ஊடிய மகளிர் கூடல் புரியாது பிரிதல் 1551. | ஆடகம் தரு பூண் முயங்கிட அஞ்சி அஞ்சி, அனந்தரால் ஏடு அகம் பொதி தார் பொருந்திட, யாம பேரி இசைத்தலால், சேடகம் புனை கோதை மங்கையர் சிந்தையில் செறி திண்மையால், ஊடல் கண்டவர் கூடல் கண்டிலர், நையும் மைந்தர்கள் உய்யவே. |
சேடகம் புனை கோதை மங்கையர் - சிறப்புப் பொருந்திய மலர்மாலையை அணிந்த மகளிர்; சிந்தையில் செறி திண்மையால் - மனத்தில் பொருந்திய வலிமையோடு; ஊடல் கண்டவர் - தத்தம் கணவன் மாரோடு புலந்தவர்கள்; ஆடகம் தரு பூண் முயங்கிட அஞ்சி அஞ்சி - (கணவன்மார்) தம் மார்பில் அணிந்தபொன்மாலையோடு தழுவுவதற்கு (மகளிர் மார்பில் ) உறுத்துமே என்று மிகவும் அச்சம் கொண்டு; அனந்தரால் - மனத்தடுமாற்றத்தோடு; ஏடு அகம் பொதி தார் புனைந்திட - பூக்களால்கட்டிய மாலையை அணிந்துகொள்ள; யாம பேரி இசைத்தலால் - அப்பொழுது கடையாமம் கழிந்ததைஅறிவிக்கும் முரசம் ஒலித்தலால்; நையும் மைந்தர்கள் உய்ய - மனைவியரின் ஊடலால்வருந்தும் கணவன்மார் அத்துன்பத்தினின்றும் தப்பும்படி; கூடல் கண்டிலர் - கூடி மகிழ்தலைப்பெற்றாரில்லை. மகளிரின் ஊடலைக் கணவன்மார் போக்குவதற்கு முன்னே யாமம் கழிந்ததால் அம்மகளிர் கூடல்பெறாமல் பிரிந்தனர். ஊடல் - கணவனும் மனைவியும் ஓர் அமளியில் இருக்கும்போது, கணவனிடத்துப்புலத்தற்கும் காரணம் இல்லாமல் இருந்தும், மிகுந்த காதலால் ஒரு காரணத்தைக் கற்பித்துக்கொண்டுமனைவி மனம் மாறுபட்டு நிற்றல். மைந்தர் உய்யக் கூட்டம் நிகழாமையால் மகளிரும் வாடினர் என்பது விளங்கும். 61 |