மகளிர் எழுதல் 1545. | ‘நாம விற் கை இராமனைத் தொழும் நாள் அடைந்த நமக்கு எலாம், காம விற்கு உடை கங்குல் மாலை கழிந்தது’ என்பது கற்பியா, தாம் ஒலித்தன பேரி; அவ் ஒலி, சாரல் மாரி தழங்கலால், மா மயில் குலம் என்ன, முன்னம் மலர்ந்து எழுந்தனர், மாதரே, |
நாமவில் கை இராமனை - பகைவர்க்கு அச்சத்தைத் தரும் கோதண்டம் ஏந்திய கையையுடையஇராமனை; தொழும் நாள்அடைந்த நமக்கு எலாம் - வணங்கும் நல்ல நாளைப் பெற்ற நம்அனைவர்க்கும்; காமன் விற்கு உடை கங்குல் மாலை - மன்மதனதுகரும்பு வில்லுக்குத் தோற்றுத்துன்புறுதற்கு இடமான இராப்பொழுது; கரித்தது- நீங்கியது; என்பது கற்பியா -என்பதைத் தெரிவித்துக்கொண்டு; பேரி ஒலித்தன - முரசங்கள் ஒலித்தன; அவ் ஒலி-அந்த ஓசை; சாரல் மாரி தழங்கலால்- மலைப் பக்கங்களில் தங்கிய மேகம்போல முழங்கியதால்; மாமயில்குலம் என்ன - பெரிய மயில்களின் கூட்டம் எழுந்தாற்போல; மாதர்- மகளிர்; முன்னம் மலர்ந்து எழுந்தனர் - தம் கணவர்எழுவதற்குமுன்னே முகம் மலர்ந்து துயிலினின்றும் எழுந்தனர்; நாமம் - அச்சம். கங்குல் மாலை - இருபெயரொட்டுப் பண்புத்தொகை. ஏ - ஈற்றசை. 55 |