையே - நாளைக்கே; புவி அமை - அரசு புரிதற்குரிய; மணிமுடி - அழகியமகுடத்தை; புனையும் - தரிப்பான்; என்ற சொல் - என்ற வள்ளுவர் வார்த்தை; செவி அமை நுகர்ச்சியது எனினும் - காதுகளால் அணுபவிக்கப்படும் ஓசை இனிமையளவினதுதான் ஆனாலும்; அந்நகர் உளோர்க்கு எலாம் - அயோத்தி நகரில் உள்ளவர்களுக் கெல்லாம்;தேவர்தம் - தேவர்களது; அவி அமுது ஆனது - அவியுணவையும் அமுதத்தையும் ஒத்திருந்தது. செவி நுகர்ச்சிக்கு எட்டியது நிலவுலகச் சொல்லே; ஆயினும், தேவர்தம் அமுதமெனச் சுவைப்பயன் தந்தது என்பது கருத்து. கீர்த்தி என்பது கொடைப்புகழ் .“உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கு ஒன்று, ஈவார்மேல் நிற்கும் புகழ்” என்றார் வள்ளுவரும். (குறள்.232) அவி - வேள்வியில் கொடுக்கப்பெறுவது.அமுதம்-பாற்கடலில் இருந்து பெறப்பட்ட சாவா மருந்து. அவியமுது உம்மைத்தொகை. ‘நாளையே’.‘ஏ’ தேற்றம். 34 |