கைகேயியின் உறுதிமொழி  

1490.‘நன்று சொல்லினை; நம்பியை
     நளிர் முடி சூட்டல்,
துன்று கானத்தில் இராமனைத் துரத்தல்
     இவ் இரண்டும்
அன்றது ஆம் எனில், அரசன் முன்
     ஆர் உயிர் துறந்து
பொன்றி நீங்குதல் புரிவென் யான்;
     போதி நீ ’ என்றாள்.

     ‘(நீ) நன்று சொல்லினை - நீ நல்ல உபாயம் சொன்னாய்; நம்பியை
நளிர்முடிசூட்டல் -
பரதனைச் செறிந்த மகுடத்தால் சூட்டுதலும்;
இராமனைத் துன்று கானத்தில் துரத்தல்- இராமனை நெருங்கிய காட்டில்
ஓட்டுதலும்; இவ் இரண்டும் - இந்த இரண்டும்;  அன்றது ஆம் எனில் -
அல்லாமல் போமாயின்;  அரசன் முன் - சக்கரவர்த்தியாகியதயரதன்
எதிரில்;  யான் ஆர் உயிர் துறந்து - நான் என்னுடைய பெறுதற்கரிய
உயிரை விட்டு; பொன்றி - இறந்து; நீங்குதல் - இவ்வுலகை விட்டு
நீங்குதலை;  புரிவென் -செய்வேன்;  நீ போதி - நீ போவாயாக;’ 
என்றாள் - என்று சொநீன்னாள்.

     இவ்வாறு கைகேயி உரைத்தபடியால் இனி இவள் சிறிதும் மாறமாட்டாள்
என்ற உறுதி மந்தரைக்குஉண்டாயிற்று.  இவ் வாக்குறுதியைப் பெறவே ‘என்
உரை தலை நிற்பின்’ என்று (1486) முன்னர்க்கூனி கூறினாளாம். ‘இரண்டு
வரங்களையும்  பெறுவேன்; நாயகன் தராவிடின் நான் நமனுலகம் புகுவேன்’
என்று உறுதி உரைத்தாள் கைகேயி. இனியும் கூனி தாமதிப்பின்
அவளால்தான் நிகழ்ந்தது என்றுஐயுறும் ஆதலின் அவளை ‘நீ போதி’
என்ற அப்புறப்படுத்தினாள். ‘தணியா’ என்ற முன்பாட்டின் வினையெச்சம்
‘என்றாள்’  என இங்கே முடிந்தது.                                92