1680. | ‘புக்குப் பெரு நீர் நுகரும் பொரு போதகம் என்று, ஒலிமேல் கைக்கண் கணை சென்றது அலால், கண்ணின் தெரியக் காணேன், அக் கைக் கரியின் குரலே அன்ற ஈது’ என்ன வெருவா, ‘மக்கள் - குரல்ழு என்று அயர்வேன், மனம் நொந்து, அவண் வந்தனெனால். |
‘(அது கேட்டு) புக்கு - ஆற்றில் நுழைந்து; பெரு நீர் நுகரும் - மிகுதியானநீரைக் குடிக்கும்; பொரு போதகம் என்று - போரிடும் யானை என்று கருதி (அவ்ஓசைவழியே); கைக்கண் கணை சென்றது அலால் - கையின்கண் இருந்த அம்பு சென்றதேஅல்லாமல்; கண்ணின் தெரியக் காணேன் - கண்ணால் நன்கு விளங்கப் பார்க்காத நான்; (அலறும் ஒலி வந்தவுடன்); ‘ஈது அக் கைக்கரியின் குரல் அன்று’ என்ன வெருவா - இதுநாம் நினைத்த துதிக்கை உடைய யானையின் ஒலி அன்று என்று கருதிப் பயந்து; ‘மக்கள் குரல்’ என்று அயர்வேன் - மனிதக் குரல் என்று கருதிச் சோர்ந்து; மனம் நொந்து -மனம் வருந்தி; அவண் வந்தனென் - நீர் முகக்கும் துறைக்கு வந்தேன்.’ விழுந்து அலறிய போதுதான் மனிதக் குரல் என்று வேறுபாடு அறிந்தேன். நடுங்கினேன்என்றான். ‘ஆல்ழு அசை. 75 |