1467.‘அரசர் இல் பிறந்து, பின் அரசர் இல் வளர்ந்து,
அரசர் இல் புகுந்து, பேர் அரசி ஆன நீ
கரை செயற்கு அருந்துயர்க் கடலில் வீழ்கின்றாய்;
உரை செயக் கேட்கிலை; உணர்தியோ?’ என்றாள்.

     (மந்தரை மீண்டும்)  ‘அரசர் இல் பிறந்து  - அரச குலத்தில் பிறந்து;
பின்- பிறகு;  அரசர் இல் வளர்ந்து - அரசு குடும்பத்தில் வளர்ந்து;
அரசர்  இல்புகுந்து - அரச குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு; பேர் அரசி
ஆன நீ -
(சக்கரவர்த்தியின்)பட்டத்தரசியாக ஆன நீ; கரைசெயற்கு
அருந்துயர்க் கடலில் -
கரை இடுவதற்கு முடியாத துன்பக்கடலில்;
வீழ்கின்றாய் - வீழ்ந்து  கொண்டேயிருக்கிறாய்;  உரை செய - (நான்)
எடுத்துச் சொல்லியும்; கேட்கிலை - கேட்கின்றாயில்லை; உணர்த்தியோ?’-
பின் அனுபவத்தால்  உணர்வாயோ?;’  என்றாள் -

     அரச குலத்தில் பிறந்து வளர்ந்து பட்டத்தரசியாக இருக்கிற உனக்கு,
உன் அரசனாகாது மாற்றாள் மகன் அரசன் ஆவதைச் சாதாரணமாக
எடுத்துக் கொள்ள எப்படி நேர்ந்தது? என்று கூறினாள்கூனி. உணர்தியோ-
அறிவினால் அறிந்து கொள்ளாத நீ அனுபவத்தால் எதிர்காலத்தில்
சக்களத்தியிடம்துன்பப்பட்டுப் புரிந்துகொள்வாயோ என்பது பொருள். இனி
உனக்கு உணர்ச்சி  யுள்ளதோ என்பதுபொருந்துமேற் கொள்க.        69