கைகேயியின் கொடுஞ் சொற்கள் 1513. | ‘திசைத்ததும் இல்லை; எனக்கு வந்து தீயோர் இசைத்ததும் இல்லை; முன் ஈந்த இவ் வரங்கள், குசைப் பரியோய்! தரின், இன்று கொள்வென்; அன்றேல், வசைத் திறன் நின்வயின் நிற்க, மாள்வென்’ என்றாள். |
குசைப் பரியோய் - (மன்னன் கூறக் கேட்ட கைகேயி அவனிடம்) ‘கடிவாளம் பூட்டிய குதிரைகளைஉடைய அரசே!; திசைத்ததும் இல்லை - நான் திகைத்ததும் இல்லை; தீயோர் எனக்குவந்து இசைத்ததும் இல்லை - கொடியோர் எவரும் என்னிடம் வந்து வஞ்சனையாகச் சொன்னதும் இல்லை; முன் ஈந்த இவ் வரங்கள் - முன்னே (வாயாற்) கொடுத்த இவ்விரண்டு வரங்களை; இன்று தரின் கொள்வென் - இப்பொழுது கொடுத்தால் பெற்றுக்கொள்வேன்; அன்றேல்- அன்றிக் கொடுக்காமல் போனால்; வசைத்திறன் நின்வயின் நிற்க - பழியின் கூறுகள் நின்னிடம் நிலையாக இருக்குமாறு; மாள்வென் - இறப்பேன்;’ என்றாள் -. தயரதன் சொற்களால் அவனுக்குத் தான் கேட்ட வரங்களைத் தர விருப்பமில்லை என்று உணர்ந்தகைகேயி, ‘வரம்கொடுத்தால் வாழ்வேன்; இன்றேல் சாவேன்’ என்கிறாள். குசைப்பரியோய் -கருத்துடை யடைகொளி. யான் குதிரையைச் செலுத்தித் தேர் ஊர்ந்ததனால் அல்லவா நினக்குப்புகழ் உளதாயிற்று என்று குறிப்பித்தவாறு. கருத்துடை அடைகொளி அணி. 23 |