முடிசூட்டு விழாவுக்கு வருகை தாராதவர் 1565. | நலம் கிளர் பூமி என்னும் நங்கையை நறுந் துழாயின் அலங்கலான் புணரும் செல்வம் காண வந்து அடைந்திலாதார் - இலங்கையின் நிருதரே; இவ் ஏழ் உலகத்து வாழும் விலங்கலும், ஆசை நின்ற விடா மத விலங்கலேயால். |
நறுந் துழாய் அலங்கலான் - மணம் பொருந்திய துளசி மாலையைச் சூடும் திருமாலானஇராமபிரான்; நலம் கிளர் பூமி என்னும் நங்கையை - சிறப்பு மிக்க மண்மகள் என்னும்பிராட்டியை; புணரும் செல்வம் காண - சேருகின்ற பேற்றினைக் காண்பதற்கு; வந்து அடைந்திலாதார் - வந்து சேராதவர்; இலங்கையின் நிருதரே - இலங்கையில் உள்ளஅரக்கர் மட்டுமே ஆவர்; இவ் ஏர் உலகத்து வாழும் விலங்கலும் - அவரே யன்றி, இந்தஏழு உலகங்களிலும் உள்ள மலைகளும்; ஆசை நின்ற விடா மதம் விலங்கள் - எட்டுத்திக்குகளிலும் நீங்காமல் நின்ற மதம் பொழியும் யானைகளுமே ஆகும். அரக்கர்களும், அஃறிணைப் பொருள்களான மலைகளும், திசையானைகளும் மட்டுமே வரவில்லைஎன்பதால் பிறர் எல்லாரும் வந்தனர் என்பதாம். அரக்கர் பகையானும், மலைகள்,அசைதலின்மையானும், திசையானைகள் திசைகளைச் சுமத்தலைவிட்டு வரக்கூடாமையானும் வரவில்லை. நங்கை - குணங்களால் நிறைந்தவள். ஆல் - அசை. 75 |