தயரதன் வரம் தருதல் 1538. | ‘வீய்ந்தாளே இவ் வெய்யவள்’ என்னா, மிடல் வேந்தன் ‘ஈந்தேன்! ஈந்தேன்! இவ் வரம்; என் சேய் வனம் ஆள, மாய்ந்தே நான் போய் வான் உலகு ஆள்வென்; வசை வெள்ளம் நீந்தாய், நீற்தாய், நின் மகனோடும் நெடிது!’ என்றான். |
மிடல் வேந்தன் - வலிமை பொருந்திய தயரதன்; ‘இவ் வெய்யவன் வீய்ந்தாளேஎன்னா - இந்தக் கொடியவள் நாம் உடன்படாவிட்டால் இறுந்துவிடுவான் என்று கருதி;’ இவ் வரம் ஈந்தேன் ஈந்தேன் - இந்த வரங்களைக் கொடுத்தேன்,கொடுத்தேன்; என் சேய் வனம் ஆள - என் மகன் இராமன் காட்டை ஆள; நான் மாய்ந்துபோய் - யான் இறந்துபோய்; வான் உலகு ஆள்வென் - விண்ணுலகை ஆள்வேன்; நெடிது- நெடுங்காலம்; நின் மகனோடும் - (நீ) நின் பிள்ளையாகிய பரதனுடன் கூடி; வசை வெள்ளம் - பழியாகிய கடலை; நீந்தாய் நீந்தாய் - கடக்க முடியாமல் அதனுள்நீந்திக்கொண்டே இருப்பாய்;’ என்றான் -. தயரதன், வரம் தராவிட்டால் கைகேயி உயிரை விடுதல் உறுதி என்று அஞ்சி, ‘ஈந்தேன், ஈந்தேன்’ என்று விரைந்து கூறினான். இவ் அடுக்கு - தேற்றத் தையும் வெகுளியையும் காட்டுவது. வீய்ந்தாள்- துணிவு பற்றி இறந்த காலத்தில் கூளினார். 48 |