1664. | ‘நெகுதற்கு ஒத்த நெஞ்சும், நேயத்தாலே ஆவி உகுதற்கு ஒத்த உடலும், உடையேன்; உன்போல் அல்லேன்; தகுதற்கு ஒத்த சனகன் தையல் கையைப் பற்றிப் புகுதக் கண்ட கண்ணால், போகக் காணேன்' என்றான். |
‘நெகுதற்கு ஒத்த நெஞ்சும் - உருகுதற்குப் பொருந்திய மனமும்; நேயத்தாலே-அன்பினால்; ஆவி உகுதற்கு ஒத்த உடலும் உடையேன்- உயிர் விடுதற்குப் பொருந்தியஉடலையும் உடையவன் யான்; உன்போல் அல்லேன் - உன்னைப்போல் வன்மனமும், வலியஉடலும் உடையேனல்லேன்; தகுதற்கு ஒத்த சனகன் தையல் கையைப் பற்றி - தகுதிக்கு ஒத்தசனக ராசனுக்கு மகளாகிய சானகியின் கையைப் பிடித்துக் கொண்டு; புகுதக் கண்ட கண்ணால் -அயோத்தி நகருக்குள் (நீ) புகுவதைப் பார்த்த கண்களால்; போகக் காணேன்'-(அயோத்தியைவிட்டுக்) காடு செல்வதைக் காண மாட்டேன்;' என்றான்-. ‘ஏ' காரம் அசை. தன் நிலை இவ்வாறாகவும் இராமன் வனமேத் துணிந்தமை பற்றி‘உன்போல் அல்லேன்' என்று அவனை வன் மனமும் வல் உடலும் உடையவனாகக் குறித்தான்தயரதன். 59 |