1643. | சீதப் பனி நீர் அளவி, திண் கால் உக்கம் மென் கால் போதத்து அளவே தவழ்வித்து, இன்சொல் புகலாநின்றான்; ஓதக் கடல் நஞ்சு அனையாள் உரை நஞ்சு ஒருவாறு அவிய, காதல் புதல்வன் வெயரே புகல்வான் உயிரும் கண்டான் |
(இவ்வாறு வேண்டி மேலும்) சீதப் பனிநீர் அளவி - குளிர்ச்சியை உடைய பனிநீரைக்கலந்து; திண்கால் உக்கம் - வலிய கைப்பிடி உடைய விசிறியினது; மென்கால் -மெல்லிய காற்றை; போதத்து அளவே தவழ்வித்து - மூர்ச்சை தெளிந்து அறிவுண்டாகும்அளவில் நிகழச் செய்து; இன்சொல் புகலாநின்றான் - இனிய சொற்களைச்சொல்லுகின்றவன்; ஒதக் கடல் நஞ்சு அனையாள் உரை நஞ்சு ஒரு வாறு அவிய - கடலின்கண்எழுந்த விடம் போன்ற கைகேயியின் வரம் என்னும் வார்த்தையாகிய விடம் ஓரளவுக்கு நீங்க; காதற் புதல்வன் - அன்பு மகனாகிய இராமனது; பெயரே புகல்வான் - பெயரையேசொல்லிக் கொண்டிருக்கும் தயரதனது; உயிரும் கண்டான் - உயிரையும் பார்த்தான். முனிவன் மென்காற்று வீசி, இன்சொல், கூறி, சோகம், தணிவிக்க, சற்றே மூர்ச்சைதெளிந்து ‘இராமா, இராமா’ என்று பிதற்றுகின்ற தயரதனுக்கு உயிர்ப்பு நிலை வந்தது; அதுகண்டான் என்பதாம். 38 |