1680. ‘புக்குப் பெரு நீர் நுகரும்
     பொரு போதகம் என்று, ஒலிமேல்
கைக்கண் கணை சென்றது அலால்,
     கண்ணின் தெரியக் காணேன்,
அக் கைக் கரியின் குரலே
     அன்ற ஈது’ என்ன வெருவா,
‘மக்கள் - குரல்ழு என்று அயர்வேன்,
     மனம் நொந்து, அவண் வந்தனெனால்.

     ‘(அது கேட்டு) புக்கு - ஆற்றில் நுழைந்து;  பெரு நீர் நுகரும் -
மிகுதியானநீரைக் குடிக்கும்; பொரு போதகம் என்று - போரிடும் யானை
என்று கருதி (அவ்ஓசைவழியே); கைக்கண் கணை சென்றது  அலால் -
கையின்கண் இருந்த அம்பு சென்றதேஅல்லாமல்; கண்ணின் தெரியக்
காணேன் -
கண்ணால் நன்கு விளங்கப் பார்க்காத நான்; (அலறும் ஒலி
வந்தவுடன்); ‘ஈது அக் கைக்கரியின் குரல் அன்று’ என்ன வெருவா -
இதுநாம் நினைத்த துதிக்கை உடைய யானையின் ஒலி அன்று என்று
கருதிப் பயந்து;  ‘மக்கள் குரல்’ என்று அயர்வேன் - மனிதக் குரல்
என்று கருதிச் சோர்ந்து;  மனம் நொந்து -மனம் வருந்தி;  அவண்
வந்தனென் -
நீர் முகக்கும்  துறைக்கு வந்தேன்.’

     விழுந்து அலறிய போதுதான் மனிதக் குரல் என்று வேறுபாடு
அறிந்தேன். நடுங்கினேன்என்றான். ‘ஆல்ழு அசை.                   75