1628.‘மா தவர்க்கு வழிபாடு இழைத்து, அரும்
போதம் முற்றி, பொரு அரு விஞ்சைகள்
ஏதம் அற்றன தாங்கி, இமையவர்
காதல் பெற்று, இந் நகர் வரக் காண்டியால்,

     ‘மாதவர்க்கு வழிபாடு இயற்றி - சிறந்த முனிவர்களுக்குப் பணி
விடைகளைச் செய்து;அரும்  போதம் முற்றி - (அவரால்) பெறுதற்கு
அரிய ஞானம் நிரம்பப் பெற்று;  பொருஅரு விஞ்சைகள் - ஒப்பற்ற
வித்தைகள்; ஏதம் அற்றன - குற்றம் இல்லாதனவற்றை; தாங்கி - பெற்று;
இமையவர் காதல் பெற்று - தேவர்களின் அன்பை அடைந்து; இந்நகர்
வரக் காண்டி-
(யான்) இந்நகரத்துக்குத் திரும்பி வருதலைப் பார்ப்பாயாக.’

     போதம் என்பது வீடுபேற்றிற்குரியதாகிய பரமஞானம். பின்னர்
அகத்தியர் முதலியமுனிவர்களால் இவ் அரும் போதம்  இராமனுக்குக்
கிடைக்கிறது. இராமவணாதி வதத்தால்தேவர்களின் அன்பையும் இராமன்
பெறுகிறான் என்பது இங்கே குறிப்பிற் புலப்படும். ‘ஆல்’ஈற்றசை. தேற்றம்
என்பதும் பொருந்தும்.                                          23