இராமனது தோற்றப் பொலிவு 1602. | இப் பொழுது, எம்ம னோரால் இயம்புதற்கு எளிதே? - யாரும் செப்ப அருங் குணத்து இராமன் திருமுகச் செவ்வி நோக்கின்; ஒப்பதே முன்பு பின்பு; அவ் வாசகம் உணரக் கேட்ட அப் பொழுது அலர்ந்த செந்தா மரையினை வென்றது அம்மா! |
யாரும் செப்ப அருங் குணத்து இராமன் - எவராலும் சொல்லுதற்கரியநற்பண்புகளையுடைய இராமபிரானது; திருமுகச் செவ்லி நோக்கின் - திருமுகத்தின் அழகைப்பார்த்தால்; எம்மனோரால் இயம்புதற்கு எளிதே - (அது) எம்மைப் போன்றவர்களால்சொல்லுவதற்கு எளிதோ? (அன்று); முன்பு பின்பு ஒப்பதே - கைகேயி சொன்னவற்றைக் கேட்பதற்கு முன்பும் அவற்றைக் கேட்டதற்குப் பின்பும் செந்தாமரையைப் போன்றிருந்தது; அவ்வாசகம் உணரக் கேட்ட அப்பொழுது - அந்தச் சொற்களைத் தெரியும்படி கேட்ட அந்தச்சொற்களைத் தெரியும்படி கேட்ட அந்தச் சமயத்தில்; அலர்ந்த செந்தாமரையினை -மலர்ந்த செந்தாமரை மலரினை; வென்றது - வென்றுவிட்டது. கைகேயியின் கொடி சொற்கள் இராமனைத் துன்புறுத்தாமல் இன்புறுத்தியதால் அப்பொழுது அவன்முகம் தாமரையின் அழகை வென்றது என்பதாம். எளிதே - ஏகாரம் எதிர்மறை. அம்மா - வியப்புஇடைச்சொல். இதனோடு, “மெய்த் திருப்பதம் மேவு” என்ற போதினம் “இத் திருக் துறத்துஏகு” என்ற போதினும், சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை, ஒத்திருக்கும் முகத்தினைஉன்னுவாள்” (5088) என்னும் சுந்தர காண்டப் பாடல் ஒப்பு நோக்கத்தக்கது. 112 |