1685. | ‘ “ஐயா! யான் ஓர் அரசன்; அயோத்தி நகரத்து உள்ளேன்; மை ஆர் களபம் துருவி, மறைந்தே வதிந்தேன், இருள்வாய்; பொய்யா வாய்மைப் புதல்வன் புனல் மொண்டிடும் ஓதையின்மேல், கை ஆர் கணை சென்றதுஅலால், கண்ணின் தெரியக் காணேன். |
‘ஐயா! - சுவாமி; யான் அயோத்தி நகரத்து உள்ளேன் ஓர் அரசன் -அயோத்தி நகரத்தில் உள்ள ஓர் அரசனாவேன்; மைஆர் களபம் துருவி மறைந்து வதிந்தேன்- கருமை பொருந்திய யானையைத் தேடி மறைந்து தங்கியிருந்தேன்; இருள்வாய் -இருட்டில்; பொய்யா வாய்மைப் புதல்வன் - சத்திய வாக்கினை உடைய உங்கள் மகன்; புனல் மொண்டிடும் ஓதையின்மேல் - நீரை முகக்கும் ஓசையினிடமாக; கை ஆர் கணைசென்றது அலால் - கையில் உள்ள அம்பு சென்றதே அல்லாமல்; கண்ணில் தெரியக்காணேன்’ - (நீர் முகப்பாரைக்) கண்ணில் விளங்கப் பார்த்தறியேன்’ ஆயினேன். ஓசையின் மூலம் அம்பு எய்தேன். பார்த்து எய்தேனில்லை என்பதால் அறிவுபூர்வமாகநிகழ்ந்த கொலை அன்று என்றானாம். ‘மறைந்தே’ ‘ஏ’ காரம் தேற்றம். 80 |