1664.‘நெகுதற்கு ஒத்த நெஞ்சும்,
     நேயத்தாலே ஆவி
உகுதற்கு ஒத்த உடலும்,
     உடையேன்; உன்போல் அல்லேன்;
தகுதற்கு ஒத்த சனகன்
     தையல் கையைப் பற்றிப்
புகுதக் கண்ட கண்ணால்,
     போகக் காணேன்' என்றான்.

     ‘நெகுதற்கு ஒத்த நெஞ்சும் - உருகுதற்குப் பொருந்திய மனமும்;
நேயத்தாலே-அன்பினால்; ஆவி உகுதற்கு ஒத்த உடலும் உடையேன்-
உயிர் விடுதற்குப் பொருந்தியஉடலையும் உடையவன் யான்;  உன்போல்
அல்லேன் -
உன்னைப்போல் வன்மனமும், வலியஉடலும்
உடையேனல்லேன்;  தகுதற்கு ஒத்த சனகன் தையல் கையைப் பற்றி -
தகுதிக்கு ஒத்தசனக ராசனுக்கு மகளாகிய சானகியின் கையைப் பிடித்துக்
கொண்டு;  புகுதக் கண்ட கண்ணால் -அயோத்தி நகருக்குள் (நீ)
புகுவதைப் பார்த்த கண்களால்; போகக் காணேன்'-(அயோத்தியைவிட்டுக்)
காடு செல்வதைக் காண மாட்டேன்;'  என்றான்-.

     ‘ஏ'  காரம் அசை.  தன் நிலை இவ்வாறாகவும்  இராமன் வனமேத்
துணிந்தமை பற்றி‘உன்போல் அல்லேன்'  என்று அவனை வன் மனமும்
வல் உடலும் உடையவனாகக் குறித்தான்தயரதன்.                   59