1647.‘மெய்யின் மெய்யே! உலகின்
     வேந்தர்க்கு எல்லாம் வேந்தே!
உய்யும்வகை நின் உயிரை
     ஓம்பாது இங்ஙன் தேம்பில்,
வையம் முழுதும் துயரால்
     மறுகும்; முனிவனுடன் நம்
ஐயன் வரினும் வருமால்;
     அயரேல்; அரசே!' என்றாள்.

     ‘மெய்யின் மெய்யே! - சத்தியத்தின் சத்தியமே; உலகின் வேந்தர்க்
கெல்லாம் வேந்தே! -
உலகில் உள்ள அரசர்க்கெல்லாம் அரசனே;  நின்
உயிரை உய்யும் வகை ஓம்பாது -
உன்னுடைய உயிரைப் பிழைக்கும்
வகையில்பாதுகாக்காமல்;  இங்ஙன் தேம்பில் - இவ்வாறு வாடினால்;
வையம் முழுதும்  துயரால்மறுகும் - இவ்வுலகம் முழுதும் துன்பத்தால்
கலங்கிச் சுழலும்; அரசே! - ; நம் ஐயன் -நம் மகன்;  முனிவனுடன்
வரினும் வரும் -
வசிட்டனுடன் (கான் ஏகாது) திரும்பி வந்தாலும்
வருவான்;  அயரேல் - சோர்வடையாதே;’  என்றாள் -

     உலகத்துக்காக வாழ்ந்த நீ துன்புற்றால்  இப்பொழுது  உலகமும்
துன்புறும்.  உனக்காகஇல்லாவிடினும் உலக மக்களுக்காகத் துன்பத்தில்
துவளாமல் இருக்க என வேண்டினாள் - ‘வரினும்வரும்’ என்பது  ஐயம்.
வருவது  உறுதியில்லை என்பது அவள் அறிந்தபடியைப் புலப்படுத்தி
நின்றது. ‘ஆல்' அசை.                                         69