1527. | ‘மெய்யே; என்தன் வேர் அற நூறம் வினை நோக்கி நையாநின்றேன், நாவும் உலர்ந்தேன்; நளினம்போல் கையான், இன்று, என் கண் எதிர்நின்றும் கழிவானேல், உய்யேன்; நங்காய்! உன் அபயம் என் உயிர்’ என்றான். |
‘மெய்யே - ‘சத்திமே; என்தன் வேர் அற நூறும் - எனது மூலம் கெடும்படிஅழிக்கும்; வினைநோக்கி - எனது தீவினையை எண்ணி; நையா நின்றேன் - வருந்துகின்றேன்; நாவும் உலர்ந்தேன் - (உன்னோடு பேசிப் பேசி) நாக்கும் வறளப் பெற்றேன்; இன்று - இந்நாளில்; நளினம் போல் கையான் - தாமரை போலும் கைகளையுடைய இராமன்;என் கண் எதிர்நின்றும் கழிவானேல் - என் பார்வையினின்று நீங்கிக் காடு செல்வான்என்றால்; உய்யேன் - யான் பிழைத்திருக்கமாட்டேன்; நங்காய் - (ஆதலால்)பெண்ணே!; என் உயிர் உன் அபயம் - என்னுடைய உயிர் உன் அடைக்கலம் ஆகும்’; என்றான்-. தயரதன் இராமன் காடு சென்றால் தன் உயிர் நீங்கிவிடும் என்பதனைத் தெரிவித்துத் தன்னைக்காத்திடுமாறு கைகேயியை வேண்டினான். 37 |