1638.‘மின் நின்றனைய மேனி,
     வெளிதாய்விட நின்றதுபோல்
உன்னும் தகைமைக்கு அடையா உறு நோய்
     உறுகின்று உணரான்;
என் என்று உரையான்; என்னே?
     இதுதான் யாது என்று அறியேன்;
மன்னன் தகைமை காண
     வாராய்; மகனே!’ என்னும்.

     ‘மகனே! - இராமனே;  மின் நின்றனைய மேனி - மின்னல்
மறையாது ஒருபடித்தாக நின்றால் ஒத்த ஒளிவீசும் உடம்பு;  வெறிதாய்
விட நின்றது  போல்  -
உள்ளே உயிரற்றுக் கிடப்பது போல;  உன்னும்
தகைமைக்கு அடையா உறுநோய் -
நினைக்கும்தன்மைக்கும் வாராத
பெரும் பிணியை;  உறுகின்ற உணரான் - அடைகின்றதையும்  உணர
முடியாதவனாய்;  என்என்று உரையான் - அழுகின்ற என்னைப் பார்த்து
ஏன் புலம்புகிறாய் என்றும் சொல்லாதவனாய்உள்ளான் உன் தந்தை;
என்னே! - என்ன காரணமோ; இதுதான் யாது என்று அறியேன் -இது
எதனால் ஆகியது  என்று அறியாதவளாக இருக்கின்றேன்;  மன்னன்
தகைமை காண -
அரசனாய் தயரதனது நிலைமையைப் பார்க்க;
வாராய்’ -  வருவாயாக;  என்னும் -

     உணர்வு இழந்து மூர்ச்சித்துக் கிடக்கிற மன்னனைப் பார்த்து அவன்
நிலை காண வரும்படிமகனை அழைத்துப் புலம்பகிகிறாள் கோசலை.    33