1673.‘மறந்தான் நினைவும் உயிரும்,
     மன்னன்’ என்ன மறுகா,
‘இறந்தான் கொல்லோ அரசன்?’
     என்னா, இடர் உற்று அழிவாள்,
‘துறந்தான் மகன் முன் எனையும்;
     துறந்தாய் நீயும்; துணைவா!
அறம்தான் இதுவோ? ஐயா!
     அரசர்க்கு அரசே!’ என்றாள்.

     மன்னன்நினைவும் உயிரும் மறந்தான்'  என்ன மறுகா - அரசன்
ஞாபகமும்  உயிரும்மறக்கப்பெற்றான் என்ற கருதி மனம்
கலங்கி; 
‘அரசன் இறந்தான் கொல்லோ’  என்னா  இடர் உற்று
அழிவாள்
- அரசன் இறந்தான் போலும் என்று துன்பமுற்று வருந்தும்
கோசலை;’ மகன் முன்எனையும் துறந்தான்’ -மகனாகிய இராமனும்
முன்னால் என்னைக் கைவிட்டான்;  ‘நீயும்துறந்தாய்’-  கணவனாகிய
நீயும் என்னைக் கைவிட்டாய்;  துணைவா! -என்துணைவனே!;  ஐயா! -
ஐயனே!;  அரசர்க்கு அரசே!  -இராச இராசனே!;  அறம்தான்
இதுவோ'  -
அறம்  என்பது  இதுதானோ;  என்றாள்-.

     தாயை மகன் துறப்பதும், மனைவியைக் கணவன் துறப்பதும்தான்
தருமமா? என்று வினாவிப்புலம்பினாள் - ‘கொல’ ஐயம், ‘ஓ’ வினாப்
பொருளில் வந்தது. ‘எனையும்’ என்பதிலுள்ள உம்மை‘மகன்’ என்பதனோடு
கூட்டிப் பொருள் கொள்ளப்பட்டது.                              68