1595. | வேத்தவை, முனிவரோடு, விருப்பொடு களிக்கும் மெய்ம்மை ஏத்து அவை இசைக்கும், செம் பொன் மண்டபம் இனிதின் எய்தான், ஒத்து அவை, உலகத்து எங்கும் உள்ளவை, உணர்ந்தார் உள்ளம் பூத்தவை, வடிவை ஒப்பான், - சிற்றவை கோயில் புக்கான். |
ஒத்து அவை - மறைகளையும்; உலகத்து எங்கும் உள்ளவை - உலகு எங்கும்இருக்கும் அறிவு நூல்களையும்; உணர்ந்தார் உள்ளம் பூத்தவை - நன்கு உணர்ந்தஞானிகளின் நெஞ்சத்தில் தோன்றுவனவாகிய; இராமபிரான்; வேத்தவை - அரசர் கூட்டம்;முனிவரோடு - முனிவர்களுடனே கூடி; விருப்பொடு களிக்கும் - அன்புடன்மகிழ்கின்ற; மெய்ம்மை ஏத்து அவை இசைக்கும் - உண்மையான கீர்த்திகளைப் பாடுகின்ற; செம் பொன் மண்டபம் - சிறந்த பொன்னால் ஆகிய மண்டபத்தினுள்ளே; இனிதின் எய்தான் - இனிமையாகப் புகாதவனாகி; சிற்றவை கோயில் புக்கான் -சிறிய தாயாகிய கைகேயியினுடைய மாளிகையில் புகுந்தான். அரசரும் முனிவரும்தன் கீர்த்தியைப் பாடிக்கொண்டிருக்கும் விழாமண்டபத்தில் நுழையாமல்இராமன் கைகேயியின் மாளிகையில் புகுந்தான். உலகத்து எங்கும்உள்ளவை - ஆறு அங்கங்கள், மீமாம்சை, புராணங்கள், தரும சாத்திரங்கள்முதலியன. 105 |