1663. | ‘பொன்னின் முன்னம் ஒளிரும் பொன்னே! புகழின் புகழே! மின்னின் மின்னும் வரிவில் குமரா! மெய்யின் மெய்யே! என்னின் முன்னம் வனம் நீ அடைதற்கு, எளியேன் அல்லேன்; உன்னின் முன்னம் புகுவேன், உயர் வானகம், யான்' என்றான். |
‘பொன்னின் முன்னம் ஒளிரும் பொன்னே! - பொன்னுக்கு மேற்பட்டுப்பிரகாசிக்கின்ற பொன் போன்றவனே; புகழின் புகழே! - புகழுக்குப் புகழானவனே!; மின்னில் மின்னும் வரிவில் குமரா! - மின்னலைப் போல் விட்டு விளங்கும் கட்டமைந்தவில்லை உடைய குமரனே; மெய்யின் மெய்யே! - உண்மையின் நிலைபேறே; என்னின் முன்னம் - எனக்கு முற்பட்டு; நீ வனம் அடைதற்கு- நீ காடு புகுவதற்கு; யான்எளியேன் அல்லேன் - நான் எளிமை உடையவன் அல்லன்; உன்னின் முன்னம் - உனக்குமுன்னால்; உயர் வானகம் புகுவேன்!- உயர்ந்த விண்ணை அடைவேன்;' என்றான்-. ‘கானகமே மிக விரும்பி நீ துறந்த வள நகரைத் துறந்து நானும், வானகமே மிக விரும்பிப்போகின்றேன். மனுகுலத்தார் தங்கள் கோவே' என்ற (திவ்ய.738) குலசேகராழ்வார் பாசுரமும்காண்க. 58 |