1632.‘அவனி காவல் பரதனது ஆகுக;
இவன் இஞ்ஞாலம் இறந்து, இருங் கானிடைத்
தவன் நிலாவகை காப்பென், தகவினால்
புவனி நாதன்- தொழுது’ என்று, போயினாள்.

     ‘அவனி காவல் பரதனது ஆகுக - இந்த உலகத்தை ஆளும்
அரசாட்சி பரதனுடையதுஆகட்டும்;  இவன் - இராமன்;  இஞ்ஞாலம்
இறந்து -
இக் கோசல நாட்டைத்தாண்டி; இருங் கானிடை - பெரிய
காட்டிடத்தே;  தவன் நிலாவகை - தவத்தில்நில்லாதபடி; தகவினால் -
நடுவு நிலைமையால்;  புவனி நாதன் தொழுது - தயரதனைவணங்கி
வேண்டி; காப்பென் - ‘காப்பாற்றுவேன்; என்று போயினாள் - என்று
(தயரதன் இருக்கும் கைகேயி அரண்மனைக்கு) சென்றாள்.

     முறைப்படி அரசன்பால் வேண்டி  அவன் இட்ட ஆணையே மாற்ற
எண்ணுதலின் ‘தகவினால்’என்றார்.  தவம்,  தவன் என்றமைந்தது ஈற்றுப்
போலி.                                                      27